1. யாரையும் Hurt பன்ன கூடாது
2. அடுத்தவன் கஷ்டத்தை பார்த்து சிரிக்க கூடாது
3. பொறாமைப் பட கூடாது
4. ஏழைகளுக்கு முடிந்தால் உதவி செய்ய வேண்டும்
5. நம்பிக்கை துரோகம் செய்ய கூடாது
6. அதிகமாக ஆசைப்பட கூடாது
7. நம் சுயநலத்திற்கு பிறரை பயன்படுத்த கூடாது
8. பழி வாங்கும் எண்ணம் இருக்க கூடாது, அது மன அழுத்தத்தை உண்டாக்கும்
இந்த லிஸ்ட்டில் முதலாவது மட்டுமே போதும் அதுவே பாதி தவம்.
தமக்கு உற்ற துன்பத்தை பொறுத்துக் கொள்ளுதல், வேறெந்த உயிருக்கும் துன்பம் செய்யாமல் இருத்தல். அற்றே அவ்வளவே தான் தவம்.
உற்றநோய் நோன்றல் உயர்க்குறுக்கண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு
இதனை அடுத்து எழுதிய மற்ற 7 விஷயங்களும் இன்னும் மிகுதியானவையும் இதற்குள்ளேயே அடங்கி விடும்.
இந்த ஒரு கருத்தையே வலியுறுத்தி மனுமுறை கண்ட வாசகத்தில், துன்பத்தில் உழலும் மனுச்சக்கரவர்த்தி என்ன பாவம் செய்து இத்தகைய துன்பம் தனக்கு வந்தது என்று ஒரு பெரிய பாவங்களின் பட்டியலை சொல்லிப் புலம்புவதாக வள்ளல் தொடங்குகிறார் "நல்லோர் மனதை நடுங்கச் செய்யதேனோ?" என்பதாக.
ஒரு நல்லவர் மனம் வருந்தினால் பெருமான் நம் கணக்கிலே பற்று வைத்து விடுவார். முன்னோ பின்னோ அதனை நேர் செய்தெ தீரவேண்டும். இதனை உணர்ந்து நாம் துன்புறுத்துவதை நிறுத்திவிட்டால் நமக்கு துன்பம் வர காரணமில்லாமல் போய் விடும்.
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்
நோயெல்லாம் - துன்பமெல்லாம்
நோய்செய்தார் மேலவாம் - துன்பம் செய்தவர் மீதாம் அதனால்
நோயின்மை வேண்டு பவர் - துன்பம் வேண்டாம் என்று விரும்புபவர்கள்
நோய்செய்யார் - மற்ற எந்த உயிருக்கும் துன்பம் செய்ய மாட்டார்கள்
இறுதியில் இந்த நுட்பத்தை புரிந்து கொண்டு நடக்க தொடங்கினாலே போதும்.
ஊழை திருப்பிடும் ஒரே வழி.