- Joined
- Jun 14, 2022
- Messages
- 1,902
- Points
- 133
" ஆலமர விழுதிலே...
ஆனந்தமாய் ஊஞ்சல் ஆடினோம்.
ஆகாயத்தில் சத்தம் கேட்டதும்
அண்ணார்ந்து கையை ஆட்டினோம்..
பாலில் இல்லை கலப்படம்..
பருகி விட்டு ஓடினோம்..
பட்டுபூச்சி பார்த்ததும்..
பதுங்கி அதையும் தேடுவோம்...
ஆற்றின் மணலில் குடிசைக்கட்டி..
அதிலே குடியும் ஏறுவோம்...
ஆழம் ஒன்றை தோண்டி விட்டு..
அதிலே கால்களை மறைத்திடுவோம்..
வட்டமான தட்டெடுத்து...
வட்ட நிலவை அதில் வைத்து..
நிலாச்சோறு சாப்பிடுவோம்..
நிம்மதியாக உறங்கிடுவோம்...
காவல் சேவல் எழுப்பியதும்...
காலை சூரியனுக்கு வணக்கம் செலுத்திடுவோம் ...
வாசலில் உள்ள கோலத்தினை..
வட்டம் அடித்து கலைத்திடுவோம்...
சைக்கிள் என்றால் உயிர் என்போம்..
சைக்கிள் டயரில் ஊரை சுற்றி வந்தோம்...
சைகைகளை காட்டிக்கொண்டு
சந்தில் வேகத்தில் பறந்திடுவோம்...
கிணற்று நீரில் மிதந்து வந்தோம்..
கிணற்று தவளையை பிடித்து வந்தோம்..
கிளிகள் பல வளர்த்து வருவோம்...
கிழிந்த சட்டையில் வீடு வந்தோம்..
மயில் குட்டி போடும் என்று..
மயிலின் தோகை சேர்த்து வைப்போம்..
மதிய உணவு வேலையிலே...
மறைத்து அதையும் பார்த்திடுவோம்...
கண்ணாமூச்சி ஆட்டத்திலே..
கட்டிலுக்கு அடியில் மறைந்திடுவோம்...
காட்டிக்கொடுக்க ஒருவன் உண்டு...
கட்ட பஞ்சாயத்து நடத்திடுவோம்...
அம்மா தந்த உருண்டைப்பிடி சோற்றில்
ஆயுள் முழுக்க பசி மறந்தோம்..
அப்பா தந்த அறிவுரைதான்
ஆசிர்வாதம் என ஏற்றுக்கொள்வோம்..
பிள்ளை நிலாக்கள் வளர்ந்துவிட்டோம்...
பிரிந்து சென்று தேசம் கடந்து விட்டோம்...
பிணைய கைதிகளாய் வாழ்ந்துக்கொண்டு,
இணைய இணைப்பில் பகிர்ந்துக் கொண்டோம்...
தேவைக்காக ஓடிவிட்டோம்..
தேவதைகளை மணந்து விட்டோம்...
தேடி தேடி சேர்த்து வைத்த
தேன் கூட்டினை கலைத்துவிட்டோம்....
ஆனந்தமாய் ஊஞ்சல் ஆடினோம்.
ஆகாயத்தில் சத்தம் கேட்டதும்
அண்ணார்ந்து கையை ஆட்டினோம்..
பாலில் இல்லை கலப்படம்..
பருகி விட்டு ஓடினோம்..
பட்டுபூச்சி பார்த்ததும்..
பதுங்கி அதையும் தேடுவோம்...
ஆற்றின் மணலில் குடிசைக்கட்டி..
அதிலே குடியும் ஏறுவோம்...
ஆழம் ஒன்றை தோண்டி விட்டு..
அதிலே கால்களை மறைத்திடுவோம்..
வட்டமான தட்டெடுத்து...
வட்ட நிலவை அதில் வைத்து..
நிலாச்சோறு சாப்பிடுவோம்..
நிம்மதியாக உறங்கிடுவோம்...
காவல் சேவல் எழுப்பியதும்...
காலை சூரியனுக்கு வணக்கம் செலுத்திடுவோம் ...
வாசலில் உள்ள கோலத்தினை..
வட்டம் அடித்து கலைத்திடுவோம்...
சைக்கிள் என்றால் உயிர் என்போம்..
சைக்கிள் டயரில் ஊரை சுற்றி வந்தோம்...
சைகைகளை காட்டிக்கொண்டு
சந்தில் வேகத்தில் பறந்திடுவோம்...
கிணற்று நீரில் மிதந்து வந்தோம்..
கிணற்று தவளையை பிடித்து வந்தோம்..
கிளிகள் பல வளர்த்து வருவோம்...
கிழிந்த சட்டையில் வீடு வந்தோம்..
மயில் குட்டி போடும் என்று..
மயிலின் தோகை சேர்த்து வைப்போம்..
மதிய உணவு வேலையிலே...
மறைத்து அதையும் பார்த்திடுவோம்...
கண்ணாமூச்சி ஆட்டத்திலே..
கட்டிலுக்கு அடியில் மறைந்திடுவோம்...
காட்டிக்கொடுக்க ஒருவன் உண்டு...
கட்ட பஞ்சாயத்து நடத்திடுவோம்...
அம்மா தந்த உருண்டைப்பிடி சோற்றில்
ஆயுள் முழுக்க பசி மறந்தோம்..
அப்பா தந்த அறிவுரைதான்
ஆசிர்வாதம் என ஏற்றுக்கொள்வோம்..
பிள்ளை நிலாக்கள் வளர்ந்துவிட்டோம்...
பிரிந்து சென்று தேசம் கடந்து விட்டோம்...
பிணைய கைதிகளாய் வாழ்ந்துக்கொண்டு,
இணைய இணைப்பில் பகிர்ந்துக் கொண்டோம்...
தேவைக்காக ஓடிவிட்டோம்..
தேவதைகளை மணந்து விட்டோம்...
தேடி தேடி சேர்த்து வைத்த
தேன் கூட்டினை கலைத்துவிட்டோம்....
Last edited: