என்னத் தாங்கி சீராட்டிய மடி
சுருங்கித்தான் போச்சு
என் உள்ளங்கை ரேகை தடவும்
மென்விரலும் வத்தித்தான் போச்சு;
இருந்தும் உன் பாசம் மட்டும்
வாழ்ந்து நிக்கும் வானம் முட்டும்;
வெத்தலைய இ டிச்சு
வாயில அதக்கிக்கிட்டு
நீ கதைக்க நான் கேப்பேன்
வாய தொறந்துகிட்டு;
மணக்கும் ராகி களி கிண்டி
உன் பாசம் முழுசா அதுல கொட்டி
நெத்திலி கருவாடோட நீ ஊட்ட
நெதமும் தி ண்பேன் பொட்டாட்ட;
அழகானு உச்சி மோந்து நீ பார்ப்ப
ஊருசனம் கண் அழிக்க
கருப்பன துணைக்கழைப்ப
முக்கூட்டு மண்ணுல சுத்தியும் போடுவ;
எந்த தேசம் போனாலும்
என் உசுருக்குள்ள உன் வாசம்;
சுருக்கு பை ராணி
நீ சொன்ன நெறிப்படி
நான் சிறப்பா வாழ்ந்திருப்பேன்!