Aiyaiioo 7 Peru
Well-known member
- Joined
- Apr 9, 2022
- Messages
- 137
- Points
- 63
ஓரப் பார்வைகளில்
தேடுவதில்லை அவளை
ஒரு பூ கூட
அவனைப் பார்த்து சிரிப்பதில்லை
இமைகளில் எந்த
படபடப்பும் இல்லை
இதயம்
வேகமாய்த் துடிப்பதில்லை
இசை
கிறங்க வைப்பதில்லை
இடியும் மின்னலும்
பயம் கூட்டுவதில்லை
எப்பேர்பட்ட மழையும்
மனம் நனைப்பதில்லை
எந்த நிழலும்
அவனுக்கு சுகமில்லை
எரிக்கும் வெயிலும்
அவனை சுடுவதில்லை
சிரிக்கும்
சிறு குழந்தையை
பார்த்து மயங்குவதில்லை
சில்லென்று
வீசும் தென்றல்
சிறு மனம் தொடுவதில்லை
தனிமைகளில்
உலகினை மறக்கின்றான்
தான்
யார் என்ற
நிலையினைத் துறக்கின்றான்
பகல்
பொழுதுகளை
அந்த காலத்திற்கு
பணயம் வைக்கின்றான்
இரவு நேரங்களை
பகலாக்கிக் கொள்கின்றான்
எந்த
உணர்வுகளும் அற்றவனாய்
இந்த உலகினில் வாழ்கின்றான்
சீறிப் பாயும்
நினைவலைகளையும்
அதன்
ஒலிகூட கேட்காதவாறு
தூர நின்றே பார்க்கின்றான்
சிலிர்க்கும்
காதல் கணங்களையும்
கண்ணீர் வறண்ட
விழிகளின் திரையினில்
காணலாக மாற்றி வைத்தான்
சிதையினில்
எரிந்து சாம்பலாகிப் போன
மரமாகிப் போனது அவனது தேகம்
உயிர்
அறுந்த உடல்..
செதுக்கி
வைத்த சிலை..
இவை
இரண்டிற்கும்
வேறுபாடு அற்றவனாய்
வெறும்
உயிருள்ள சிலையாக
உலகினில் உலாவுகின்றான்
அந்த
காலனிடம்
தன் காதலியை
பறிகொடுத்த ஆண் ஒருத்தன்..!!
தேடுவதில்லை அவளை
ஒரு பூ கூட
அவனைப் பார்த்து சிரிப்பதில்லை
இமைகளில் எந்த
படபடப்பும் இல்லை
இதயம்
வேகமாய்த் துடிப்பதில்லை
இசை
கிறங்க வைப்பதில்லை
இடியும் மின்னலும்
பயம் கூட்டுவதில்லை
எப்பேர்பட்ட மழையும்
மனம் நனைப்பதில்லை
எந்த நிழலும்
அவனுக்கு சுகமில்லை
எரிக்கும் வெயிலும்
அவனை சுடுவதில்லை
சிரிக்கும்
சிறு குழந்தையை
பார்த்து மயங்குவதில்லை
சில்லென்று
வீசும் தென்றல்
சிறு மனம் தொடுவதில்லை
தனிமைகளில்
உலகினை மறக்கின்றான்
தான்
யார் என்ற
நிலையினைத் துறக்கின்றான்
பகல்
பொழுதுகளை
அந்த காலத்திற்கு
பணயம் வைக்கின்றான்
இரவு நேரங்களை
பகலாக்கிக் கொள்கின்றான்
எந்த
உணர்வுகளும் அற்றவனாய்
இந்த உலகினில் வாழ்கின்றான்
சீறிப் பாயும்
நினைவலைகளையும்
அதன்
ஒலிகூட கேட்காதவாறு
தூர நின்றே பார்க்கின்றான்
சிலிர்க்கும்
காதல் கணங்களையும்
கண்ணீர் வறண்ட
விழிகளின் திரையினில்
காணலாக மாற்றி வைத்தான்
சிதையினில்
எரிந்து சாம்பலாகிப் போன
மரமாகிப் போனது அவனது தேகம்
உயிர்
அறுந்த உடல்..
செதுக்கி
வைத்த சிலை..
இவை
இரண்டிற்கும்
வேறுபாடு அற்றவனாய்
வெறும்
உயிருள்ள சிலையாக
உலகினில் உலாவுகின்றான்
அந்த
காலனிடம்
தன் காதலியை
பறிகொடுத்த ஆண் ஒருத்தன்..!!