What's new

வெறுப்பு

Aiyaiioo 7 Peru

Well-known member
Joined
Apr 9, 2022
Messages
137
Points
63
ஓரப் பார்வைகளில்
தேடுவதில்லை அவளை

ஒரு பூ கூட
அவனைப் பார்த்து சிரிப்பதில்லை

இமைகளில் எந்த
படபடப்பும் இல்லை

இதயம்
வேகமாய்த் துடிப்பதில்லை

இசை
கிறங்க வைப்பதில்லை

இடியும் மின்னலும்
பயம் கூட்டுவதில்லை

எப்பேர்பட்ட மழையும்
மனம் நனைப்பதில்லை

எந்த நிழலும்
அவனுக்கு சுகமில்லை

எரிக்கும் வெயிலும்
அவனை சுடுவதில்லை

சிரிக்கும்
சிறு குழந்தையை
பார்த்து மயங்குவதில்லை

சில்லென்று
வீசும் தென்றல்
சிறு மனம் தொடுவதில்லை

தனிமைகளில்
உலகினை மறக்கின்றான்

தான்
யார் என்ற
நிலையினைத் துறக்கின்றான்

பகல்
பொழுதுகளை
அந்த காலத்திற்கு
பணயம் வைக்கின்றான்

இரவு நேரங்களை
பகலாக்கிக் கொள்கின்றான்

எந்த
உணர்வுகளும் அற்றவனாய்
இந்த உலகினில் வாழ்கின்றான்

சீறிப் பாயும்
நினைவலைகளையும்
அதன்
ஒலிகூட கேட்காதவாறு
தூர நின்றே பார்க்கின்றான்

சிலிர்க்கும்
காதல் கணங்களையும்
கண்ணீர் வறண்ட
விழிகளின் திரையினில்
காணலாக மாற்றி வைத்தான்

சிதையினில்
எரிந்து சாம்பலாகிப் போன
மரமாகிப் போனது அவனது தேகம்

உயிர்
அறுந்த உடல்..
செதுக்கி
வைத்த சிலை..

இவை
இரண்டிற்கும்
வேறுபாடு அற்றவனாய்
வெறும்
உயிருள்ள சிலையாக
உலகினில் உலாவுகின்றான்

அந்த
காலனிடம்
தன் காதலியை
பறிகொடுத்த ஆண் ஒருத்தன்..!!
 

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
ஓரப் பார்வைகளில்
தேடுவதில்லை அவளை

ஒரு பூ கூட
அவனைப் பார்த்து சிரிப்பதில்லை

இமைகளில் எந்த
படபடப்பும் இல்லை

இதயம்
வேகமாய்த் துடிப்பதில்லை

இசை
கிறங்க வைப்பதில்லை

இடியும் மின்னலும்
பயம் கூட்டுவதில்லை

எப்பேர்பட்ட மழையும்
மனம் நனைப்பதில்லை

எந்த நிழலும்
அவனுக்கு சுகமில்லை

எரிக்கும் வெயிலும்
அவனை சுடுவதில்லை

சிரிக்கும்
சிறு குழந்தையை
பார்த்து மயங்குவதில்லை

சில்லென்று
வீசும் தென்றல்
சிறு மனம் தொடுவதில்லை

தனிமைகளில்
உலகினை மறக்கின்றான்

தான்
யார் என்ற
நிலையினைத் துறக்கின்றான்

பகல்
பொழுதுகளை
அந்த காலத்திற்கு
பணயம் வைக்கின்றான்

இரவு நேரங்களை
பகலாக்கிக் கொள்கின்றான்

எந்த
உணர்வுகளும் அற்றவனாய்
இந்த உலகினில் வாழ்கின்றான்

சீறிப் பாயும்
நினைவலைகளையும்
அதன்
ஒலிகூட கேட்காதவாறு
தூர நின்றே பார்க்கின்றான்

சிலிர்க்கும்
காதல் கணங்களையும்
கண்ணீர் வறண்ட
விழிகளின் திரையினில்
காணலாக மாற்றி வைத்தான்

சிதையினில்
எரிந்து சாம்பலாகிப் போன
மரமாகிப் போனது அவனது தேகம்

உயிர்
அறுந்த உடல்..
செதுக்கி
வைத்த சிலை..

இவை
இரண்டிற்கும்
வேறுபாடு அற்றவனாய்
வெறும்
உயிருள்ள சிலையாக
உலகினில் உலாவுகின்றான்

அந்த
காலனிடம்
தன் காதலியை
பறிகொடுத்த ஆண் ஒருத்தன்..!!
காலம் அனைத்து காயங்களையும் ஆற்றும் , பெரியோர் சொல் 😌😌
Happy time 🍬🍬
 
Top