முதல எல்லாம் யார்கிட்டயாச்சும் பேசணும் கூட இருக்கனும் னு தோணும் ஆன இப்போ எல்லாம் தனியா இருக்குறது தான் புடிச்சு இருக்கு
Alone time epo kedaikum nu iruku...
Yaravathu 5 mins mela pesuna kuda andha idathaa vitu odiduren... Kavanikurathu ila
Y?? Any one had this phase???
தனிமையில் இனிமை காண ஆரம்பிச்சிட்ட நீ.
நிம்மதியா தனியா சிந்திக்கறது, ஒரு coffee போட்டு குடிச்சிட்டு புத்தகம் படிக்கிறது, நிறைய திட்டங்கள் யோசிக்கறது இப்படி உனக்கே உனக்கான ஒரு நேரத்தை ஒதுக்குவது.
எப்பவுமே ஏதாவது வேலை செய்றவங்க கூட இந்த தனிமையான ஒன்றை அனுபவிப்பாங்க. வேலை செய்றப்போ கூட தனிமை தேவைப்படும் யோசிக்க.
பேச மட்டும் தான் பிடிக்காது. தனக்குள் பேசக்கூடிய ஒரு அனுபவம். கற்பனைகள் நிறைய வரும்.
இது அவசியமான ஒன்னு. அப்பப்போ இப்படி தோனும். நல்லது தான்.
எத்தனை பேர் routine life style ல இருந்து தப்பிச்சு, தனியா எங்காவது போயி அமைதியா இருக்க விரும்புறாங்க.
நானெல்லாம் எப்போதும் தனிமையை விரும்புவேன். 1000 பேர் இருந்தாலும் அந்த தனிமையை உணர முடியும். வருடத்திற்கு ஒரு முறை 11 நாள்கள் மெளன விரதம் தொடர்ந்து இருக்கக் கூடிய, எந்த தொடர்பும் இல்லாத இடத்தில், கண்களை கூட பார்த்து பேசிட முடியாத ஒரு வகை தியான பயிற்சிக்கு, இந்தியாவில் எந்த மூலைக்காவது போய்டுவேன் சத்தங்களில் தப்பிக்க.
உனக்கு ஏன் இப்படி இப்போ இருக்குதுனா, வாழ்க்கையில் பற்று குறைந்திருக்கும். யாரும் தேவையில்லை அப்டினு ஒரு சின்ன விரக்தி எட்டி பாத்திருக்கும். அல்லது உனக்கான ஒரு இடத்தை நீ தேடுற.
பொறுப்புகளில் ஓடிக் களைத்து கொஞ்சம் ஆசுவாசப்படற மாதிரி மனிதர்களிடம் பேச முடியாம அமைதி தேடறது. ஆரோக்கியமானதுதான். 5 நிமிடங்களுக்கு மேல பேச அப்படி என்ன இருக்கு . சுவாரஸ்யமானதா தெரியாது எதுவுமே.
இது எல்லாருக்கும் அப்பப்போ நடக்கும்.
Netflix, prime, hotstar , books, games, cooking nu தனியா இருக்க பிடிக்கும் சில பேருக்கு.. பேச யாரும் தேவை இருக்காது.
இத படிக்கக் கூட உனக்கு பொறுமை இருக்காது if I am right.