கனவு இல்லையென்றால்
நான் எப்போதே இறந்திருப்பேன்..
நான் உன்னோடு வாழ்வதெல்லாம்
கனவுகளில் தானே..!
கனவுகள் எனக்கு பிடிக்கிறது
நீ வந்து அதற்கு அழகு சேர்ப்பதால்..
கண்ணீரும் எனக்கு பிடிக்கிறது..
உனக்காய் அது உதிர்வதால்..
தனிமை எனக்கு பிடிக்கிறது
உன் நினைவுகளோடு
என்றும் வாழ்வதால்..!
என் காதல் கனவு கலையாமல்
இருக்க.. என் நினைவுகளை
தினமும் கலைத்துக்
கொண்டிருக்கிறேன்..!
உறக்கத்தை மறந்து கனவு
காண்பதும்.. கனவில் கண்டதை
உறங்காமல் தவிப்பதும் காதல்..!
நீ என் அருகில் இல்லை என்பது
நிஜம் தான்.. ஆனால் என்
கனவுகளிலும் நினைவுகளிலும்
நீ மட்டும் தான்..!
ஒவ்வொரு நொடியும் உனக்காகவே
பிறந்திருக்கிறது.. உன்னை
நினைப்பதிலேயே அந்த
நொடிகளும் கடந்து போகிறது..
நீ மட்டும் எங்கே செல்கிறாய்
என்னை தவிக்க விட்டு..!
@aNt29
நான் எப்போதே இறந்திருப்பேன்..
நான் உன்னோடு வாழ்வதெல்லாம்
கனவுகளில் தானே..!
கனவுகள் எனக்கு பிடிக்கிறது
நீ வந்து அதற்கு அழகு சேர்ப்பதால்..
கண்ணீரும் எனக்கு பிடிக்கிறது..
உனக்காய் அது உதிர்வதால்..
தனிமை எனக்கு பிடிக்கிறது
உன் நினைவுகளோடு
என்றும் வாழ்வதால்..!
என் காதல் கனவு கலையாமல்
இருக்க.. என் நினைவுகளை
தினமும் கலைத்துக்
கொண்டிருக்கிறேன்..!
உறக்கத்தை மறந்து கனவு
காண்பதும்.. கனவில் கண்டதை
உறங்காமல் தவிப்பதும் காதல்..!
நீ என் அருகில் இல்லை என்பது
நிஜம் தான்.. ஆனால் என்
கனவுகளிலும் நினைவுகளிலும்
நீ மட்டும் தான்..!
ஒவ்வொரு நொடியும் உனக்காகவே
பிறந்திருக்கிறது.. உன்னை
நினைப்பதிலேயே அந்த
நொடிகளும் கடந்து போகிறது..
நீ மட்டும் எங்கே செல்கிறாய்
என்னை தவிக்க விட்டு..!
@aNt29