- Joined
- Jun 14, 2022
- Messages
- 1,898
- Points
- 133
முதல் நாள் பிறை
பிறை ஒன்று உருவானதே..
பிழை ஏதும் அறியாததே..
நான் அழுத அழுகை எல்லாம்,
நால்வருக்கும் சிரிப்பானதே..
தன்னை தாங்கிக்கொள்ள
தாயே கைவிரித்தாயே..
பெண் பிள்ளை என்று ,
சாபம் என நினைத்தாயோ..?
பெருமையின் வரம் என சொல்லி
பாவம் என்று பகைத்தாயோ?
ஆழ்கடலும் அழகானதே..
ஆழ் மனதின் கனவும் அழுகை ஆனதே..
நான் கொடுத்த வலியோ பத்து மாதம் கணக்கோ?..
உன் எண்ணங்களின் வலியோ,
எண்ணிக்கையில் அடங்காததோ?
கனவுகளோடு பிறந்த மகளுக்கு,
கயல் என்ற என் பெயர் மட்டுமே அழகு,
கண்டாங்கி சேலை எல்லாம்,
உன் கண்ணீரில் குளமாகுதோ.
கண் விழித்து பார்த்தேன்..
கனவுகள் பலகோடி,
கண் மூடி அயர்ந்தால்,
கடப்பேன் பல தேடல் தேடி..
பணத்தால் தவிப்பாளோ ?
இல்லை
பாதுகாத்து கொள்ள பறந்திடுவாளோ?
ஏன் இந்த அச்சமோ?
பெண் என்றாலே சூட்சமோ?.
தண்ணீரில் வாழும் மீன்கள்
தவிப்பை நினைப்பது இல்லை,
தவித்தாலும் கூட
தண்ணீரின் தன்மை மாறுவதில்லை..
மீனாக பாரத்தால்
மீளாமல் நீந்துவேன்.
தண்ணீராக பார்த்தால்,
தன்னிலை மாறாமல் இருப்பேன்..
எண்ணத்தில் உள்ளது வண்ணங்கள்,
எண்ணிக்கையில் உள்ளது ஏமாற்றங்கள்..
எதை எடுத்து செல்வது?
எழுதும் தீர்ப்புக்கு இலக்கணம் எதற்கு?
என் தேடல் அழகானது.
எதை தேடும் இயல்பானது..
உன்னை போல் நானும்
உலகத்தில் ஒருநாள் தாய் ஆவேனே..
அதுவரையில் நானும்
உன்னுள்ளே வாழ்வேனே..
பிறை ஒன்று உருவானதே..
பிழை ஏதும் அறியாததே..
நான் அழுத அழுகை எல்லாம்,
நால்வருக்கும் சிரிப்பானதே..
தன்னை தாங்கிக்கொள்ள
தாயே கைவிரித்தாயே..
பெண் பிள்ளை என்று ,
சாபம் என நினைத்தாயோ..?
பெருமையின் வரம் என சொல்லி
பாவம் என்று பகைத்தாயோ?
ஆழ்கடலும் அழகானதே..
ஆழ் மனதின் கனவும் அழுகை ஆனதே..
நான் கொடுத்த வலியோ பத்து மாதம் கணக்கோ?..
உன் எண்ணங்களின் வலியோ,
எண்ணிக்கையில் அடங்காததோ?
கனவுகளோடு பிறந்த மகளுக்கு,
கயல் என்ற என் பெயர் மட்டுமே அழகு,
கண்டாங்கி சேலை எல்லாம்,
உன் கண்ணீரில் குளமாகுதோ.
கண் விழித்து பார்த்தேன்..
கனவுகள் பலகோடி,
கண் மூடி அயர்ந்தால்,
கடப்பேன் பல தேடல் தேடி..
பணத்தால் தவிப்பாளோ ?
இல்லை
பாதுகாத்து கொள்ள பறந்திடுவாளோ?
ஏன் இந்த அச்சமோ?
பெண் என்றாலே சூட்சமோ?.
தண்ணீரில் வாழும் மீன்கள்
தவிப்பை நினைப்பது இல்லை,
தவித்தாலும் கூட
தண்ணீரின் தன்மை மாறுவதில்லை..
மீனாக பாரத்தால்
மீளாமல் நீந்துவேன்.
தண்ணீராக பார்த்தால்,
தன்னிலை மாறாமல் இருப்பேன்..
எண்ணத்தில் உள்ளது வண்ணங்கள்,
எண்ணிக்கையில் உள்ளது ஏமாற்றங்கள்..
எதை எடுத்து செல்வது?
எழுதும் தீர்ப்புக்கு இலக்கணம் எதற்கு?
என் தேடல் அழகானது.
எதை தேடும் இயல்பானது..
உன்னை போல் நானும்
உலகத்தில் ஒருநாள் தாய் ஆவேனே..
அதுவரையில் நானும்
உன்னுள்ளே வாழ்வேனே..