- Joined
- Jan 3, 2022
- Messages
- 2,314
- Points
- 153
வணக்கம்!!
கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி முதல் பாதியை படிக்கவும்.
"கொடுங் கூற்றுக்கு இரையாகி மாள்வேன் என்று நினைத்தாயோ"
என்று இடுப்பில் கை வைத்து காளியிடம் பாரதி கேள்வி கேட்கிறார் என்று முந்தைய பதிவில் பார்த்தோம்.
காளி கேட்டிருப்பாள்... (கற்பனை)
"உனக்கு எப்படித் தெரியும் நீயும் அப்படி ஒரு வேடிக்கை மனிதராய் மாறமாட்டாய் என்று?"
பாரதி: எனக்குத் தெரியும் ஏன் என்றால், நான் உன்னிடம் சில வரங்கள் கேட்பேன். அவற்றை நீ எனக்குத் தருவாய். அதன் மூலம் நான் மற்ற மனிதர்களை போல ஆக மாட்டேன்
காளி : அப்படி என்ன வரங்கள் கேட்கப் போகிறாய்?
பாடல்:
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் -
அவைநேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -
இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதுங் கவலையறச் செய்து -
மதிதன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
முன் பிறவியில் செய்து, அப்போது தீர்க்காமல் தொடர்ந்து வருவது. இதை வினைப்பயன் என்று சொல்கிறார்கள்.
இந்தப் பிறவியில் செயல்படத் தொடங்கும் வினைகள். இதற்கு இவ்வினை என்று பெயர்.
இந்த இரண்டும் சேர்ந்து, இந்தப் பிறவியில் கழிக்காமல் அடுத்த பிறவிக்கு கொண்டு செல்வதும் உண்டு என்கின்றனர்.
எனவே பாரதி முதலில் அதை வேண்டுகிறார்
"என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -
இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -"
இனியும் அது தொடர கூடாது என்று.
"இனி என்னைப் புதிய உயிராக்கி "
எப்போதும் பழமையிலேயே கிடந்து உழல்கிறோம். பழைய பஞ்சாங்களை கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கிறோம். வேதத்தில் அப்படி சொல்லி இருக்கிறது, புராணத்தில் இப்படி சொல்லி இருக்கிறது என்று இறந்த காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
பாரதி சொல்கிறார்,
"என்னை உயிராக ஆக்கி" என்று.
அடுத்தது,
" எனக்கேதுங் கவலையறச் செய்து -"
கவலை அறவே இல்லாமல் செய்து விடு என்கிறார்.
கவலை இல்லாமல் எப்படி இருப்பது?
"மதிதன்னை மிகத் தெளிவு செய்து -"
அறிவு தெளிவு இல்லாமல் இருப்பதுதான் அனைத்து கவலைகளுக்கும் காரணம். குழப்பமே எல்லா கவலைகளுக்கும் காரணம்.
மதி தெளிவாகிவிட்டால் கவலை தீர்ந்து விடும்.
என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
கவலை போனால் மட்டும் போதாது. அதோடு சேர்ந்து சந்தோஷமும் போய் விட்டால் என்ன செய்வது?
என்னவே, கவலை போகட்டும், சந்தோஷம் இருக்கட்டும் என்று வேண்டுகிறார்.
நாமும்_வேண்டுவோமா????
ஆண்டவனிடம் இப்படி அதிகாரமாக கேட்கலாமா? ஒரு பணிவு வேண்டாம்?
பக்தி வேண்டாம்?
பாரதியைப் போல ஆண்டவனிடம் அதட்டிக் கேட்டது யாராவது உண்டா ?
முற்றும்!
கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி முதல் பாதியை படிக்கவும்.
வீழ்வேன் என்று நினைத்தாயோ!! - 1
வணக்கம்!! அனைவருக்கும் பாரதியாரின் " தேடிச் சோறு நிதம் தின்று" பாடல் தெரிந்திருக்கும். அப்படி தெரியவில்லை என்றாலும் " வீழ்வேன் என்று நினைத்தாயோ" இந்த வரி தெரிந்திருக்கும் 😃😃 இப்பாடலின் வரிகளை பார்ப்போம்! தேடிச் சோறுநிதந் தின்று — பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம் வாடித் துன்பமிக உழன்று —...
www.chat2friends.com
"கொடுங் கூற்றுக்கு இரையாகி மாள்வேன் என்று நினைத்தாயோ"
என்று இடுப்பில் கை வைத்து காளியிடம் பாரதி கேள்வி கேட்கிறார் என்று முந்தைய பதிவில் பார்த்தோம்.
காளி கேட்டிருப்பாள்... (கற்பனை)
"உனக்கு எப்படித் தெரியும் நீயும் அப்படி ஒரு வேடிக்கை மனிதராய் மாறமாட்டாய் என்று?"
பாரதி: எனக்குத் தெரியும் ஏன் என்றால், நான் உன்னிடம் சில வரங்கள் கேட்பேன். அவற்றை நீ எனக்குத் தருவாய். அதன் மூலம் நான் மற்ற மனிதர்களை போல ஆக மாட்டேன்
காளி : அப்படி என்ன வரங்கள் கேட்கப் போகிறாய்?
பாடல்:
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் -
அவைநேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -
இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதுங் கவலையறச் செய்து -
மதிதன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
முன் பிறவியில் செய்து, அப்போது தீர்க்காமல் தொடர்ந்து வருவது. இதை வினைப்பயன் என்று சொல்கிறார்கள்.
இந்தப் பிறவியில் செயல்படத் தொடங்கும் வினைகள். இதற்கு இவ்வினை என்று பெயர்.
இந்த இரண்டும் சேர்ந்து, இந்தப் பிறவியில் கழிக்காமல் அடுத்த பிறவிக்கு கொண்டு செல்வதும் உண்டு என்கின்றனர்.
எனவே பாரதி முதலில் அதை வேண்டுகிறார்
"என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -
இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -"
இனியும் அது தொடர கூடாது என்று.
"இனி என்னைப் புதிய உயிராக்கி "
எப்போதும் பழமையிலேயே கிடந்து உழல்கிறோம். பழைய பஞ்சாங்களை கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கிறோம். வேதத்தில் அப்படி சொல்லி இருக்கிறது, புராணத்தில் இப்படி சொல்லி இருக்கிறது என்று இறந்த காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
பாரதி சொல்கிறார்,
"என்னை உயிராக ஆக்கி" என்று.
அடுத்தது,
" எனக்கேதுங் கவலையறச் செய்து -"
கவலை அறவே இல்லாமல் செய்து விடு என்கிறார்.
கவலை இல்லாமல் எப்படி இருப்பது?
"மதிதன்னை மிகத் தெளிவு செய்து -"
அறிவு தெளிவு இல்லாமல் இருப்பதுதான் அனைத்து கவலைகளுக்கும் காரணம். குழப்பமே எல்லா கவலைகளுக்கும் காரணம்.
மதி தெளிவாகிவிட்டால் கவலை தீர்ந்து விடும்.
என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
கவலை போனால் மட்டும் போதாது. அதோடு சேர்ந்து சந்தோஷமும் போய் விட்டால் என்ன செய்வது?
என்னவே, கவலை போகட்டும், சந்தோஷம் இருக்கட்டும் என்று வேண்டுகிறார்.
நாமும்_வேண்டுவோமா????
ஆண்டவனிடம் இப்படி அதிகாரமாக கேட்கலாமா? ஒரு பணிவு வேண்டாம்?
பக்தி வேண்டாம்?
பாரதியைப் போல ஆண்டவனிடம் அதட்டிக் கேட்டது யாராவது உண்டா ?
முற்றும்!