O
Ohmylove
Guest
Engaa indha thread elam poem kanom
Deleted that thread di.. coolEngaa indha thread elam poem kanom
Beautiful ThozhiView attachment 12200
உனக்கான ஓர் கவிதை
இறந்த என் காலத்தில் ...அங்கே எங்கேயாவது இருந்திருக்கிலாம் நீ...
இருப்பில் இருக்கின்றாய்... நெருங்க இயலாமல் இங்கே நான்...
இனிவரும் எனும் யூகத்தில், யுகங்களை நோக்கி ...நீ
ஊகமாக ...,
இங்கேயும் அங்கேயும் அணங்குடன்
நான்....
எங்கே நான் என்று மங்கிவிடாமல் ...,
ஏங்காமல் ...
தூங்காமல் தாங்குகிறேன் உன்னை...
இங்கே இப்போது...
Thanks nanbaBeautiful Thozhi
Vilakamaru matum thana poorikattai dosaikarandiUnnai thangiyaa jeevan onnu velakamathodaa pinndi nikuthu angayaum ingaium
HahahaVilakamaru matum thana poorikattai dosaikarandi
4 um padichen dear onnu onnum adhoda vidhathula avlo azhaga eluthirukkinga
Appo ithukku munnadium yellame nalla irunthirukkum i dont know what made u delete. Ini pannathinga dear oru nalla kavithai delete aga vena
Woww... thanks dearFor all your beautiful poems
View attachment 12221
ஞ் ஞ் ஆக வருகிறதே! இஞ்சி டீ குடித்துவிட்டு எழுதிய கவிதயாதுஞ்சிக் கொள்கிறேன்...
கொஞ்சலுக்குப் பின்
அஞ்சி, கெஞ்சாமல்....
சஞ்சலமில்லாமல் துஞ்சிக் கொள்கிறேன் .......
வஞ்சமில்லா நெஞ்சத்தில் நிச்சலனமாக.....
ஊஞ்சலாட்டி ......
கிஞ்சித்தேனும்
சஞ்சரிக்க ......
கோலாச்சிக்கொள் வஞ்சியென்னை...
மஞ்சத்தில் அல்ல...
மனத்தின் இருப்பிடமான நெஞ்சத்தில்....
......
.......
.....
........
மஞ்சளில் நாண் நனைத்து...
மெய்யஞ்சனமாய் என்னையே உன்னில் பூசிக் கொள்ள ...
மிஞ்சும் வரும் நாள்களில்...
View attachment 12211
ஞ் ஞ் ஆக வருகிறதே! இஞ்சி டீ குடித்துவிட்டு எழுதிய கவிதயா
கவிதை அருமை டாதரிசனம்
சிருஷ்டியின் ஒரு காரணமான சிற்றின்ப சிற்பங்கள் காட்டும் கோபுர தரிசனமல்ல நான்...
நட்பெனும் நடை வாயிலில் நுழைந்து ....
பாலின பருவ ஈர்ப்பினை பலிபீடத்தில் அழித்து...
காதலை கொடிமரத்தில் ஏற்றி..
கரம் குவித்துத் தொழுது ...
நேசத்தை...
நீண்ட பிரகாரங்களில் ..
நெடி கமழும் நெய் தீபத்தில் ...,
நெருப்பு உருவாக்கி நெக்குருகி அமைத்து....
காதலும் காமமும் கடந்து.....
கருவறையில்
கலந்து ......
விமானத்தை வியந்து பார்த்து......
சன்னதியில் சற்றே நிதானிக்கையில்......
நின்னை உணர்த்தும் .......
படைப்பில் ஒளிந்திருக்கும்
ஒரே காரியமான
பேரின்ப பேற்றினை
காட்டும்
தத்துவ தரிசனம் நான்....
View attachment 12230
கவிதை அருமை டா
சிற்றின்பம் கடந்த பேரின்பம்