- Joined
- Jul 15, 2022
- Messages
- 6,327
- Points
- 20
ஓங்காரமாய் நீ நிறையநகரத்து ஓசைகளை
எங்கோ கழற்றி
எட்ட எரிந்துவிட்டு
மந்தரித்தது போல்
மனம் இங்கு
மங்கை உன்னை தேடுகிறது;
இதோ ஏதோ என்று
இதயத்தை ஏமாற்ற
இடுங்கி தான் போகிறது;
ஒவ்வொரு மணித்துளியும்
ஓம்காரமாய் நீ நிறைய
பரவெளியாய் நான்!
Wow.... beautiful நீர்க்குமிழி பொழிவுபுன்னகை பூ!
பிரசவ வார்டில் மறு உயிர்
பெற்ற தாய்க்கு - சேயின் முகம்
ஒரு புன்னகை பூ;
சாலை நிறுத்தங்களில் காசை பெற்று
மவராசன் என்றுரைத்த பொக்கைவாய்
ஒரு புன்னகை பூ;
காதலனின் முதல் முத்தம் தனை
எதிர்பாரா வஞ்சியின் வெட்கம்
ஒரு புன்னகை பூ;
கணவனின் தீண்டல்கள் ஓய்ந்து
நிலவொளியில் நங்கையின் நாணம்
ஒரு புன்னகை பூ;
ரயிலின் கைதட்டல் ஓசையில் களித்த மழலையை வாழ்த்தும் திருநங்கை தோற்றம்
ஒரு புன்னகை பூ;
பந்தல் தோரணம் மத்தியில் - நீர்குமிழி
பிரதிபலிப்பில் மடந்தை பொழிவு
ஒரு புன்னகை பூ;
பெண்கள் என்னும் பூக்கள்
பூத்து குலுங்கும் பூந்தோட்டம்
எங்கள் பூமி!
நீர் குமிழி பிரதிபலிப்பு da...Wow.... beautiful நீர்க்குமிழி பொழிவு
Got it anna....நீர் குமிழி பிரதிபலிப்பு da...
Water bubble reflection la theriyara face nu solla try pannirken... Not sure how it was conveyed
Conveyed correctly coolநீர் குமிழி பிரதிபலிப்பு da...
Water bubble reflection la theriyara face nu solla try pannirken... Not sure how it was conveyed
Amazing to feel your words.காதலின் உச்சம்
கண் அணை உடையும் கணம்
உன்னை இருக அணைத்த நான்!
மீளா பிடியில்
விரலின் நகம் கொண்டு-
என் முதுகை பிளந்து
விலகிச் சென்ற நீ!
சிதறிய இதய செல்களை
அள்ளி எடுத்து - அதனுள்
மடித்து வைத்த
நினைவுகள் மட்டும் என் சொந்தம்!
View attachment 11210
Thank you so muchAmazing to feel your words.
விரலின் நகம் கொண்டு என் முதுகை பிளந்து விலகிச் சென்ற நீ!
சிதறிய இதய செல்களை அள்ளி எடுத்து - அதனுள் மடித்து வைத்த
நினைவுகள் மட்டும் என் சொந்தம்!
I had to cut and paste all most all of the poetry. word for word.
Unbelievable.
@Agnii semmaஆடினேன்
மயிலா நீ
அடங்கு
என்று ஆணை வந்தது
பாடினேன்
குயிலா நீ
கூவாதே
என்று கேலி வந்தது
சிரித்தேன்
பொம்பள சிரிச்சா போச்சு
நிறுத்து
என்று சீறல் வந்தது
அழுதேன்
பொட்ட புள்ள ஒப்பாரி
வீட்டுக்கு ஆகாது
என்று உறுமல் வந்தது
எண்ணங்களை
நேர் பட பேசினேன்
அகந்தை
என்ற பட்டம் வந்தது
கற்பு பொய்
கண்ணியம் பொதுவென சொன்னேன்
கலகக்காரி
என பங்கம் செய்தது
சமூக கரையான்கள்
சீறும் சிங்கத்தை
அடக்க முடியுமா?
#SingaPenney
View attachment 11184