What's new

என்னை இடித்த குறட்பாக்கள்.

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
திருக்குறளிலே பெரிய பற்றுதல் இல்லாமல் வளர்ந்து வருகையில் மெல்ல மெல்ல மனப்பாடப் பகுதியில் அறிமுகம் ஆகி, மேலும் ஆங்காங்கே படித்தும் கேட்டும் இடி வாங்கிய குறட்பாக்களை போடுகிறேன். மற்றவரும் தத்தமது விருப்பப்பாக்களை பதிவிடலாம். குறட்பாவிலோ எனது புரிதலிலோ பிழையிருந்தாலும் தவறாமல் சுட்டிக்காட்டிட வேண்டுகிறேன்.
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்
பூதஙகள் ஐந்தும் அகத்தே நகும்.

(கூடா வொழுக்கம்)

யாருமே அறியாத படி கச்சிதமாக செய்து முடித்துவிட்டேன் என்று நினைப்பவனை பார்த்து ஐந்து பூதஙகளும் தமக்குள் சிரித்துக்கொள்ளும். இது பதினொன்னாங்கிளாஸ் மணப்பாடப்ப்குதியில் முதல் பாட்டுன்னு நினைக்கிறேன்.

மவனே. கணக்குல ஏத்தியாச்சு. எப்டி வசூலாகுதுன்னு மட்டும் பாத்துக்கோ என்பது போல எனக்கு ஒலித்தது அதே போல் திருமந்திரத்திலும் அப்படியே ஒரு கவி வருகிறது.

கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே


இது அப்புறமா படிச்சது. எல்லா இடத்துலையும் சிசிடிவி வச்சு அன்லிமிட்டடா ரெக்காட் ஆயிட்டு இருக்கு போல.
 
Last edited:

PrinceDeepak

Member
Joined
Apr 10, 2023
Messages
11
Points
23
கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே

Sirapana varihal nanba 💙
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
அறஞ்செய விரும்பு என்பது தமிழ்நாட்டில் பொதுவாக அறியப்பட்ட சொற்றொடர். தமிழ்நாட்டில் அறத்தைப் பத்தி கேக்காம வளர்ந்துட முடியாது. மற்ற சமுதாயத்தை விட தமிழனுக்கு ஒரு undue advantage ஆங்காங்கே அறங்களை பற்றி நினைவூட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். மற்ற சமுதாயங்களுக்கெல்லாம் உலக வாழ்க்கையின் ரூல்ஸ் தெரியாது. முட்டி மோதி சிக்கி சீரழிந்து பட்டு உணர்ந்து வருந்தித் தான் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழனுக்கு பெருமான் செய்த ஒரு ஓரவஞ்சனை திரும்பிய பக்கமெல்லாம் அறத்தை அறிவித்து வைத்தது. இதிலே ஓரிரு குறள்கள் ஒரு படி மேலே போய் அறத்தை மீறினால் என்னவாகும் என்றும் எச்சரிக்கை செய்துவிட்டு அப்புறம் உன் இஷ்ட்டம் என்று நம் கையில் விடுவது. உயிர்களுக்கு தற்சுதந்திரம் இருப்பதால் அவைகளே தேர்தெடுக்க வேண்டும். (விளையும் பயனையும் சேர்த்து). அவை இது தான்.

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு


அதாவது. அறத்தை விடவும் ஒரு செல்வம் தரத்தக்க வழி வேறெதுவும் இல்லை. அதனை மறத்தலை விடவும் - அதாவது அறத்தை மறத்தல் / மீறுதலை விடவும் மிகுதியான கேடு விளைவிப்பது வேறெதுவும் இருக்க முடியாது.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை


அப்டியா? அறத்தின் வழி நின்னா என்னவாம்? மீறினா என்னவாம்? அப்டின்னா கேக்குற. அங்ஙன பார்னு ஒரு காட்சியை காண்பிக்கிறார் ஐயன். அதென்ன காட்சின்னா பல்லக்கை சுமந்துட்டு போறவனையும் அதுல உக்காந்துட்டு போறவனையும் பார்ரான்னு காட்டுறார். நல்வினை செய்தவன் அதன் பயனாய் உயர்வான் என்பதும் தீவினை செய்தவன் இப்போது சுமப்பான் என்பதும் இதுல யாரா நீ இருக்கணும்னு நீயே தீர்மானம் பண்ணிக்கோன்னு ஒரே காட்சியிலேயே நல்வினை தீவினையின் விளைவை கம்ப்பேர் செய்ய வசதியாய் காட்டி குட்டி அறிவித்தது.
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
தன்னூண் பெருக்கற்கு தான் பிறிதூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?


தன்னுடைய ஊன் தசைகள் பெருக்கம் அடைவதற்கு மற்ற உயிர்களின் ஊன் தசையை பிய்த்து தின்பவனிடம் எங்ஙனம் ஆளும் அருள். அருள் எவ்வாறு வாய்க்கும்? அவன் அந்த உயிரின் சாபத்தை தாங்கிக்கொண்டே அலைய வேண்டியிருக்கும்.

உலகத்துக்கு திருவள்ளுவர் உரத்து சொன்னது கொல்லா நெறியும் புலால் மறுத்தலும். இந்த பிரபஞ்சம் ஒரு ஒழுங்கு முறை விதியின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது என்று நினைப்பவர்கள் அந்த பிரபஞ்ச விதி ஓரவஞ்சனை இல்லாத விதியாக இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொள்வர்.

அதாவது நாம் செய்யும் அல்லது செய்யாமல் விடும் செயல்களுக்கு நாம் பொறுப்பு ஏற்கிறோம். நம்முடைய ஒரு செயல் மற்ற உயிருக்கு துன்பம் ஏற்படுத்தும் என்றால் அது பழிச்செயல். அந்த துன்பம் இயற்கையின் விதிப்படி செய்தவரை வந்து அடையும்.

எனக்கென்ன தெரியும். கசாப்பு கடையில வித்தாங்க. வாங்கி சாப்டேன் என்று சமாதானம் சொல்லி தப்ப முடியாது. ஏனென்றால் கசாப்பு கடைக்காரன் நாம் ஏவிய கூலியாள். ஒரு கூலிப்படையை கொண்டு யாரையோ கொன்றால், வெட்டின கூலிப்படை ஆள் மட்டும் தான் தண்டிக்கப்படவேண்டும், ஏவியவன் இல்லை என்று எப்படி ஆகாதோ அதே போல்.

இங்கே பழந்தமிழில் ஒரு பழமொழி இப்போது திரித்து வழங்கப்பட்டு வருகிறது. "கொன்னால் பாவம் தின்னா போச்சு" என்பது தான் அது. விளையாட்டாக பேசி சிரிப்பார்கள். ஆனால் நியதிக்கு அதெல்லாம் தெரியாது. நாம் நம்பவில்லை என்றாலும் புவியீர்ப்பு விசை செயல்படும். அது போலவே நியதியும். அந்த பழமொழி உண்மையில் இது தான். கொன்றவன் பாவம் தின்றவனுக்கு போச்சு என்பதாம். இப்போது பாருங்க இந்த குறளுக்கு அர்த்தமும் பொருந்தி வரும்.

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன் தருவார் இல்
.

நீங்க டிமாண்ட் இல்லாம விட்டா யார் கசாப்பு கடைய நடத்துவாங்கன்னு கேக்குறார். அப்புறம் இன்னும் ருசி விட முடியலையா? சரி உங்க இஷ்ட்டம். வரும் விளைவை சொல்லிடுறேன் என்று ஒரு சின்ன காட்சியை காட்டுகிறார். குலையெல்லாம் நடுங்கும்.

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தால் செய்யாது அளறு.


நியதியின் படி தாம் உருவாக்கிய இன்ப துன்பங்கள் தம்மையே வந்தடையும் முறையில், அளறு என்ற நரகம் விழுங்கினால், திரும்ப வெளியே துப்பிவிட அண்ணாத்தல் செய்யாதாம். அதாவது தன் வாயைத் திறவாதாம். உள்ளேயே கிடக்கவேண்டியிருக்கும் பாத்துக்கோப்பா என்று நியதியை சொல்லிவிட்டார்.

அப்பா வாங்கி கொடுத்தார், அம்மா ஊட்டிவிட்டாங்க என்பதெல்லாம் எடுபடும் பதில் இல்லை. ஏனென்றால்

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.


தத்தம் கருமமே. தம் தம் கருமமே. வேறெவருடையதும் நமக்கு வராது. நம்முடைய செயலின் விளைவு வேறெவருக்கும் போகாதாம். அவரவர் செயலின் விளைவு அவரவருக்கு மாத்திரமே போகுமாம்.

அதனால். கவனம்.
நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்


என்னும் தீவினையச்சம் கவியும் சேர்த்து பார்த்து புரிந்து தப்பித்துக்கொள்ளலாம். நானும் இப்படி தான் பாதியிலே தப்பித்தேன்.

நோயெல்லாம் - துன்பமெல்லாம்
நோய்செய்தார் மேலவாம் - ஏற்கனவே துன்பம் செய்தவர்கள் மேலாம்
இந்த விதியை கண்டுகொண்டவர்கள்
நோயின்மை வேண்டுபவர் - துன்பமில்லாது இருக்கவேண்டும் என்று விரும்புபவர்கள்
நோய் செய்யார் - வேறெந்த உயிருக்கும் துன்பிழைக்க மாட்டார்களாம்.
 
Last edited:

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
தன்னூண் பெருக்கற்கு தான் பிறிதூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?


தன்னுடைய ஊன் தசைகள் பெருக்கம் அடைவதற்கு மற்ற உயிர்களின் ஊன் தசையை பிய்த்து தின்பவனிடம் எங்ஙனம் ஆளும் அருள். அருள் எவ்வாறு வாய்க்கும்? அவன் அந்த உயிரின் சாபத்தை தாங்கிக்கொண்டே அலைய வேண்டியிருக்கும்.

உலகத்துக்கு திருவள்ளுவர் உரத்து சொன்னது கொல்லா நெறியும் புலால் மறுத்தலும். இந்த பிரபஞ்சம் ஒரு ஒழுங்கு முறை விதியின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது என்று நினைப்பவர்கள் அந்த பிரபஞ்ச விதி ஓரவஞ்சனை இல்லாத விதியாக இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொள்வர்.

அதாவது நாம் செய்யும் அல்லது செய்யாமல் விடும் செயல்களுக்கு நாம் பொறுப்பு ஏற்கிறோம். நம்முடைய ஒரு செயல் மற்ற உயிருக்கு துன்பம் ஏற்படுத்தும் என்றால் அது பழிச்செயல். அந்த துன்பம் இயற்கையின் விதிப்படி செய்தவரை வந்து அடையும்.

எனக்கென்ன தெரியும். கசாப்பு கடையில வித்தாங்க. வாங்கி சாப்டேன் என்று சமாதானம் சொல்லி தப்ப முடியாது. ஏனென்றால் கசாப்பு கடைக்காரன் நாம் ஏவிய கூலியாள். ஒரு கூலிப்படையை கொண்டு யாரையோ கொன்றால், வெட்டின கூலிப்படை ஆள் மட்டும் தான் தண்டிக்கப்படவேண்டும், ஏவியவன் இல்லை என்று எப்படி ஆகாதோ அதே போல்.

இங்கே பழந்தமிழில் ஒரு பழமொழி இப்போது திரித்து வழங்கப்பட்டு வருகிறது. "கொன்னால் பாவம் தின்னா போச்சு" என்பது தான் அது. விளையாட்டாக பேசி சிரிப்பார்கள். ஆனால் நியதிக்கு அதெல்லாம் தெரியாது. நாம் நம்பவில்லை என்றாலும் புவியீர்ப்பு விசை செயல்படும். அது போலவே நியதியும். அந்த பழமொழி உண்மையில் இது தான். கொன்றவன் பாவம் தின்றவனுக்கு போச்சு என்பதாம். இப்போது பாருங்க இந்த குறளுக்கு அர்த்தமும் பொருந்தி வரும்.

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன் தருவார் இல்
.

நீங்க டிமாண்ட் இல்லாம விட்டா யார் கசாப்பு கடைய நடத்துவாங்கன்னு கேக்குறார். அப்புறம் இன்னும் ருசி விட முடியலையா? சரி உங்க இஷ்ட்டம். வரும் விளைவை சொல்லிடுறேன் என்று ஒரு சின்ன காட்சியை காட்டுகிறார். குலையெல்லாம் நடுங்கும்.

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தால் செய்யாது அளறு.


நியதியின் படி தாம் உருவாக்கிய இன்ப துன்பங்கள் தம்மையே வந்தடையும் முறையில், அளறு என்ற நரகம் விழுங்கினால், திரும்ப வெளியே துப்பிவிட அண்ணாத்தல் செய்யாதாம். அதாவது தன் வாயைத் திறவாதாம். உள்ளேயே கிடக்கவேண்டியிருக்கும் பாத்துக்கோப்பா என்று நியதியை சொல்லிவிட்டார்.

அப்பா வாங்கி கொடுத்தார், அம்மா ஊட்டிவிட்டாங்க என்பதெல்லாம் எடுபடும் பதில் இல்லை. ஏனென்றால்

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.


தத்தம் கருமமே. தம் தம் கருமமே. வேறெவருடையதும் நமக்கு வராது. நம்முடைய செயலின் விளைவு வேறெவருக்கும் போகாதாம். அவரவர் செயலின் விளைவு அவரவருக்கு மாத்திரமே போகுமாம்.

அதனால். கவனம்.
நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்


என்னும் தீவினையச்சம் கவியும் சேர்த்து பார்த்து புரிந்து தப்பித்துக்கொள்ளலாம். நானும் இப்படி தான் பாதியிலே தப்பித்தேன்.
Naa laam NV saapdaama oru vaaram kooda iruka maatenae 😔😔

@Vanathi @Ohmylove inga vaanga.. im so sad.. ena panalaam? Thirukural la irunthu intha kural laam thookidalaama 🤔😜😂😂😂
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
@Balan72 ungala idichathu illama.. engalayum idika plan pannitinga pola 😂😂
therinjathu solluren ma. aatruppadai nu oru murai irukku la. Adhaan thappu na point out pannunga nu mudhal le ye sollitten. I m another cheap simple soul trying to learn. Humbled by destiny. Again and again and again.
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
therinjathu solluren ma. aatruppadai nu oru murai irukku la. Adhaan thappu na point out pannunga nu mudhal le ye sollitten. I m another cheap simple soul trying to learn. Humbled by destiny. Again and again and again.
Thappu kandupidika first enaku therinji irukanum.. athuvae illa.. unga postings la naa learn panitu iruken..😀 nandri.
 

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133
Naa laam NV saapdaama oru vaaram kooda iruka maatenae 😔😔

@Vanathi @Ohmylove inga vaanga.. im so sad.. ena panalaam? Thirukural la irunthu intha kural laam thookidalaama 🤔😜😂😂😂
இன்னாது?? சைதை தமிழரசி தாக்கப்பட்டாரா!!! 😂😂

மனைவி சொல்லைக் கேட்டு நடக்குறது ஆண்மையே இல்லன்னு சொன்ன அதே தாடிக்காரர் தானே இவரு?? அவர் சொல்றத எல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க 😛:ROFLMAO:

பிரியாணி_எடு, கொண்டாடு!! 😂

#நாராயண_நாராயண :p
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
இன்னாது?? சைதை தமிழரசி தாக்கப்பட்டாரா!!! 😂😂

மனைவி சொல்லைக் கேட்டு நடக்குறது ஆண்மையே இல்லன்னு சொன்ன அதே தாடிக்காரர் தானே இவரு?? அவர் சொல்றத எல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க 😛:ROFLMAO:

பிரியாணி_எடு, கொண்டாடு!! 😂

#நாராயண_நாராயண :p
Apdi vera sonnara avaru 😳😲
 

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133
Illaya pinna.. ippo sandai podunga.. naan popcorn eduthuttu varen 😂

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து (907)​

மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல் (910)​

நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Illaya pinna.. ippo sandai podunga.. naan popcorn eduthuttu varen 😂

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து (907)​

மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல் (910)​

நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.
இதன் பொருளை contextஐ அதிகாரத்தைக் கொண்டு புரிந்து கொள்ளவேண்டும். நான் பரிமேலழகர் மணக்குடவர் உரைகளை பார்த்துவிட்டு சொல்கிறேன். வள்ளுவர் பெண்களை குறைத்தவரில்லை. அது ஆதிநூல் என்பதால் பிழையிருக்க வழியில்லை. எனினும் பார்த்துவிட்டு சொல்கிறேன். சில குறட்பாக்கள் பொருள் திரிந்து கொள்ளப்படுகிறது. சில உதாரணங்களை வேறு தனி தலைப்பில் தருகிறேன்.
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
Illaya pinna.. ippo sandai podunga.. naan popcorn eduthuttu varen 😂

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்​

பெண்ணே பெருமை உடைத்து (907)​

மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்​

பெண்சேர்ந்தாம் பேதைமை இல் (910)​

நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.
Pop corn waste ah poga pothu 😂😂sanda podanum na neenga pota thaan undu 😂😂

@Balan72 explanation kudukatum apram sandaiya samathanama nu paakalaam 😀

@ilakiyaa ungal karuthukkal varverka padukirathu 😀
 

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133
Pop corn waste ah poga pothu 😂😂sanda podanum na neenga pota thaan undu 😂😂

@Balan72 explanation kudukatum apram sandaiya samathanama nu paakalaam 😀

@ilakiyaa ungal karuthukkal varverka padukirathu 😀

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும் (774)​

கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.

So, போர்ன்ற பேருல ஒரு உயிரை கொன்னா தப்பில்ல. சாப்பிடுறதுக்காக கொன்னா மட்டும் தான் தப்பு..
இதையும் கேட்டு சண்டை போடுங்க.. 😂😂
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்​

மெய்வேல் பறியா நகும் (774)​

கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.

So, போர்ன்ற பேருல ஒரு உயிரை கொன்னா தப்பில்ல. சாப்பிடுறதுக்காக கொன்னா மட்டும் தான் தப்பு..
இதையும் கேட்டு சண்டை போடுங்க.. 😂😂
Enna ethuku korthu vidureenga.. sandaiya neengale podunga.. keka vendiyatha neengale kelungalen 🤨🤨😀😀
 

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133
Enna ethuku korthu vidureenga.. sandaiya neengale podunga.. keka vendiyatha neengale kelungalen 🤨🤨😀😀
Che che.. Thalai irukkum podhu vaal aada koodadhu.. ungal pinnaal nindru en muzhu aadharavaiyum tharugiren :D
 
Top