• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

INDEPENDENCE DAY CONTEST

Status
Not open for further replies.
சுத்தமான சுதந்திரம்..

1947ம் ஆண்டு வாங்கிய சுதந்திரம், கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் கடந்து விட்டது, பல உயிர்கள் பல சதைகள் சிதைக்கப்பட்டு கிடைத்த சுதந்திரம், ஒரு நாள் கொடி ஏற்றிவிட்டு அந்த கொடி கிழிந்தாலும் மாற்றமால் கடந்து செல்லும் சுதந்திரம், அது பிறந்தநாள் அல்ல, ஒருநாள் மரியாதை செலுத்துவிட்டு கடப்பதற்கு, அதனுடன் வாழ்கிறோம்.

இந்த சுதந்திரம் யாருக்கு சொந்தம், எந்த சுதந்திரத்தை நாம் சுவாசிக்கிறோம் என்பதை காணுவோம்

விடுமுறை அளித்து தொலைக்காட்சியில் இரண்டு புதிய படங்கள் இட்டால் அது அல்லவா சுதந்திரம். மாய உலகத்தில் வாழ்கிறோம்., மறந்துவிடாதீர்கள்.
தந்திரகாரர்களின் இடம் இருந்து சுதந்திரம் வாங்கி வஞ்சகர்களிடம் விற்றுக் கொண்டிருக்கிறோம்.

அனிதா முதல் ஸ்ரீமதி வரை ஏதோ ஒன்று விதைத்து விட்டுதான் சென்றிருக்கிறார்கள், சுட சுட மனதை ஈர்க்கும் செய்திகள் வந்தால் அதை படித்து கோபப்பட்டு அன்றோடு மறப்போம், இதுதான் நாம் கற்றுக்கொண்டுள்ள சுதந்திரம்.

உக்ரைன் ரஷ்யா போர், பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டு பணவீக்கம் ஏற்பட்டு, ஆனாலும் நாம் உழைப்பை நிறுத்தவில்லை, ஏன் போராடவில்லை ?. ஏன் என்றால் நமக்கு தேவைகள் தேங்கி கிடக்கிறது.

பள்ளிக்கு செல்ல வேண்டிய பிள்ளைகள், பள்ளிக்கு செல்லாமல் பட்டாசு தொழிற்சாலைகளிலும், பண்டங்கள் தயாரிக்கும் பன்னாட்டு தொழிற்சாலைகளிலும் வேலை செய்கிறார்கள், அவர்களுக்கு தேவை சுதந்திரம்.

கோடிகளில் புரளும் சினிமாக்காரர்களுக்காக சண்டைகள் போட்டு வீட்டில் பெற்றோரை பட்டினி போடுகிறார்களே, அந்த பெற்றோருக்கு வேண்டும் சுதந்திரம்.

நீதி தேவதையின் சேலை அகற்றி பார்க்கும் மானங்கெட்ட காமர்கள் மத்தியில் வாழும் பெண்களுக்கு வேண்டும் சுதந்திரம்.

இரவை நினைத்து பயப்படும் பெண்களுக்கு வேண்டும் சுதந்திரம்.

கடத்தப்பட்டு விற்கப்பட்டு விபாச்சாரத்தில் தள்ளப்படும் குழந்தைகளுக்கு வேண்டும் சுதந்திரம்..

பிச்சை பாத்திரம் ஏந்தி வீதி வீதியாக ஒரு வேளை சோற்றுக்கு அலையும் குழந்தைகளுக்கு வேண்டும் சுதந்திரம்.

பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆசிரமத்தில் வாழும் அநாதை பெற்றோர்களுக்கு வேண்டும் சுதந்திரம்.

இன்னும் எவ்வளவோ சுதந்திர தேவைகள் முடங்கி கிடக்கிறது. அனைத்தும் நம்மால் சரி செய்ய முடியுமா? இன்று இருக்கும் காலகட்டத்தில் கஷ்டம்தான்.

ஆனால் ஒன்று செய்ய முடியும். ஒரு பெற்றோரை காப்பாற்ற முடியும், ஒரு குழந்தையின் பள்ளி செலவை ஏற்கமுடியும். ஒருவர் ஒருவரை ஏதோ ஒரு விதத்தில் காப்பாற்ற நினைத்தாலே அவர்கள் அதிலிருந்து விடுப்பட்டாலே அதும் சுதந்திரம்தானே.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு குழந்தையை காப்பாற்றினாலே போதுமே. முழு சுதந்திரம் கிடைக்கவில்லை என்றாலும் மனதில் ஒரு சாந்தம் வருமல்லவா, அந்த சாந்தம்தான் நம் சுதந்திரம்.

அனைவரும் ஒன்று கூடுங்கள், வீதியில் இறங்கி போராடுங்கள், உதைப்படுங்கள், சிறைப்படுங்கள். இது அல்ல என் கூற்று, உங்களால் முடிந்தால் ஒரு ஏழையின் வயிற்றுக்கு ஒருவேளை உணவிடுங்கள். அவரின் அந்த ஒரு வேளை பசிக்கஷ்டத்தை போக்கிய நீங்களும் ஒரு சுதந்திரவாதிதான்..

புத்திக்கு எட்ட தாமதம் ஆனாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு பெண் பிள்ளையின் படிப்பின் செலவை நான் ஏற்றுள்ளேன். தாமதம்தான் ஆனால் ஒருவருக்கு படிப்பை கொடுக்கிறது என்று மனம் சுதந்திரமாக சுழல்கிறது..
 

Attachments

  • 8782fb16800963.562b179f46aa4.jpg
    8782fb16800963.562b179f46aa4.jpg
    1.9 MB · Views: 2
எது சுதந்திரம் ?

வெள்ளை தோல் மற்றும் ஆங்கிலம் பேசுபவனிடம் இருந்து பெற்றது மட்டும் தான்‌ சுதந்திரமா?

இன்றும் நாம் அடிமைகளே!

வேண்டாம் என விரட்டியவனின்
மொழி தான் இன்று நம் அலுவலக மொழி

வேண்டாம் என விரட்டியவனின்
அலுவலகத்தில் தான் இன்று நம் வேலை

வேண்டாம் என விரட்டியவனின்
உணவு பழக்கம் தான் இன்று நம்
பழக்கமும்

வேண்டாம் என விரட்டியவனின்
பொருட்களே இன்று நம் அத்தியாவசியம்

வேண்டாம் என விரட்டியவனின்
கலாச்சாரமே இன்று நம்
கலாச்சாரம்

இன்னும் பல

இன்னும் நாம் நம்மையே அடிமைகளாகவே ஆக்கி கொள்கிறோம் சிறு மாற்றம்‌தான் அவன் நேரடியாக நம்மை‌ அடிமை படுத்தவில்லை

மாறுவோம்‌ மாறுபடுவோம்
மாற்றம் அடைவோம்!

சுதந்திர காற்று மாசுபடாமல் காப்போம்

அனைவருக்கும் என் தாய் திருநாட்டின் சுதந்திர தின வாழ்த்துக்கள்

வாழ்க பாரதம்! வளர்க தமிழ்!
 
என் இனிய சுதந்திரமே,

போராடியும், மாண்டும், மறுத்தலித்தும் ஈன்ற உன்னை வாடி, பரிதவிக்க விட்ட நாங்கள் என்று மனிதராய் தன் உணர்ந்து, பேணி, பாதுகாத்து ஜனங்களின் நாயகனாய், உற்ற ஜனநாயகமாய் உலகில் வலம் வர செய்யப்போகிறோம்????

மானுடன் தனியாகிப்போய் தனி மனித சுதந்திரம் என்ற போர்வையில் தன் சமுதாயத்தையே சீரழிக்கும் அவலத்தை என்று நிறுத்துவான்???

மூன்று வர்ண கொடியை முந்நூறு வர்ண கொடியாய் முலாம் பூசி கொக்கரிக்கும் இவன் என்று சாதிக் கொடுமையிலிருந்து சுதந்திரம் பெறுவான்????

என் இனிய சுதந்திரமே 🇮🇳
 
🙏பாக்களின் சமர்ப்பணம்🙏

75 ஆண்டுகளாய்
சுதந்திர தாகம் போக்கியே இப்பாரதத்தின் நேசமிகு ❤🥰தியாக உள்ளங்களுக்கு ----❤🥰

'அவள்'
- கார்மேக வர்ணத்தால் காற்குழல் வீசினால்!!!😍
'அவள்' - தேசமென்னும் பாரினையே ஆண்ட பிள்ளைகளை பெற்றால்!!!😍
'அவள்' - தலை முதல் கால் வரை என்னற்ற ஓசையில் பாஷைகள் பேசுவாள்!!!😍
'அவள்' - உடம்பில் செரி பாதியை பெருங்கடலினுள் மிதக்க விட்டு முப்பெரும் தேவியரானாள்!!!😍
'அவள்' - பாரெங்கிலும் புலமையையும், பண்பாட்டையும், ஒழுக்கத்தையும், கலாச்சாரத்தையும், நீதியையும், தர்மத்தையும் அமுத்தூட்டி வளர்த்த தாய்யெனும் போற்றப்டுபவளானாள்!!!😍
'அவள்' - தேசமெங்கும் புத்துணர்ச்சி ஊட்டியே சுதந்திர தாகத்தை தீர்த்தால்!!!😍
'அவள்' - இன்றளவிலும், கண்களை கட்டிய படியே நீதியின் தேவதையாய் வழக்குறை மன்றங்களில் திகழ்கிறாள்!!!😍
'அவள்' - மனிதம் புகட்டியே மனித தன்மையையையும், லோக தர்மத்தையும் பறைச்சாற்றி தேச தியாகிகளாய் உயிர் நீத்த எண்ணற்ற ஆன்மாக்களின் குருதியில் உறைந்தே போனால்!!!😍
'அவள்' - மண் தாங்கும் பெண்மையை இவ்வுலகிற்கு எடுத்துறைக்கும் கைகளின் வெற்றி எனும் செங்கொடி ஏந்தியே, சிம்மதின் மீதமர்ந்து என்றும் ஒளிவீசும் பாரதத்தின் தாயுமானாள்!!!❤😍

images.jpeg.jpg

🙏வந்தே மாதரம்🙏
🙏பாரத் மாதா கீ ஜெய்🙏
 
Last edited:
சுதந்திரம்


சுதந்திரம் இரண்டு வகைப்படும் ஒன்று எடுத்துக்கொள்வது மற்றொன்று கொடுப்பது

சுதந்திரம் கொடுப்பது
நம் பிள்ளைகளின் வாழ்வை அவர் விரும்பும் வகையில் தீர்மானிக்க விடுவது

சுதந்திரம் கொடுப்பது நல்வழியில் நடந்திட

சுதந்திரம் கொடுப்பது மற்றவர்களுக்கு உதவி செய்திட

சுதந்திரம் கொடுப்பது சமுதாயம் மேம்பட

சுதந்திரம் எடுத்துக் கொள்வது
பிறர் மனதை பிறர் மதத்தை புண்படுத்த அல்ல
சுதந்திரம் எடுத்துக் கொள்வது
நம் கலாச்சாரத்தை சீர் கெடுப்பதற்கு அல்ல

சுதந்திரம் எடுத்துக் கொள்வது
அரைகுறை ஆடை அணிந்து
திரிவதற்கு அல்ல

சுதந்திரம் எடுத்துக் கொள்வது
மற்ற நாட்டவரின் பழக்கவழக்கங்களை பின்பற்றுவதற்கு அல்ல

நாம் எடுத்துக் கொள்ளும் சுதந்திரமும் கொடுக்கும் சுதந்திரமும் நம் தாய்த்திரு நாட்டை யும் நம் கலாச்சாரத்தையும் காத்திடவே பயன்பெற வேண்டும்



வேரறுப்போம் வேற்றுமையை
காத்திடுவோம் ஒற்றுமையை
சுவாசிப்போம் நம் தாய்நாட்டின் சுதந்திரத்தை



ஜெய் பாரத் மாதா
வந்தே மாதரம்🙏
வாழ்க இந்தியா வளர்க இந்தியா 🇮🇳

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 💐💐💐


JOKERR🤡
 

Attachments

  • 1660302500181.gif
    1660302500181.gif
    42 bytes · Views: 5
  • 1660302500297.gif
    1660302500297.gif
    42 bytes · Views: 5
Dear Users,
Its Time to Unleash your multifaceted talents, Based on Independence Day Theme ..
Here we inviting Everyone to Participate and Express Yourself ...

And We Decided to Add Forum Points to All the Participants for all Eligible Entries !!


View attachment 3571
20220812_220721.jpgநாம் பெற்ற சுதந்திரம் இவர்களையும் காக்கட்டும் Jokerr🤡
 
View attachment 3605நாம் பெற்ற சுதந்திரம் இவர்களையும் காக்கட்டும் Jokerr🤡
பெற்றடுத்த சுதந்திரம் ஒன்றை பேணி வளர்த்தேன். ..
அது கற்கவேண்டும்
மந்திரம் என கல்விக்கூடம் போனது என்ன...
நரிகளது தந்திரத்தில் நாவிழந்து நின்றது என்ன...
சீர் இழந்த சீருடையில்
சவமாய் வீடு வந்தது என்ன...
பெற்று எடுத்த சுதந்திரமே..
பெண்ணை நீ பிறவாதே...
கூறு போட்டு கொன்றிடுமே குழந்தை என்று பாராமலே...


Inspired by your concept drawing
Lines dedicated to this drawing
 
*சுதந்திர தின பவள விழா ஆண்டு*

** வளமாய் பட்டொளி வீச
*பா* ரார் போற்றும் பாவகையாய்
*பி* றப்பொக்கும் எல்லா உயிருக்கு மென
*பீ* டுநடை போட்டு
*பு* ல்லாங்குழலாய் புன்னகைத்து
*பூ* த்துக்குலுங்கும் பூந்தோட்டத்தை
*பெ* ட்டகமாய் பேணிக்காத்து
*பே* ரிகை பேறுகளாய்
*பை* திரம் பசுமையாக்க
*பொ* றையுடைமை பின்பற்றி
*போ* ரின்றி பாங்கராய் வாழ்ந்திட
*பௌ* த்தம் பயில்வோம்.

🇮🇳*இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்*🇮🇳
❤❤
 
Status
Not open for further replies.
Back
Top