இவர்கள் யார் என்று பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.....!!அந்தோ!!! பரிதாபம்
ஏனெனில் தற்போதைய பத்திரிக்கைகள் பணத்திற்காகவும் , அதிகார அடிமைகளாகவும் செயல்படுவதால்...
இவர்கள்_கெளரவிக்கப்பட_வேண்டியவர்கள்...!!!!
பிச்சாவரம்(பித்தர்புரம்) ராஜ ராஜ சோழனின் வாரிசுகள் ராஜ ராஜ சோழ சூரப்ப சோழனார், சகோதரி மற்றும் தாயார் ராணியம்மாள் சிதம்பரத்தில் (தில்லை) குடமொழுக்குத் திருவிழாவில் தீட்சிதர்களால் அளிக்கப்படும் சிறப்பு மரியாதையை பெற வந்த பொழுது.
அண்ணாமலை பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு 1000 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்த குடும்பம் இன்று ஏழ்மை நிலையில்.
கோடி கோடியாய் சொத்திருந்தாலும் யாருக்கும் கிடைக்காத இந்த சிறப்பு மரியாதை இவர்களுக்கு மட்டுமே தில்லையில் அளிக்கப்படும்.
இன்று ஏழ்மையாக இருக்கலாம் ஆனால் ஒரு காலத்தில் தெற்காசியாவைக் கட்டி ஆட்சி செய்த சோழனின் வாரிசுகள்.
இன்னும் சிலகாலங்களில் ஸ்ரீ மன்னர் மன்னன் சூரப்ப சோழனார் அவர்களுக்கு தில்லையில் பஞ்சாட்சரப் படியில் அமரவைத்து தீட்சிதர்களால் சோழ அரசராக முடிசூட்டப்பட இருக்கின்றது.
இதுபோன்ற சம்பிரதாயங்கள் இல்லையென்றால் வரலாற்றையே மாற்றி எழுதி விடுவார்கள் நயவஞ்சகர்கள்.❤
வரலாற்றைத் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமாகிறது!!!
❤❤❤
வாழ்க சோழர்களின் தொண்டுகள் ❤❤
நாம் சோழ தேசத்தில் பிறந்தவர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம் ❤❤❤
சேரர்களின் தலைநகரமான வஞ்சிமாநகர் @ கருவூர் @கரூர் - ஐயும் கட்டி ஆண்ட பெருமை சோழ அரசர்களையே சாரும் ❤
முசுகுந்த சோழ சக்ரவர்த்தி திருவடி
வாழ்க தமிழ் ❤
மக்களே, இன்றும் நாம் நமது பாரத நாட்டின் தேசிய விலங்காக புலியை கொண்டுள்ளோம் என்றால் அதற்கு முக்கியமான காரணம் உலகத்தில் மாபெரும் ராஜ்ஜியத்தை ஆண்டு நமது தமிழ் மண்ணின் பெருமையை உலகலாவிய முறையில் பறைச்சாற்றி தமிழ் பண்பாட்டை கட்டி காத்த சோழ பேரரசர்களின் தன்னலமில்லா தொண்டுகளே!!! ❤
Last edited: