What's new

Remembering Bharathiyar !!!

O

Ohmylove

Guest
தீர்த்தக் கரையினிலே
தெற்கு மூலையில்
செம்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன்
வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்

வார்த்தை தவறிவிட்டாய்
அடி கண்ணம்மா

மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம்
உன்னைப் போலவே
பாவை தெரியுதடி

பாவை தெரியுதடி


மேனி கொதிக்குதடி
தலை சுற்றியே
வேதனை செய்குதடி
வானின் இடத்தையெல்லாம்
இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்

மோனத்திருக்குதடி
இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும்
பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ 😌😌😌



images (53).jpeg
 
O

Ohmylove

Guest
வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வரிம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா! ❤❤


காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா! ❤❤
 
M

Mathangi

Guest
வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வரிம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா! ❤❤


காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா! ❤❤

Wow my fav kavithai :love::love::love:
 
M

Mathangi

Guest
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர்
எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே!
கட்டியமுதே!கண்ணம்மா!

ithum semmala :love::love::love:
 
O

Ohmylove

Guest
கன்னத்தில் முத்தமிட்டாள்
உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி
கன்னத்தில் முத்தமிட்டாள்
உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி
உன்னை தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடி..
உன் கண்ணில் நீர் வடிந்தால்

என் நெஞ்சில் உதிரம்
உன் கண்ணில் நீர் வடிந்தால்

என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா
என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ...

ithum my fvrt ❤

@Mathangi

Kadhaluku per ponavar bharathiyar 😍😍
 
M

Mathangi

Guest
1.காக்கைச் சிறகினிலே நந்தலாலா-நின்றன்
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா;

2. பார்க்கு மரங்கலெல்லாம் நந்தலாலா -நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா;

3. கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீத மிசைக்குதடா நந்தலாலா;

4.தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-நின்னைத்
தீண்டுமின்பம்ந் தோன்றுதடா நந்தலாலா.

ithum rompa pidicha paadal ithu lifela marakka mudiyaathu naan 8th std padikkumpothu competitionla paadi 1st prize vaangunen my fav song :love: :love: :love:
 
M

Mathangi

Guest
கன்னத்தில் முத்தமிட்டாள்
உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி
கன்னத்தில் முத்தமிட்டாள்
உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி
உன்னை தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடி..
உன் கண்ணில் நீர் வடிந்தால்

என் நெஞ்சில் உதிரம்
உன் கண்ணில் நீர் வடிந்தால்

என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா
என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ...


ithum my fvrt ❤
@Mathangi

Kadhaluku per ponavar bharathiyar 😍😍
yes dear avaroda kannamaava ninaichu azhagaa ezhuthirupaar.....😍😍😍
 
Top