- Joined
- Aug 4, 2022
- Messages
- 1,129
- Points
- 133
காதல் வேள்வி (கேள்வி)
ஏன் எனக்குள் இந்த மாயம்? எங்கிருந்து உதயமான தாகம்?
இதுவரை கண்டிராத நேயம்.
ஏன் இந்த இன்பப்பரவசம்? எதற்காக இந்த ஆத்ம பிணைப்பு?
ஏன் இந்தக்கனவை நிஜமாகக் காண்கிறேன்?
தூணையும் , துரும்பையும் தாண்டி , எப்போது நீ என்னுள் கடவுளானாய்?
நொடிக்கொருமுறை, என் நெஞ்சை அழுத்தி, மனதை பிசைந்து ,
ரகசியமாய் என் கண்களில் நீர் பனிக்கும் இந்த அற்புத உணர்வை
என்னென்று சொல்வது?
சரி, தவறு என்ற புரிதலுக்கப்பால், வெகு தொலைவில் நின்று என்னை
நானே அறிய முற்பட்டு தோற்றுப்போகும் இச்சிந்தனையை எப்படி
வர்ணிப்பது?
இதுவரை வாழ்ந்த வாழ்வெல்லாம் இந்த தருணத்திற்கே என்றாற்போல்
ஏன் இத்தனை பூரிப்பு?
இது சாத்தியமில்லை என்று ஆழ அறிந்தும், கை விட மறுக்கும் இந்த
நினைப்பு எதற்காக?
படித்தும், அறிந்தும், கேட்டும், பார்த்த வாழ்வில், இந்த உணர்வு மட்டும்
ஏன் புதிதாய் இருக்கிறது?
என் வாழ்வியல் வருடங்ளை கணக்கில்லாமல் இளமையாக்கிய
இப்பொழுது எப்போது உதயமானது?
எத்தனையோ உன்னதமானவை என் அருகில் இருந்தும், உன்
அருகாமையை மட்டும் நாடும் இந்த பரிதவிப்பை என்னென்று அறிய?
பார்காவிடினும் பார்த்தது போலவும், பேசாவிடினும் பேசியது போலவும்
வாழ்ந்திராவிடினும் வாழ்ந்தது போலவும் என்னை பித்தனாக்கும் சிந்தனையை எப்படி வர்ணிப்பது?
என் எல்லா செயல்களுமே அர்த்தமற்றது போலவும், உன் நினைவொன்றே
என்னை அர்த்தமுள்ளவனாக ஆக்குவது போலவும் என்னை நானே
மதிப்பீடு செய்யத்தூண்டியது எது?
உன் சிறிய பார்வை ஒன்றே எனது உடல், மனப்பிணிகளை களைந்து
மனதில் உரம் ஏற்றக்கூடியது என்பதை எப்படி எடுத்துரைப்பேன்?
உன் வாழ்வை வேறாகவும், என் வாழ்வை வேரறாகவும் அறிந்த மனது,
எப்போதும் நம் வாழ்வையே நினைந்து உருகுவது எதனால்?
ஏதும் வாழ்வில் நிலையில்லை என அறிந்தும், உன் நினைவொன்றே
நிலையாகிப்போனது எங்கனம்?
எத்தனை முறை பார்ப்பினும், உன் உடலைத்தாண்டி, மனதை அறிய
முற்படும் இந்த முயற்சிக்கு என்னை நானெ பாராட்டிகொள்வது எதனால்?
என்றோ விட்டுவிட்ட விடலைத்தீ சுட்ட மரத்தைக்கூட பற்றுமோ?
என்றோ , எப்போதோ பிறந்த எனக்கு, இன்று, இப்போது, இன்னுமொரு
பிறப்பை கொடுத்தது உன் நினைவா?
பேசாமலே பற்றிக்கொண்ட தீ, நினைவுகளை பசுமையாக்குவது எப்படி?
ஊன் உருக, என் உயிர் உருக, என்னை வேரொடு பெயர்த்து, உன்னுள்ளே
ஊடுருவ வைத்தது எந்த சக்தி?
தாயின் முந்தானையை விட மறுக்கும் சிறு மழலைப் போல், உன்
நினைவை களைய மறுக்கும் இந்த ஆத்ம உணர்வு எங்கிருந்து பீறிட்டு
வருகிறது?
உன் சிறு புன்னகை கூட, அழகிய நாதமாய், பண்பட்ட வேதமாய்,
மனதில் நொடிக்கொருமுறை ரீங்காரம் இடுவது அதிசயம் இல்லாமல்
வேறென்னவென்று அறிய?
உலகை இரு வேறாக்கி, மனதை கூராக்கி உன் உலகில் மட்டுமே
உலா வரும் என் கால்கள் இவ்வுலகில் பதிய மறுப்பதேன்?
உன் மூச்சு காற்று பட்டால் கூட முன்னொரு ஜென்மத்து உன் உணர்வு
என் ரத்த நாளங்களில் கலந்து என்னை மூர்ச்சையடயச்செய்வது ம
மாயமா இல்லை மந்திரமா?
உன்னை ஒரு முறை பார்த்த என் கண்கள் ஒராயிரம் முறை உன்
பிம்பத்தை பதிய வைத்து என்னை ஏன் வாட்டி வதைக்கிறது?
உன் பார்வையை விட்ட அந்த நொடியில், கைவிடப்பட்ட சிறு
குழந்தை போல் என் உள்ளம் உன்னை கேவி அழைப்பது உன்
காதில் விழுகிறதா?
உன் நேசத்தில் மட்டுமே நான் வாசம் செய்வேன் என்று ஏன்
இந்த பிடிவாதம் எனக்குள்?
பார்த்த இடத்திலெல்லாம் உன்னை போல் பாவை தெரிவது உன்னை
பார்க்காத பாரதிக்கு எப்படி பிடிபட்டு போனது?
கேட்கும் பாடலெல்லாம், ஒலிக்கும் ஒசையெல்லாம், பார்க்கும்
அசைவெல்லாம், உனக்காகவே என்று தோன்றுவதேன்?
உன் கால் பட்ட இடங்களும், நீ எட்டிப்பார்த்த ஜன்னல் ஓரங்களும்
உல்கார்ந்த இருக்கைகளும், எனக்கு நீயாகவே தெரிவதேன்?
ப்ரபஞ்சத்தின் வெற்றிடம் எல்லாம் கூட உன் உருவில் தானா?
இமைகள் மூடினாலும், நினைவுகள் மூட மறுப்பதேன்?
என் உருவத்தின் நிழலாகக்கூட நீ தான் தெரிவாயோ?
பேசாத வார்த்தைகளை, பேசும் விழிகளால் புரிய வைப்பது
விந்தைதானே?
ஜென்மங்களாய் வந்த இந்த இம்முடிச்சு, இப்பிறப்பில் இன்னும்
இறுக்கமானது எப்படி?
ஆத்மாவுக்கு அழிவில்லை என்றால் நம் நேசத்திற்கும் என்றுதானே
பொருள்?
முடிவில்லா இக்கேள்விகளுக்கு நீ மட்டும் தானே விடையாக முடியும்?
Needu
ஏன் எனக்குள் இந்த மாயம்? எங்கிருந்து உதயமான தாகம்?
இதுவரை கண்டிராத நேயம்.
ஏன் இந்த இன்பப்பரவசம்? எதற்காக இந்த ஆத்ம பிணைப்பு?
ஏன் இந்தக்கனவை நிஜமாகக் காண்கிறேன்?
தூணையும் , துரும்பையும் தாண்டி , எப்போது நீ என்னுள் கடவுளானாய்?
நொடிக்கொருமுறை, என் நெஞ்சை அழுத்தி, மனதை பிசைந்து ,
ரகசியமாய் என் கண்களில் நீர் பனிக்கும் இந்த அற்புத உணர்வை
என்னென்று சொல்வது?
சரி, தவறு என்ற புரிதலுக்கப்பால், வெகு தொலைவில் நின்று என்னை
நானே அறிய முற்பட்டு தோற்றுப்போகும் இச்சிந்தனையை எப்படி
வர்ணிப்பது?
இதுவரை வாழ்ந்த வாழ்வெல்லாம் இந்த தருணத்திற்கே என்றாற்போல்
ஏன் இத்தனை பூரிப்பு?
இது சாத்தியமில்லை என்று ஆழ அறிந்தும், கை விட மறுக்கும் இந்த
நினைப்பு எதற்காக?
படித்தும், அறிந்தும், கேட்டும், பார்த்த வாழ்வில், இந்த உணர்வு மட்டும்
ஏன் புதிதாய் இருக்கிறது?
என் வாழ்வியல் வருடங்ளை கணக்கில்லாமல் இளமையாக்கிய
இப்பொழுது எப்போது உதயமானது?
எத்தனையோ உன்னதமானவை என் அருகில் இருந்தும், உன்
அருகாமையை மட்டும் நாடும் இந்த பரிதவிப்பை என்னென்று அறிய?
பார்காவிடினும் பார்த்தது போலவும், பேசாவிடினும் பேசியது போலவும்
வாழ்ந்திராவிடினும் வாழ்ந்தது போலவும் என்னை பித்தனாக்கும் சிந்தனையை எப்படி வர்ணிப்பது?
என் எல்லா செயல்களுமே அர்த்தமற்றது போலவும், உன் நினைவொன்றே
என்னை அர்த்தமுள்ளவனாக ஆக்குவது போலவும் என்னை நானே
மதிப்பீடு செய்யத்தூண்டியது எது?
உன் சிறிய பார்வை ஒன்றே எனது உடல், மனப்பிணிகளை களைந்து
மனதில் உரம் ஏற்றக்கூடியது என்பதை எப்படி எடுத்துரைப்பேன்?
உன் வாழ்வை வேறாகவும், என் வாழ்வை வேரறாகவும் அறிந்த மனது,
எப்போதும் நம் வாழ்வையே நினைந்து உருகுவது எதனால்?
ஏதும் வாழ்வில் நிலையில்லை என அறிந்தும், உன் நினைவொன்றே
நிலையாகிப்போனது எங்கனம்?
எத்தனை முறை பார்ப்பினும், உன் உடலைத்தாண்டி, மனதை அறிய
முற்படும் இந்த முயற்சிக்கு என்னை நானெ பாராட்டிகொள்வது எதனால்?
என்றோ விட்டுவிட்ட விடலைத்தீ சுட்ட மரத்தைக்கூட பற்றுமோ?
என்றோ , எப்போதோ பிறந்த எனக்கு, இன்று, இப்போது, இன்னுமொரு
பிறப்பை கொடுத்தது உன் நினைவா?
பேசாமலே பற்றிக்கொண்ட தீ, நினைவுகளை பசுமையாக்குவது எப்படி?
ஊன் உருக, என் உயிர் உருக, என்னை வேரொடு பெயர்த்து, உன்னுள்ளே
ஊடுருவ வைத்தது எந்த சக்தி?
தாயின் முந்தானையை விட மறுக்கும் சிறு மழலைப் போல், உன்
நினைவை களைய மறுக்கும் இந்த ஆத்ம உணர்வு எங்கிருந்து பீறிட்டு
வருகிறது?
உன் சிறு புன்னகை கூட, அழகிய நாதமாய், பண்பட்ட வேதமாய்,
மனதில் நொடிக்கொருமுறை ரீங்காரம் இடுவது அதிசயம் இல்லாமல்
வேறென்னவென்று அறிய?
உலகை இரு வேறாக்கி, மனதை கூராக்கி உன் உலகில் மட்டுமே
உலா வரும் என் கால்கள் இவ்வுலகில் பதிய மறுப்பதேன்?
உன் மூச்சு காற்று பட்டால் கூட முன்னொரு ஜென்மத்து உன் உணர்வு
என் ரத்த நாளங்களில் கலந்து என்னை மூர்ச்சையடயச்செய்வது ம
மாயமா இல்லை மந்திரமா?
உன்னை ஒரு முறை பார்த்த என் கண்கள் ஒராயிரம் முறை உன்
பிம்பத்தை பதிய வைத்து என்னை ஏன் வாட்டி வதைக்கிறது?
உன் பார்வையை விட்ட அந்த நொடியில், கைவிடப்பட்ட சிறு
குழந்தை போல் என் உள்ளம் உன்னை கேவி அழைப்பது உன்
காதில் விழுகிறதா?
உன் நேசத்தில் மட்டுமே நான் வாசம் செய்வேன் என்று ஏன்
இந்த பிடிவாதம் எனக்குள்?
பார்த்த இடத்திலெல்லாம் உன்னை போல் பாவை தெரிவது உன்னை
பார்க்காத பாரதிக்கு எப்படி பிடிபட்டு போனது?
கேட்கும் பாடலெல்லாம், ஒலிக்கும் ஒசையெல்லாம், பார்க்கும்
அசைவெல்லாம், உனக்காகவே என்று தோன்றுவதேன்?
உன் கால் பட்ட இடங்களும், நீ எட்டிப்பார்த்த ஜன்னல் ஓரங்களும்
உல்கார்ந்த இருக்கைகளும், எனக்கு நீயாகவே தெரிவதேன்?
ப்ரபஞ்சத்தின் வெற்றிடம் எல்லாம் கூட உன் உருவில் தானா?
இமைகள் மூடினாலும், நினைவுகள் மூட மறுப்பதேன்?
என் உருவத்தின் நிழலாகக்கூட நீ தான் தெரிவாயோ?
பேசாத வார்த்தைகளை, பேசும் விழிகளால் புரிய வைப்பது
விந்தைதானே?
ஜென்மங்களாய் வந்த இந்த இம்முடிச்சு, இப்பிறப்பில் இன்னும்
இறுக்கமானது எப்படி?
ஆத்மாவுக்கு அழிவில்லை என்றால் நம் நேசத்திற்கும் என்றுதானே
பொருள்?
முடிவில்லா இக்கேள்விகளுக்கு நீ மட்டும் தானே விடையாக முடியும்?
Needu