ஒரு இளம் பெண் (simran என வைத்துக் கொள்வோம்) சாலை விபத்தில் இறந்து போகிறாள்..
இவள் இறப்பதற்க்கு முன்பு நான்கு பேர் அவளை, ஒருதலையாக காதலித்து வந்தனர்..
அவர்கள் அனைவரும் அந்த பெண் இறந்த பின்பு அவளுக்காக என்ன செய்தார்கள் என்று கொடுக்கப் பட்டு உள்ளது..
1.வழக்கறிஞர் (lawyer) :
சாலை விதிகளை மீறி , குடி போதை யில் வண்டி ஓட்டி சிம்ரனை கொன்றவனுக்கு சிறை தண்டனை வாங்கி கொடுத்தார்..
2. கட்டிட வடிவமைப்பாளர் (Architect):
ஷாஜகான் கட்டிய தாஜ் மஹாலை போல ஒரு அழகான நினைவுக் கல்லறையை கட்டி சிம்ரனுக்காக சமர்ப்பித்தான்..
3. கவிஞர் (poet):
இறந்து போன அவளின் நினைவில் உருகிய இவர் அழகழகான கவிதைகளை, சிமரனுக்காகவே எழுதி பல புத்தகங்களை வெளியிட்டார்..
4: மருத்துவர் (Doctoe):
சிம்ரனின் உடலை யாருக்கும் தெரியாமல் கொண்டு வந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, 72மணி நேரத்திற்குள் இயற்கைக்கு மாறாக மீண்டும் உயிர் பெற செய்து விட்டார்..
இப்போது மீண்டும் உயிர் பெற்றுள்ள சிம்ரன் இவர்கள் நால்வரில் யாரை திருமணம் செய்ய வேண்டும்?
அவள் எடுக்கும் தீர்மானம் நீதியானதாக இருக்க வேண்டும்..!!
உங்கள் கருத்துக்களை ஏன் என்ற காரணத்துடன் ORANGE நிறத்தில் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்..
I was not tagged and realize this is an old thread now getting new posts and came up in order.
Anyways here goes some semblance.
அந்த நால்வரும் கொண்ட காதல் உண்மையென்றால் (அப்டின்னா தமிழ்ப்பட கருமாந்திரம் இல்லைம்னு புரிந்துகொள்ளவும்) கைமாறு எதிரார்க்காமல் இருக்கலாம் குறைந்த பட்ச மனித தரத்தில்.
அநியாயமாக உயிரிழந்த தன் உயிர் காதலிக்காக தத்தமது துறையில் தம்மால் இயன்ற அளவு முயன்று உளப்பூர்வமாக தங்கள் பங்களிப்பை அர்ப்பணிப்போடு செய்திருக்கின்றனர். இதிலே ஒன்றே ஒன்று கட்டடம் கட்டுவது தமிழ்ச்சினிமாத்தனமான சுத்த பேத்தல். போன உயிரை திரும்ப கொண்டுவருவது அறிவுக்கு பொருந்த வில்லையென்றாலும் ஒரு கடினமான காம்ப்ளிக்கேட்டட் அறுவைசிகிட்சை செய்து காப்பாற்றினார் என்றும் கருதிக்கொள்ளலாம். அது கிட்டத்திட்ட உயிர் கொடுத்ததற்கு சமம் தான். நிற்க.
இச்செயல்களைக் கொண்டு இவர்கள் காதலை எடை போடுவது முட்டாள்தனம். ஏனென்றால் அவரவர் அந்த பெண்ணை எவ்வளவு உண்மையாக தீவிரமாக விரும்பினர் என்பதை பொருத்ததே ஒழிய அவர்கள் செய்த செய்கையாலோ அவள் அடைந்த பயனாலோ கூட இல்லை. இதுவும் போகட்டும்.
இதுக்காக அவள் தனது சுயத்தை இழந்து இப்பரந்த உலகத்தில் இருக்கும் அத்தனை ஆண்மகன்களையும் புறம்தள்ளிவிட்டு இந்த 4 பேரில் ஒருத்தனை கட்டிக்கொண்டாக வேண்டும் என்பது எத்தகைய ஆரோக்கியமான எண்ணம்? அவளுக்கென்று ஒரு மனம் இருக்கிறதா இல்லையா என்று கேட்க்கிறேன்? அவளென்ன உயிரற்ற பொம்மையா? இல்லை தமிழ்ப்பட கதாநாயகியா? வந்தவன் போனவையெல்லாம் ஏற்றுக்கொள்ள அவளென்ன பரத்தையா?. என்னமோ கே பாக்கியராஜ் படம் போல் இருக்கு இந்த புதிரும் அவளுடைய சாய்ஸை அந்த நால்வருக்குள் சுருக்குவது. இப்படி ஒரு படம் கூட வந்தது ஒரு பொண்ணுக்கு 4 பேர் போட்டி போடுற மாதிரி. தமிழனெல்லாம் பார்த்து எமுலேட் செய்திட.
உறுவது சீர்துக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர்.
செவுனிலயே அறைஞ்சுட்டார். பாலியல் தொழிலாளிக்கும் திருடர்களுக்கும் சமமாம் குடுத்தது வாங்குனத கணக்கு போட்டு பாக்குற நட்பு. போதுமா?
நான் அவளுடைய விருப்பத்தை மட்டுமே கணக்கிலெடுத்துக் கொண்டேன். மற்றையோர் விருபத்தை சம்மதத்தைக்கூட கணக்கிலெடுத்துக் கொள்ள வில்லை.
இது என்ன மாதிரியான மனோபாவம்? என்ன ஆட்டிட்யூட் பெண்களின் உயிர்களைக் குறித்து? அவர்களின் உணர்வுகளைக் குறித்து? கடைசியில் இவ்வளவு தானா இந்த மண்ணில் பெண் விடுதலையின் லட்சணம்?
பதில் சொன்ன யாருமே அவள் விரும்பியவன் என்று சொல்லவே இல்லை என்பது வியப்பாக இருக்கிறது. அவளுக்கு அந்த நால்வருள் ஒருத்தரை பிடித்திருந்தால் அது ஒரு அழகிய நிகழ்தகவு. அதுக்காக கட்டாயமில்லை அவர்களுள் ஒருவனை தேர்தெடுத்தே ஆக வேண்டும் என்பது. அந்நால்வருள் இல்லாமல் மற்றொருவனை அவள் விரும்பினால் அவள் தற்சுதந்திரத்துடன் அவனை மணந்து கொள்வதே சரியாக இருக்கும்.
பெண்களுக்கும் உயிர் இருக்கிறது. சொந்தமாக தனியாக அவர்கள் மனம் செயல்படும்.