What's new

எங்கே சென்றாய் நீ 1

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
கண்ணில் விழுந்த கன்னி ஒருத்தி
என் நெஞ்சுமதையே கொஞ்சம் கடத்தி

கூட இருந்தா நாளும் இனிப்பா
விட்டு போனதால் ஆனேன் தவிப்பா

பகல் நேர ஆகாசமா வாழ்க்கை
உன்னாலே பிரகாசமா ஆச்சு

இப்போ நான் ஆயாசமா இருக்கேன்
என் காதல் என விட்டு போச்சு

உன் பேச்சை கேக்க தான் நானும்
தவமாக கிடந்தேன் பெண்ணே

நீ விட்டு போனதால் தானே
சவமாக ஆனேன் பின்னே

என்ன தப்பு நான் செஞ்சேன் நீயும்
அத சொல்லவில்லை

சொல்லாம போறியே நீ என் நெஞ்சுமத
தாங்கவில்லை

எப்படித்தான் என் மனச புரிய வைப்பேன் தெரியலையே

என் காதல் ஆழமத பெண்ணே நீயும் அறியலையே


ஏன் விட்டு போனியோனு நான் நித்தம்
குழம்புறேனே

நீ விட்டு போனதால இங்க நானும் புலம்புறேனே

நரகமென என் வாழ்க்கை நீ இன்றி
இருக்குதடி

நாடெல்லாம் என் நிலைமை பாத்து தானே சிரிக்குதடி

நீ இல்லா நேரத்தில் சாவுமது பக்கமடி

நீ தானே என்னோட நிஜமான சொர்க்கமடி
 
Top