- Joined
- Apr 8, 2022
- Messages
- 845
- Points
- 133
சிந்தனை சிற்பியாய் வந்தவளே
என் சிந்தைக்கு பணியும் தந்தவளே
நீ தரும் பணிகள் என் திறனை
மெருகேற்றிட வந்ததாய் என்னுகிறேன்
திருக்குறள் எழுத நீ சொல்ல - என்னை
வள்ளுவன் போல நான் உணர்ந்தேன்
கவிதை ஒன்றை நீ கேட்க
ஒரு கம்பனாய் மாறி எழுதுகிறேன்
கட்டிளம் காளை நானுமல்ல
ஒரு கவர்ச்சி நாயகன் தானுமல்ல
இருப்பினும் நீ தரும் பணிகளிலே
என் இளமை திரும்புதே எப்படியோ?
ராட்டினம் போல சுற்றுகிறேன்
நான் காற்றினில் வீணை மீட்டுகிறேன்
என்னை ரசித்திடும் உனக்காக
இங்கே எட்டாம் அதிசயம் நிகழ்த்துகிறேன்
உனக்கென வண்ணத்தில் கவி எழுத
வண்ணத்து பூச்சி நான் பிடித்தேன்
அந்நிரம் போதாது என்பதினால்
ஒரு வானவில்லை கட்டி இழுத்து வந்தேன்
இத்தனை சிரமத்தில் இக்கவியை
ஏன் எழுதுகிறாய் என நீ கேட்டால்
அத்துணை அன்புதான் உன்னிடத்தில்
நான் கொண்டிருக்கேன் என கூறிடுவேன்
சொற்களில் சுவை பல இருக்குமின்கே
ஆனால் உன் சுவை சொல்ல ஓர் சொல்லுமில்லை
விளையாட்டு பிள்ளையாய் நீ இருக்க
உன் நெஞ்சத்தில் துளி கூட கள்ளமில்லை
ரகசிய சிநேகிதி உன்னையன்றி
என்னை ரசிப்பவர் யாரிங்கே சொல்லடியே
அதிசயம் போல இங்கு வந்தவளே
என் ஆயுள் முழுதும் நீ வேணுமடி
உன் பெயர் தெரியவே மகிழ்ச்சியினை
என் உள்ளமும் அடைந்திட எத்தனிக்க
அண்ணன் என்று நீ அழைத்திடவே
அக்கினியில் என் மனம் வேகிறதே
அன்பு தோழி @Goodie கவிதை
என் சிந்தைக்கு பணியும் தந்தவளே
நீ தரும் பணிகள் என் திறனை
மெருகேற்றிட வந்ததாய் என்னுகிறேன்
திருக்குறள் எழுத நீ சொல்ல - என்னை
வள்ளுவன் போல நான் உணர்ந்தேன்
கவிதை ஒன்றை நீ கேட்க
ஒரு கம்பனாய் மாறி எழுதுகிறேன்
கட்டிளம் காளை நானுமல்ல
ஒரு கவர்ச்சி நாயகன் தானுமல்ல
இருப்பினும் நீ தரும் பணிகளிலே
என் இளமை திரும்புதே எப்படியோ?
ராட்டினம் போல சுற்றுகிறேன்
நான் காற்றினில் வீணை மீட்டுகிறேன்
என்னை ரசித்திடும் உனக்காக
இங்கே எட்டாம் அதிசயம் நிகழ்த்துகிறேன்
உனக்கென வண்ணத்தில் கவி எழுத
வண்ணத்து பூச்சி நான் பிடித்தேன்
அந்நிரம் போதாது என்பதினால்
ஒரு வானவில்லை கட்டி இழுத்து வந்தேன்
இத்தனை சிரமத்தில் இக்கவியை
ஏன் எழுதுகிறாய் என நீ கேட்டால்
அத்துணை அன்புதான் உன்னிடத்தில்
நான் கொண்டிருக்கேன் என கூறிடுவேன்
சொற்களில் சுவை பல இருக்குமின்கே
ஆனால் உன் சுவை சொல்ல ஓர் சொல்லுமில்லை
விளையாட்டு பிள்ளையாய் நீ இருக்க
உன் நெஞ்சத்தில் துளி கூட கள்ளமில்லை
ரகசிய சிநேகிதி உன்னையன்றி
என்னை ரசிப்பவர் யாரிங்கே சொல்லடியே
அதிசயம் போல இங்கு வந்தவளே
என் ஆயுள் முழுதும் நீ வேணுமடி
உன் பெயர் தெரியவே மகிழ்ச்சியினை
என் உள்ளமும் அடைந்திட எத்தனிக்க
அண்ணன் என்று நீ அழைத்திடவே
அக்கினியில் என் மனம் வேகிறதே
அன்பு தோழி @Goodie கவிதை