agamahilan
Well-known member
- Joined
- Feb 5, 2023
- Messages
- 180
- Points
- 83
சிறுகதை - 1
மோட்சம்
மண்ணை முட்டிப் பிறந்த என் தாயார், ஆறு திங்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும், கடும் குளிரிலும் தவம் புரிந்து, என்னுடன் சேர்த்து ஐந்நூறு உயிர்களுக்கு ஜனனம் அளித்தார். ஜனனம் அளித்த சில நாட்களிலேயே சருகாகிச் சரிந்த தாயாரைப் பிரிய மனமில்லாமல், அவர் உடல் ஒட்டியே இருந்தோம்..!
போர் அடித்தல் என்னும் முறையில், ஒரு போரை நடத்தியதால், உறவின் முறைகள் அனைத்தும் சிதறிச் சின்னாபின்னம் ஆனோம். என் உயிர் காக்கும் கவசம் நீக்கி, வருங்கால சந்ததியினருக்கு விதையாகும் பாக்கியம் இழந்தேன். இனி வரும் நாட்களில் நரகவேதனை நிச்சயம் என்பதனை உணர்ந்தேன்..!
கொதிக்கும் வெந்நீரில் வெந்து நொந்தேன், உலர்த்தி உறைத்து, அரைபடும் இயந்திரத்தில் அவலம் அடைந்தேன். இறுதியாக கோணிப் பையில் அடைத்து நாடும் கடத்தப்பட்டேன். இவ்வளவு இன்னல்களை எதிர் நோக்கியபோதும், இன்னோர் உயிர்க்கு உயிர்சக்தியாகப் போகின்றோம் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது..!
நாடு கடத்தப்பட்ட நான், ஒரு வீட்டை அடைந்தேன், மூச்சடைத்த கோணிப்பையில் இருந்து ஒரு குவளையை அடைந்தேன். நன்னீரில் கிடத்தி, என் கசடுகள் நீக்கப்பட்டன. நீர்குமிழிகள் பொங்கும் பானையில் கிடத்தப்பட்ட போது வேதனை அதிகம் இல்லை, ஜனித்த மறுத்தினமே இவ்வேதனையை அனுபவித்தவன் நான் அல்லவா..!
சிறிது நேரத்தில், கல் போன்ற என் தேகம் பஞ்சு போன்று மென்மையாவதை உணர்தேன். மோட்சத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தேன். மிருதுவான என் தேகம் நன்கு பிசையப் பட்டது, பின்னர் சூடான குழம்பை என் மேல் ஊற்றி மீண்டும் நன்கு பிசையப்பட்டேன். மானுடனின் வாய்வரை சென்ற நான், அவன் வயிற்றை அடையவில்லை..!
சிதறி மீண்டும் மண்ணில் வீழ்ந்தேன். வாழ்நாள் முழுவதும் இன்னல்களை அனுபவித்தும், மோட்சம் கிட்டவில்லையே என்று வருந்தினேன். இறுதியில் நான்கு எறும்புகள் என்னைத் தூக்கிச்சென்று, அவர்கள் கூடும்பத்துடன் பசியாறினர்..! மோட்சம் கிட்டியது..!
குறிப்பு : இறுதி பத்தியில் உள்ளபடி, ஒரு காட்சியை நிறைய முறை, நிறைய இடங்களில் பார்த்துள்ளேன். நாம் சாப்பிடும்போது சிதறிய உணவுகளுக்கு எறும்புகள் வருவது இயற்கைதான் என்றாலும், அந்த சிதறிய உணவுக்கு ஒரு மனதிருந்தால், அது எவ்வளவு வேதனைப்படும் என்று எண்ணியபோது தோன்றிய ஒரு சிறுகதை தான் இது. தெரியாமல் சிதறிய உணவுக்கே இவ்வளவு வேதனை இருந்தால், தெரிந்தே வீணாக்கப்படும் உணவுக்கு?? கலப்படம் செய்யப்படும் உணவுக்கு?? சிந்திப்போம்..!
நன்றிகளுடன்,
அகமகிழன்
நகரம் - அடுத்த சிறுகதையைப் படிக்க
மோட்சம்
மண்ணை முட்டிப் பிறந்த என் தாயார், ஆறு திங்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும், கடும் குளிரிலும் தவம் புரிந்து, என்னுடன் சேர்த்து ஐந்நூறு உயிர்களுக்கு ஜனனம் அளித்தார். ஜனனம் அளித்த சில நாட்களிலேயே சருகாகிச் சரிந்த தாயாரைப் பிரிய மனமில்லாமல், அவர் உடல் ஒட்டியே இருந்தோம்..!
போர் அடித்தல் என்னும் முறையில், ஒரு போரை நடத்தியதால், உறவின் முறைகள் அனைத்தும் சிதறிச் சின்னாபின்னம் ஆனோம். என் உயிர் காக்கும் கவசம் நீக்கி, வருங்கால சந்ததியினருக்கு விதையாகும் பாக்கியம் இழந்தேன். இனி வரும் நாட்களில் நரகவேதனை நிச்சயம் என்பதனை உணர்ந்தேன்..!
கொதிக்கும் வெந்நீரில் வெந்து நொந்தேன், உலர்த்தி உறைத்து, அரைபடும் இயந்திரத்தில் அவலம் அடைந்தேன். இறுதியாக கோணிப் பையில் அடைத்து நாடும் கடத்தப்பட்டேன். இவ்வளவு இன்னல்களை எதிர் நோக்கியபோதும், இன்னோர் உயிர்க்கு உயிர்சக்தியாகப் போகின்றோம் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது..!
நாடு கடத்தப்பட்ட நான், ஒரு வீட்டை அடைந்தேன், மூச்சடைத்த கோணிப்பையில் இருந்து ஒரு குவளையை அடைந்தேன். நன்னீரில் கிடத்தி, என் கசடுகள் நீக்கப்பட்டன. நீர்குமிழிகள் பொங்கும் பானையில் கிடத்தப்பட்ட போது வேதனை அதிகம் இல்லை, ஜனித்த மறுத்தினமே இவ்வேதனையை அனுபவித்தவன் நான் அல்லவா..!
சிறிது நேரத்தில், கல் போன்ற என் தேகம் பஞ்சு போன்று மென்மையாவதை உணர்தேன். மோட்சத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தேன். மிருதுவான என் தேகம் நன்கு பிசையப் பட்டது, பின்னர் சூடான குழம்பை என் மேல் ஊற்றி மீண்டும் நன்கு பிசையப்பட்டேன். மானுடனின் வாய்வரை சென்ற நான், அவன் வயிற்றை அடையவில்லை..!
சிதறி மீண்டும் மண்ணில் வீழ்ந்தேன். வாழ்நாள் முழுவதும் இன்னல்களை அனுபவித்தும், மோட்சம் கிட்டவில்லையே என்று வருந்தினேன். இறுதியில் நான்கு எறும்புகள் என்னைத் தூக்கிச்சென்று, அவர்கள் கூடும்பத்துடன் பசியாறினர்..! மோட்சம் கிட்டியது..!
குறிப்பு : இறுதி பத்தியில் உள்ளபடி, ஒரு காட்சியை நிறைய முறை, நிறைய இடங்களில் பார்த்துள்ளேன். நாம் சாப்பிடும்போது சிதறிய உணவுகளுக்கு எறும்புகள் வருவது இயற்கைதான் என்றாலும், அந்த சிதறிய உணவுக்கு ஒரு மனதிருந்தால், அது எவ்வளவு வேதனைப்படும் என்று எண்ணியபோது தோன்றிய ஒரு சிறுகதை தான் இது. தெரியாமல் சிதறிய உணவுக்கே இவ்வளவு வேதனை இருந்தால், தெரிந்தே வீணாக்கப்படும் உணவுக்கு?? கலப்படம் செய்யப்படும் உணவுக்கு?? சிந்திப்போம்..!
நன்றிகளுடன்,
அகமகிழன்
நகரம் - அடுத்த சிறுகதையைப் படிக்க
Last edited: