agamahilan
Well-known member
- Joined
- Feb 5, 2023
- Messages
- 180
- Points
- 83
குறிப்பு: இது ஒரு சிறுக(வி)தை வடிவம் பெற்ற கற்பனைத் தொகுப்பு, இதில் இடம் பெற்ற ஒவ்வொரு பத்தியும், கதை மற்றும் கவிதை நடையில் நகரும். கதையாக விரிவது என்னுடைய (அகமகிழன்) நடை, கவிதையாக மலர்வது கதாநாயகியின் (மலர்) நடை. வாருங்கள் தோழி மலரைச் சந்திப்போம்..! வாசக நண்பர்களுக்கு என்றென்றும் நன்றிகளுடன் அகமகிழன்..!
இதழ் - 1
மலர், 25 வயது நிரம்பிய பெண், மதி மலரும் மாலை வேளையில், தன் வேலைகளை முடித்துவிட்டு அலுவலகத்தில் இருந்து மின்சார ரயிலில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள். ஜன்னல் ஓரம் அயர்ந்து அமர்ந்திருந்த மலர், தடதடவென ஓடிய ரயிலின் அலாதியான இசையில் கடகடவென தன் கடந்த காலத்தை அசைபோடத் தொடங்கினாள்.
ஆதரவற்றுப் பிறந்த மலர், இரண்டு வயது வரை ஆதரவற்றோர் காப்பகத்தில் ஆதரவின்றி வளர்ந்தாள்.
அனாதைகளின் இல்லமாம்..
அன்னை தந்தை இல்லையாம்..
பெண்ணாய் பிறந்ததைச் சொல்லியே..
இன்னல் என்றும் எண்ணியே..
என்னை தூக்கி எறிந்தராம்..!
சரியான பராமரிப்பு இல்லாத அனாதை இல்லத்தில், அந்த பச்சிளங் குழந்தைக்கு பசிப் மட்டுமே பரிசாய் கிடைத்தது.
மண்ணை அள்ளி உண்டேனாம்..
கல்லைக் கூட கடித்தேனாம்..
பசி என்ற பிணியிலே,
அழுகக் கூட தெம்பின்றி,
புலுவைப் போல சுருண்டேனாம்..!
அனாதை இல்லத்தில் ஆதரவற்று வளர்ந்து வந்த மலரை, ஒரு இளம்பெண் தத்தெடுக்க முடிவு செய்கின்றார். இளம் வயதில் விதவையான அப்பெண், தன் வாழ்க்கையின் ஒரே நம்பிக்கையாக மலரைக் கண்டார்.
மழலை மலர்கள் நடுவிலே..
மலரென்ற பெயரிலே..
மலரைப் போன்ற சிரிப்பிலே..
மலராக மலர்ந்த என்னை..
மனதார ஏற்ற அன்னை..!
மலரைத் தத்தெடுத்த அன்னை,அவளைத் தன் மகளாகவே வளர்த்தார், எந்த ஒரு கண்டிப்பும் கட்டுப்பாடும் இன்றி. மழலைச் சொல் பேச ஆரம்பித்த மலர், குறும்புச் சுட்டியாக மலர்கின்றாள்.
குதூகலமாய் குறும்புத்தனம்..
குட்டிக் குட்டிக் கள்ளத்தனம்..
கலகலவென சிரிப்பு தினம்..
கட்டி உருண்டு சண்டையிடும்..
அடாவடி ஆண்மை குணம்..!
- மலரும்..!
- அகமகிழன்
அடுத்த பாகத்தை படிக்க (இதழ் - 2)
இதழ் - 1
மலர், 25 வயது நிரம்பிய பெண், மதி மலரும் மாலை வேளையில், தன் வேலைகளை முடித்துவிட்டு அலுவலகத்தில் இருந்து மின்சார ரயிலில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள். ஜன்னல் ஓரம் அயர்ந்து அமர்ந்திருந்த மலர், தடதடவென ஓடிய ரயிலின் அலாதியான இசையில் கடகடவென தன் கடந்த காலத்தை அசைபோடத் தொடங்கினாள்.
ஆதரவற்றுப் பிறந்த மலர், இரண்டு வயது வரை ஆதரவற்றோர் காப்பகத்தில் ஆதரவின்றி வளர்ந்தாள்.
அனாதைகளின் இல்லமாம்..
அன்னை தந்தை இல்லையாம்..
பெண்ணாய் பிறந்ததைச் சொல்லியே..
இன்னல் என்றும் எண்ணியே..
என்னை தூக்கி எறிந்தராம்..!
சரியான பராமரிப்பு இல்லாத அனாதை இல்லத்தில், அந்த பச்சிளங் குழந்தைக்கு பசிப் மட்டுமே பரிசாய் கிடைத்தது.
மண்ணை அள்ளி உண்டேனாம்..
கல்லைக் கூட கடித்தேனாம்..
பசி என்ற பிணியிலே,
அழுகக் கூட தெம்பின்றி,
புலுவைப் போல சுருண்டேனாம்..!
அனாதை இல்லத்தில் ஆதரவற்று வளர்ந்து வந்த மலரை, ஒரு இளம்பெண் தத்தெடுக்க முடிவு செய்கின்றார். இளம் வயதில் விதவையான அப்பெண், தன் வாழ்க்கையின் ஒரே நம்பிக்கையாக மலரைக் கண்டார்.
மழலை மலர்கள் நடுவிலே..
மலரென்ற பெயரிலே..
மலரைப் போன்ற சிரிப்பிலே..
மலராக மலர்ந்த என்னை..
மனதார ஏற்ற அன்னை..!
மலரைத் தத்தெடுத்த அன்னை,அவளைத் தன் மகளாகவே வளர்த்தார், எந்த ஒரு கண்டிப்பும் கட்டுப்பாடும் இன்றி. மழலைச் சொல் பேச ஆரம்பித்த மலர், குறும்புச் சுட்டியாக மலர்கின்றாள்.
குதூகலமாய் குறும்புத்தனம்..
குட்டிக் குட்டிக் கள்ளத்தனம்..
கலகலவென சிரிப்பு தினம்..
கட்டி உருண்டு சண்டையிடும்..
அடாவடி ஆண்மை குணம்..!
- மலரும்..!
- அகமகிழன்
அடுத்த பாகத்தை படிக்க (இதழ் - 2)
Last edited: