- Joined
- Apr 8, 2022
- Messages
- 845
- Points
- 133
பல்லவி
தேன் சிரித்திடும் பூவில் தான்
பிறந்திடும் போதே நான் .
உந்தன் வாசம் பெண்ணே அங்கே கண்டேன்
நீ சிரிக்கிற போதெல்லாம்
சினுங்கிடும் மனதில்தான்
பெண்ணே உன்மேல் காதல் நானும் கொண்டேன்
ஒரு வார்த்தை நீயும் பேச என் நெஞ்சம் தித்திக்கிதே
ஒரு பார்வை நீயும் பார்த்தால் என் நெஞ்சும் பத்திக்கிதே
மேகத்தில் நீரை போல
வேகமாய் உந்தன் காதல்
வந்தெந்தன் ஹார்ட்டின் உள்ளே
மெல்ல தான் ஒட்டிக்கிதே
சரணம்
சில்லென்று என்னை தீண்டும் காற்றா நீ
மெல்லத்தான் வார்த்தை பேசும் பூவா நீ
நினைவாலே என்னை நனைக்கும் மழையா நீ
தேடித்தான் வந்து போகும் அலையா நீ
ஒரு பூட்டு போட்டு உம் மனச பூட்டி வச்ச
அடி எப்படித்தான் எம் மனச நீ பரிச்ச
என் காதல் சொல்லும் போதெல்லாம் நீ சிரிச்ச
அடி காதல் வந்தும் இல்லாதது போல் நடிச்ச
தேன் சிரித்திடும் பூவில் தான்
பிறந்திடும் போதே நான் .
உந்தன் வாசம் பெண்ணே அங்கே கண்டேன்
நீ சிரிக்கிற போதெல்லாம்
சினுங்கிடும் மனதில்தான்
பெண்ணே உன்மேல் காதல் நானும் கொண்டேன்
ஒரு வார்த்தை நீயும் பேச என் நெஞ்சம் தித்திக்கிதே
ஒரு பார்வை நீயும் பார்த்தால் என் நெஞ்சும் பத்திக்கிதே
மேகத்தில் நீரை போல
வேகமாய் உந்தன் காதல்
வந்தெந்தன் ஹார்ட்டின் உள்ளே
மெல்ல தான் ஒட்டிக்கிதே
சரணம்
சில்லென்று என்னை தீண்டும் காற்றா நீ
மெல்லத்தான் வார்த்தை பேசும் பூவா நீ
நினைவாலே என்னை நனைக்கும் மழையா நீ
தேடித்தான் வந்து போகும் அலையா நீ
ஒரு பூட்டு போட்டு உம் மனச பூட்டி வச்ச
அடி எப்படித்தான் எம் மனச நீ பரிச்ச
என் காதல் சொல்லும் போதெல்லாம் நீ சிரிச்ச
அடி காதல் வந்தும் இல்லாதது போல் நடிச்ச