M
Mathangi
Guest
My Better Half's Cute Friend:: Ennavalin arumai Thozhi
என்னவளின் அருமை தோழியே!!
உனைக் காணவே யான் விழைகிறேன்...
விழிகளின் ஈரத்தோடு பார்வை சொல்லும் ஓர் கதை....
அவளின் இன்பத்திலும் துன்பத்திலும் நீயே இருக்கிறாய்...
அவளோ, பேச தெரியா ஊமை போல் மாறுவாள் எனை விடாமல் விட்டு பிரிகையில்.....
கலகலவென செம்பவள முத்தைப்போல சிரித்து பேசும் அவளது வதனத்தில் கண்கள் யாரையோ தேடுவார் போல வாடிய பூவின் கோலம் கொண்டிருப்பாள்....
நீயே !! அவளின் உற்ற தோழி, என் சிந்தனையில் அவளே நிரம்பியுள்ளாள் என்பதனை தெரிவிப்பாயோ!!!
நீயே!! அவளின் உறக்கத்திலும், விழிப்பிலும் நிலைக்கிறாய்...
நான், அவளுடன் இல்லையே என அவள் உள்ளம் வெதும் அந்நேரம் நீயே அவளின் ஆறுதலாய் மாறுகிறாய்....
கொஞ்சம் சிரித்தும் கொஞ்சம் அழுதும் அமுதூட்டும் என்னவளின் ஆர்ருயிர் தோழியே -
அவள் மறந்தும் கூட உனை மறவாள் அன்றோ....
நான் பட்டாளத்தின் போரில் நம்
தேசிய கொடியை நிலைநாட்டி மும் வரை அவளின் கண்ணீர் தன்னை இப்புனித பூமியில் ததும்பாமல் பார்த்துக்கொள்....
எனை தவிர்த்து அவளுக்கோ சொந்தமென்றோ பந்தமென்றோ யாருமில்லை!!!
நீயே!! அவளின் நம்பிக்கை...
நீயே!! அவளின் ஆறுதல்...
நீயே!! அவளின் அடையாளம்...
நீயே!!! புத்தகம் எனும் பெயரில் என் அன்பானவளின் மல்லிகை கைகளின் ரேகையாலும் அவள்தம் அழகிய கண்களின் மணிகளாலும் உணரப்படுகிறாய்....
உனை நான் தான் அவளிடம் கொடுத்தேன் என்றே நினைக்கும் தருணம் சற்றே கண்கள் மல்கினேன்...
என் நினைவு வரும் போதெல்லாம் உனை தீண்டியே அவள் மனமாறுகிறாள்....
என் அன்பு தேவதையின் தோழியே!!!!
என்னவளின் அருமை தோழியே!!
உனைக் காணவே யான் விழைகிறேன்...
விழிகளின் ஈரத்தோடு பார்வை சொல்லும் ஓர் கதை....
அவளின் இன்பத்திலும் துன்பத்திலும் நீயே இருக்கிறாய்...
அவளோ, பேச தெரியா ஊமை போல் மாறுவாள் எனை விடாமல் விட்டு பிரிகையில்.....
கலகலவென செம்பவள முத்தைப்போல சிரித்து பேசும் அவளது வதனத்தில் கண்கள் யாரையோ தேடுவார் போல வாடிய பூவின் கோலம் கொண்டிருப்பாள்....
நீயே !! அவளின் உற்ற தோழி, என் சிந்தனையில் அவளே நிரம்பியுள்ளாள் என்பதனை தெரிவிப்பாயோ!!!
நீயே!! அவளின் உறக்கத்திலும், விழிப்பிலும் நிலைக்கிறாய்...
நான், அவளுடன் இல்லையே என அவள் உள்ளம் வெதும் அந்நேரம் நீயே அவளின் ஆறுதலாய் மாறுகிறாய்....
கொஞ்சம் சிரித்தும் கொஞ்சம் அழுதும் அமுதூட்டும் என்னவளின் ஆர்ருயிர் தோழியே -
அவள் மறந்தும் கூட உனை மறவாள் அன்றோ....
நான் பட்டாளத்தின் போரில் நம்
தேசிய கொடியை நிலைநாட்டி மும் வரை அவளின் கண்ணீர் தன்னை இப்புனித பூமியில் ததும்பாமல் பார்த்துக்கொள்....
எனை தவிர்த்து அவளுக்கோ சொந்தமென்றோ பந்தமென்றோ யாருமில்லை!!!
நீயே!! அவளின் நம்பிக்கை...
நீயே!! அவளின் ஆறுதல்...
நீயே!! அவளின் அடையாளம்...
நீயே!!! புத்தகம் எனும் பெயரில் என் அன்பானவளின் மல்லிகை கைகளின் ரேகையாலும் அவள்தம் அழகிய கண்களின் மணிகளாலும் உணரப்படுகிறாய்....
உனை நான் தான் அவளிடம் கொடுத்தேன் என்றே நினைக்கும் தருணம் சற்றே கண்கள் மல்கினேன்...
என் நினைவு வரும் போதெல்லாம் உனை தீண்டியே அவள் மனமாறுகிறாள்....
என் அன்பு தேவதையின் தோழியே!!!!