What's new

சில பாடல்கள்........💕💕💕 💘

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 6

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
நெஞ்செல்லாம் நின்றாயே.....



நீ நெஞ்செல்லாம் நின்றாயே
நினைவெல்லாம் வென்றாயே
எனை விட்டு சென்றாயே
நீங்காமலே
கண் முன்னே வந்தாயே
கண்ணெல்லாம் நின்றாயே
கனவாக கலைந்தாயே

தொலைத்தாலும்
அந்த வானம் தொலையாது
அது போலே
நம் காதல் மாறாது

எனை விட்டு போனாலும்
நம் பந்தம் போகாது
உயிர் செத்து போனாலும்
நம் சொந்தம் மாறாது

மனம் என்ன சொன்னாலும்
அது உன்னை மறவாது
ஒரு காயம் மறைந்தாலும்
அதன் தழும்போ மறையாது
ஹோ ஹோ ஹோ ஓஒ

நட்பில் வரும் சொந்தங்கள்
பிரிந்தால் அது பிரிந்ததுதான்
உறவில் வரும் சொந்தங்கள்
பிரிந்தால்கூட பிரியாது
அந்த உறவை மாற்ற முடியாது

பள்ளம் ஒன்றில் விழுந்தால்தான்
உயிரும் பிரியுமடி
உள்ளம் அது உடைந்தால்தான்
துயரம் புரியுமடி

நீ நெஞ்செல்லாம் நின்றாயே
நினைவெல்லாம் வென்றாயே
எனை விட்டு சென்றாயே
நீங்காமலே
கண் முன்னே வந்தாயே
கண்ணெல்லாம் நின்றாயே
கனவாக கலைந்தாயே
Liked this stanza
நட்பில் வரும் சொந்தங்கள்
பிரிந்தால் அது பிரிந்ததுதான்
உறவில் வரும் சொந்தங்கள்
பிரிந்தால்கூட பிரியாது
அந்த உறவை மாற்ற முடியாது
 
M

Mathangi

Guest
Liked this stanza
நட்பில் வரும் சொந்தங்கள்
பிரிந்தால் அது பிரிந்ததுதான்
உறவில் வரும் சொந்தங்கள்
பிரிந்தால்கூட பிரியாது
அந்த உறவை மாற்ற முடியாது
aamanga
 
M

Mathangi

Guest
பட்டக் பட்டக்.......ஜி.வி. பிரகாஷ்.....❤️❤️❤️

 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்....

Very nice 👌 , hats off to the team, elarume Sinhalese ah irukanga, sogamana feelings kuda sirichute padiralam pola... Iyooo saamy nee enaku venam 🙏, aala vitta podhum 🤭
 
M

Mathangi

Guest
Very nice 👌 , hats off to the team, elarume Sinhalese ah irukanga, sogamana feelings kuda sirichute padiralam pola... Iyooo saamy nee enaku venam 🙏, aala vitta podhum 🤭
Hmm amanga nalla irukkula song-u☺
 
M

Mathangi

Guest
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே....😍😍


அது உனக்கு இது எனக்கு
இதயங்கள் போடும் தனி கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு
உடல்களும் போடும் புதிர் கணக்கு

உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார்
கடைசியில் அவனே முடிவு செய்வான்

பழிபோடும் உலகம் இங்கே
பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று
அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகமென்று
நாமும் சேர்த்து நடித்திருப்போம்

பல முகங்கள் வேண்டும்
சரி மாட்டிக்கொள்வோம்
பல திருப்பம் தெரியும்
அதில் திரும்பிக்கொள்வோம்
கதை முடியும் போக்கில் அதை
முடித்துக்கொள்வோம்

மறுபிறவி வேண்டுமா.....😍😍
 
Last edited by a moderator:

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே....😍😍

சரி பல முகங்கள் வேணும் அதை மாட்டிக் கொள்வோம்.
 
M

Mathangi

Guest
வா வாத்தி..... G.V. ♥♥


ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த
ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த


காதலிக்க கைடு இல்ல
சொல்லி தர வா வாத்தி
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அள்ளி தர வா வாத்தி
என் உசுர உன் உசுரா
தாரேன் கை மாத்தி


அடியாத்தி இது என்ன ஃபீலு
உன்னால நான் ஃபெயிலு
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு.
...😍😍

உன் பேர தினம் கூவும்
குயிலா ஆனேன் நான்
நீ பாக்க புது மாரி
ஸ்டைலா ஆனேன் நான்


பாக்கெட்டில் உன் ஹீரோ பேனா
ஆனேன் நான்
மனசார உன்னோட ஃபேனா
ஆனேன் நான்

கொஞ்சம் பார்க்கணும்
கைகள் கோர்க்கணும்
ஜோடி சேர்ந்து லவ்வர்ஸாக
ஊர சுத்தணும்
பேண்டு வாசிச்சு
கிரேண்டா மேரேஜு
கெட்டி மேளம் எங்கும் கேக்கணும்
 
Last edited by a moderator:
M

Mathangi

Guest
என்னுள்ளே என்னுள்ளே......


கண்ணிரண்டில் நூறு
வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ
நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்

மெய் சிலிர்க்கும் வண்ணம்
தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம்
தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு
ஏங்கினேன் நான்

என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்
 
M

Mathangi

Guest
தஞ்சாவூரு மண்ணு எடுத்து......


மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு
பட்டுக் கன்னம் செஞ்ச
மண்ணு அது பொன்னூரு

காது செஞ்ச மண்ணு அது மேலூரு
அவ உதடு செஞ்ச மண்ணு
மட்டும் தேனூரு

கருப்புக் கூந்தல் செஞ்சது
கரிசப்பட்டி மண்ணுங்க
தங்கக் கழுத்து செஞ்சது
சங்ககிரி மண்ணுங்க

வாயழகு செஞ்சதெல்லம்
வைகையாத்து மண்ணுங்க
பல்லழகு செஞ்சது
முல்லையூரு மண்ணுங்க

நெத்தி செய்யும் மண்ணுக்கு
சுத்தி சுத்தி வந்தேங்க
நிலாவில் மண்ணெடுத்து
நெத்தி செஞ்சேன் பாருங்க

தங்கவயல்
மண்ணெடுத்தேன் தோளுக்கு
நான் தாமரப்பாடி
மண்ணெடுத்தேன் தனத்துக்கு

வாழையூத்து
மண்ணெடுத்தேன் வயித்துக்கு
அட கஞ்சனூரு
மண்ணெடுத்தேன் இடுப்புக்கு

காஞ்சிபுரம் வீதியில
மண்ணெடுத்தேன் கைகளுக்கு
ஸ்ரீரங்கம் மண்ணெடுத்தேன்
சின்னப்பொண்ணு வெரலுக்கு

பட்டுக்கோட்டை ஓடையில
மண்ணெடுத்தேன் காலுக்கு
பாஞ்சாலங்குறிச்சியில
மண்ணெடுத்தேன் நகத்துக்கு

ஊரெல்லாம் மண்ணெடுத்து
உருவம் தந்தேன் உடம்புக்கு
என் உசுர நான் கொடுத்து
உசுரு தந்தேன் கண்ணுக்கு


Wow ennammaa rasichu ezhuthirukkaaru vairamuthu.....:love:
 
Last edited by a moderator:
M

Mathangi

Guest
என்னை விட்டு உயிர் போனாலும்.......


நீ இல்லா நேரம்
அது நிலவே இல்லா வானமே
இரண்டும் இருண்டு போகும்
சிறு வெளிச்சம் தேடி ஓடுமே

உன்னில் துலைந்த என்னை
உடனே மீட்டுகொடு
இல்லை என்னுள் நீயும்
அழகாய் உடனே துலைந்துவிடு

கடல் மண் போல் நீ
என்னை உதறி சென்றாலுமே வருவேன்
அலைகள் போலே நான் திரும்ப திரும்ப
உன் பின்னே வருவேன் வருவேன்

உன்னை தேடி அலைகின்றேனே
எங்க சென்றாயோ
சிறு பிள்ளை போலே அழுகின்றேனே
திருப்பி வருவாயோ

விழியோரம் வழியும் கண்ணீருக்கு
வலிகள் ஆயிரம்
அந்த வலிகளை துடைக்க பிறந்தவள் நான்டா
நம்புடா நீயும் உன்ன நம்புறேன் நானும்......

என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தர மாட்டேன்

என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
சத்தியமா சொல்லுறேன்டா
உன்னை யாருக்கும் தர மாட்டேன்

Miss you
 
M

Mathangi

Guest
ஹே சீதா உயிர் நுழைய வாசல் தா.....


ஹே ராமா:love::love:
எனை பிரிய வேண்டாமா
ஹே ராமா:love::love:
நிழல் அறிய வேண்டாமா

நாளை நிகழ்ந்திடும் காட்சி ஒன்றை
இன்றே எழுதுகோல் தீட்டுமா
நேற்றே எழுதிய பாடல் ஒன்றை
காலம் நாளையும் மீட்டுமா:love::love:

ரகசிய நெருப்பு ஒன்றென்னுள்ளே
இருக்குமா சும்மா:love::love:

ஓ வலக்கண்ணில் ஊஞ்சலாடும் மயக்கம்
இடக்கண்ணில் தாயமாடும் தயக்கம்
பாவம் நானென பாரடா
என்ன செய்குவேன் கூறடா
கொஞ்சும் சலங்கைகள் விலங்கினால் ஆனால்
என் உலகம் என்னாகும்:love::love:

இரவிலே பேசும் தலையணை
அதற்கு உன் பெயர் சூட்டு நீ
உன்னை நான் கூடும் நாளில்
என் செய்வேன் என்று நான் காட்டினேன்

ஹே ராமா:love::love:
உயிர் உருக வேண்டாமா
நான் அள்ளி
அதை பருக வேண்டாமா

என்றும் பிரிந்திடா வண்ணம்
உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா
பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன்
நிரப்ப உன் நெஞ்சம் தா:love::love:

தனிமையில் உன்னை நான் நீங்காத
உரிமை வேண்டும் தா
:love::love:
 
Last edited by a moderator:
M

Mathangi

Guest
புதிய உலகை புதிய உலகை......


பிரிவில் தொடங்கி பூத்ததை
பிரிவில் முடிந்து போகிறேன்
மீண்டும் நான் மீள போகிறேன்
தூரமாய் வாழ போகிறேன்

புதிய உலகை புதிய உலகை
தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில்
நினைவை கரைத்து
ஓடி போகிறேன் என்னை விடு

மார்பில் கீறினாய்
ரணங்களை வரங்களாக்கினாய்
தோளில் ஏறினாய்
எனை இன்னும் உயரமாக்கினாய்

உன் விழி போல
மண்ணில் எங்கும்
அழகு இல்லை என்றேன்
உன் விழி இங்கு கண்ணீர் சிந்த
விலகி எங்கே சென்றேன்
மேலே நின்று
உன்னை நாளும் காணும் ஆசையில்

யாரும் தீண்டிடா இடங்களில்
மனதை தீண்டினாய்
யாரும் பார்த்திடா சிரிப்பை
என் இதழில் தீட்டினாய்

உன் மனம் போல
விண்ணில் எங்கும் அமைதி
இல்லை என்றேன்
உன் மனம் இன்று வேண்டாம் என்றே
பறந்து எங்கே சென்றேன்
வேறோர் வானம் வேறோர் வாழ்க்கை
என்னை ஏற்குமா?
 
Top