M
Mathangi
Guest
:: மண் பானை ::
மண் பானை -
உலகில் இயங்கும் இயந்திரம் இயங்கிக் கொண்டே இருக்கும்!!!
ஆனால், அவ்வியந்திரம் பழுதானால் மற்றொன்றை அதனிலிருந்து உருவாக்க முடியுமா!!!
"களிமண்" என்ற நுண் பொருளைக் கொண்டு உம்மை தயாரிக்கும் குயவனுக்கே தெரியும் உன்னை உருவாக்க எத்துனை இன்னல்களை சந்தித்தானென்று !!!
"மண்பானை" எனும் உம்மை தயாரிக்க சக்கரத்திலிட்டான்
களிப்போடு களிமண்ணை ;
சக்கரம் சுழல சுழல அம்மணிலிருந்து பானையாய் அமைத்தானவன்!!!
நீயோ!! அனைத்து இயற்கை குணங்களுடன் வளர்ந்தாயே!!!
மனித தாகத்தை தனிதாய்;
நானென்ற அகந்தையை நீக்கினாய்;
விடாமுயற்சியை பரைசாற்றும் நீதிக்கதையின் மையப்பொருளாய் அமைந்தாய்;
இனிய சங்கீதத்தில் கடமெனும் கருவியாய் மாறி மெல்லிசை தருகிறாய்;
வாழ்வாங்கு எங்கள் வாழ்வு அமைய மன குளிச்சியை அள்ளித்தருகிறாய்;
நம் தேசத்தின் மண்வாசத்தில் எங்களை மூழ்கடிதாய்;
நீயா !! நானா!! என்ற போட்டி பொறாமை குணங்களை நீக்க நீயே வேறொரு பொருளாய் மாறினாய் ; மாற்றம் ஒன்றே மாறாதது போல!!!
மண்பானையே!!! என்னையும் உன்னை போல் மாற்றி அமைத்துக்கொள்ள நான் தான் எவ்வளவு தடைகற்களை தாண்ட வேண்டிருக்கிறது!!!
காரணம்:: உன்னில் என்றுமே
இல்லாத "நான்" ;
என்னில் என்றுமே எப்போதுமே எல்லா இடங்களிலும் ஒரு ஒரு பொழுதிலும் இருக்கின்ற "நான்" என்ற அஹங்காரம்!!
கடவுளாக பட்டவன் எனது குயவனாவான் !!!
என்னை வாழ்க்கை எனும் சக்கரத்தில் சுழல வைத்து வாழ்வின் சிறப்பை அறிய வைக்கின்றான்!!!
மண் பிண்டமாய் இருக்கின்ற என்னை உலகியல் வாழ்விற்கு அவன் விரும்பும் வடிவத்தில் அழகில் குணத்தில் படைக்கின்றானே!!!
ஹா!! ஹா!!! ஆதலால், தான் என்னவோ!!! உலகத்தில் என்னை தூஷிப்பவர் கூட களிமண்ணாய் இருக்கிறாயே என எள்ளி நகையாடுவர்!!!
சக்கரமானது சுற்றிக்கொண்டே இருக்க என்னை போல பிற உயிரினங்களையும் படைத்து வாழ்வில் தேவைகளை உருவாக்குகிறான்!!!
ஒருவர் இல்லாமல் மற்றோருவர் இல்லை எனும் வரைமுறை நீதியை வகுக்கிறான்!!!
தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் எத்துனையோ மாந்தர்களுக்கு;
நீ !! ஒரு சாமானிய மண்கலவையால் ஆன பிண்டமே!! என அண்டமே வியக்க தன்னுள் உன்னையும் என்னையும் அனைவரையும் காட்டுகிறானவன் தான் !!!
என்னையும் படைத்த குயவன் ;
மண்பானையே!!!
மண் பானை -
உலகில் இயங்கும் இயந்திரம் இயங்கிக் கொண்டே இருக்கும்!!!
ஆனால், அவ்வியந்திரம் பழுதானால் மற்றொன்றை அதனிலிருந்து உருவாக்க முடியுமா!!!
"களிமண்" என்ற நுண் பொருளைக் கொண்டு உம்மை தயாரிக்கும் குயவனுக்கே தெரியும் உன்னை உருவாக்க எத்துனை இன்னல்களை சந்தித்தானென்று !!!
"மண்பானை" எனும் உம்மை தயாரிக்க சக்கரத்திலிட்டான்
களிப்போடு களிமண்ணை ;
சக்கரம் சுழல சுழல அம்மணிலிருந்து பானையாய் அமைத்தானவன்!!!
நீயோ!! அனைத்து இயற்கை குணங்களுடன் வளர்ந்தாயே!!!
மனித தாகத்தை தனிதாய்;
நானென்ற அகந்தையை நீக்கினாய்;
விடாமுயற்சியை பரைசாற்றும் நீதிக்கதையின் மையப்பொருளாய் அமைந்தாய்;
இனிய சங்கீதத்தில் கடமெனும் கருவியாய் மாறி மெல்லிசை தருகிறாய்;
வாழ்வாங்கு எங்கள் வாழ்வு அமைய மன குளிச்சியை அள்ளித்தருகிறாய்;
நம் தேசத்தின் மண்வாசத்தில் எங்களை மூழ்கடிதாய்;
நீயா !! நானா!! என்ற போட்டி பொறாமை குணங்களை நீக்க நீயே வேறொரு பொருளாய் மாறினாய் ; மாற்றம் ஒன்றே மாறாதது போல!!!
மண்பானையே!!! என்னையும் உன்னை போல் மாற்றி அமைத்துக்கொள்ள நான் தான் எவ்வளவு தடைகற்களை தாண்ட வேண்டிருக்கிறது!!!
காரணம்:: உன்னில் என்றுமே
இல்லாத "நான்" ;
என்னில் என்றுமே எப்போதுமே எல்லா இடங்களிலும் ஒரு ஒரு பொழுதிலும் இருக்கின்ற "நான்" என்ற அஹங்காரம்!!
கடவுளாக பட்டவன் எனது குயவனாவான் !!!
என்னை வாழ்க்கை எனும் சக்கரத்தில் சுழல வைத்து வாழ்வின் சிறப்பை அறிய வைக்கின்றான்!!!
மண் பிண்டமாய் இருக்கின்ற என்னை உலகியல் வாழ்விற்கு அவன் விரும்பும் வடிவத்தில் அழகில் குணத்தில் படைக்கின்றானே!!!
ஹா!! ஹா!!! ஆதலால், தான் என்னவோ!!! உலகத்தில் என்னை தூஷிப்பவர் கூட களிமண்ணாய் இருக்கிறாயே என எள்ளி நகையாடுவர்!!!
சக்கரமானது சுற்றிக்கொண்டே இருக்க என்னை போல பிற உயிரினங்களையும் படைத்து வாழ்வில் தேவைகளை உருவாக்குகிறான்!!!
ஒருவர் இல்லாமல் மற்றோருவர் இல்லை எனும் வரைமுறை நீதியை வகுக்கிறான்!!!
தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் எத்துனையோ மாந்தர்களுக்கு;
நீ !! ஒரு சாமானிய மண்கலவையால் ஆன பிண்டமே!! என அண்டமே வியக்க தன்னுள் உன்னையும் என்னையும் அனைவரையும் காட்டுகிறானவன் தான் !!!
என்னையும் படைத்த குயவன் ;
மண்பானையே!!!