What's new

பாம்பு ஒன்று படைத்தவன் இடம் கேட்ட கேள்வி

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
இறைவா..

என்னை விஷம் என்றும் ,
கொடியவன் என்றும் ,
ஊரார் பார்க்க பயமுறுத்தி வைத்தாய்..

கண்ணில் பட்டால் பயந்து ஓடவும்,
கண்டால் கல் அடி வாங்கவும்,
காண்போருக்கு எமனாக மாற்றினாய்..

என் உயிரை காப்பாற்றிக்கொள்ள நான் என்ன செய்வது?

மனிதனை மனிதனே அடித்துக்கொண்டு வாழ்கிறானே?
அவனை விடவா நான் கொடியவன்..

ஊர் உண்ணியாய் வாழும் எங்களுக்கு,
ஊரார் வைத்த பெயர்கள் எத்தனை?..
எங்களுக்குள் ஜாதிகள் எத்தனை?
இதை பிரித்து பார்த்ததும்
நீ படைத்த மனிதப்பிறவிதானே?

தோல் உரித்தாலும் என் பெயர் " பாம்பு" தான்.
போலி முகங்கள் எத்தனை உரித்தாலும்,
அவனுக்கு மட்டும் "மனிதனின் இயல்பு"என்ற மகுடம் ஏன்?

ஆட்டை கடித்து, மாட்டை கடித்தால்
"நான் கொடியவன்" என்றால்,
அதையே அடித்து சாப்பிடும் அவன் யார்? உத்தமன் தானா?

என்னை வித்தை காட்டி பிழைப்பவர்களும் உண்டு..
என்னை தெய்வமாக தரிசனம் செய்பவர்களும் உண்டு..

உணவே மருந்து என்றால்
என் விஷம் கூட பலவகை மருந்துதான்..


சிறார்களை கொடுமைப்படுத்தி,
சிறார்களை பாலியல் வன்முறைக்கி ஆளாக்கி ,
சிதைத்து விடும் கொடியவர்கள் விடவா நான் கொடியவன்..

நான் கொடியவன்தான்.
ஆனால்
என்னை விட மிக கொடியவன் உண்டு இங்கே


நல்லவேளை எனக்கு விஷத்தை கொடுத்தாய்..

இல்லை என்றால்

நானும் மனிதன் ஆயிருப்பேன் "
speckled-rattlesnake-653642_640.jpg
 
Last edited:

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
போலி முகங்கள் எத்தனை உரித்தாலும்,
"மனிதனின் இயல்பு"என்ற மகுடம் ஏன்?

👏🏼👏🏼👏🏼
As usual உங்க signature கவி
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
இறைவா..

என்னை விஷம் என்றும் ,
கொடியவன் என்றும் ,
ஊரார் பார்க்க பயமுறுத்தி வைத்தாய்..

கண்ணில் பட்டால் பயந்து ஓடவும்,
கண்டால் கல் அடி வாங்கவும்,
காண்போருக்கு எமனாக மாற்றினாய்..

என் உயிரை காப்பாற்றிக்கொள்ள நான் என்ன செய்வது?

மனிதனை மனிதனே அடித்துக்கொண்டு வாழ்கிறானே?
அவனை விடவா நான் கொடியவன்..

ஊர் உண்ணியாய் வாழும் எங்களுக்கு,
ஊரார் வைத்த பெயர்கள் எத்தனை?..
எங்களுக்குள் ஜாதிகள் எத்தனை?
இதை பிரித்து பார்த்ததும்
நீ படைத்த மனிதப்பிறவிதானே?

தோல் உரித்தாலும் என் பெயர் " பாம்பு" தான்.
போலி முகங்கள் எத்தனை உரித்தாலும்,
அவனுக்கு மட்டும் "மனிதனின் இயல்பு"என்ற மகுடம் ஏன்?

ஆட்டை கடித்து, மாட்டை கடித்தால்
"நான் கொடியவன்" என்றால்,
அதையே அடித்து சாப்பிடும் அவன் யார்? உத்தமன் தானா?

என்னை வித்தை காட்டி பிழைப்பவர்களும் உண்டு..
என்னை தெய்வமாக தரிசனம் செய்பவர்களும் உண்டு..

உணவே மருந்து என்றால்
என் விஷம் கூட பலவகை மருந்துதான்..


சிறார்களை கொடுமைப்படுத்தி,
சிறார்களை பாலியல் வன்முறைக்கி ஆளாக்கி ,
சிதைத்து விடும் கொடியவர்கள் விடாவா நான் கொடியவன்..

நான் கொடியவன்தான்.
ஆனால்
என்னை விட மிக கொடியவன் உண்டு இங்கே


நல்லவேளை எனக்கு விஷத்தை கொடுத்தாய்..

இல்லை என்றால்

நானும் மனிதன் ஆயிருப்பேன் "
View attachment 17293
😍👌 மாமா செம 🙏👌👌
 
Top