- Joined
- Oct 19, 2022
- Messages
- 699
- Points
- 113
அவள்
''ஷேம் ஷேம் பப்பி ஷேம்'' என்று சின்ன வயதில் ஓடியவள்,
எட்டு வயதில் முழங்காலுக்கு மேலான காயத்தை அப்பாவுக்கு காட்ட மறுத்தவள்,
உடை மாற்றம் அறைக்குள் அம்மாவைக்கூட அனுமதியாதவள்,
எக்ஸ்ரே அறையிலிருந்து ஓடியவள்,
அருவிகளில் ஒரு பொழுதும் குளிக்காதவள்,
வெளிச்சத்தில் கணவனுடன் கூடச் சம்மதியாதவள்,
மரித்தலுக்குப் பின் அம்மணமாய்க் கிடக்கிறாள்,
மார்ச்சுவரியில் ஈக்களும் கண்களும் ''அங்கேயே'' மொய்க்க,
இப்படியாகுமெனில் ''அவள்'' தற்கொலையே செய்திருக்கமாட்டாள்...
''ஷேம் ஷேம் பப்பி ஷேம்'' என்று சின்ன வயதில் ஓடியவள்,
எட்டு வயதில் முழங்காலுக்கு மேலான காயத்தை அப்பாவுக்கு காட்ட மறுத்தவள்,
உடை மாற்றம் அறைக்குள் அம்மாவைக்கூட அனுமதியாதவள்,
எக்ஸ்ரே அறையிலிருந்து ஓடியவள்,
அருவிகளில் ஒரு பொழுதும் குளிக்காதவள்,
வெளிச்சத்தில் கணவனுடன் கூடச் சம்மதியாதவள்,
மரித்தலுக்குப் பின் அம்மணமாய்க் கிடக்கிறாள்,
மார்ச்சுவரியில் ஈக்களும் கண்களும் ''அங்கேயே'' மொய்க்க,
இப்படியாகுமெனில் ''அவள்'' தற்கொலையே செய்திருக்கமாட்டாள்...
Last edited: