*உலக கவிதை தினம்*
அகண்ட கடலில்
வார்த்தைகள் அலையாய்
சிப்பிக்குள் முத்தாய்
கருவைத்தேடி
படகில் பயணம்
கற்பனை வலையில்
கயல்களை அள்ள
தூண்டிலாய் இலக்கணமும்
இரையாய் உவமையும்
நீலமும் நீரும்
ஒற்றை புள்ளியில்
சேர்ந்த தருணம்
நிலவும் சூரியனும்
நிழலாய் மாற
இயற்கை கொஞ்சம்
இன்னிசை மழையாய்
மானுடன் இயற்றிய
அழகிய கவிதை......
❤
அனைத்து, கவி ஆர்வலர்களுக்கும், கவி தாசர்களுக்கும், விகடகவி வாசர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.... ❤
அகண்ட கடலில்
வார்த்தைகள் அலையாய்
சிப்பிக்குள் முத்தாய்
கருவைத்தேடி
படகில் பயணம்
கற்பனை வலையில்
கயல்களை அள்ள
தூண்டிலாய் இலக்கணமும்
இரையாய் உவமையும்
நீலமும் நீரும்
ஒற்றை புள்ளியில்
சேர்ந்த தருணம்
நிலவும் சூரியனும்
நிழலாய் மாற
இயற்கை கொஞ்சம்
இன்னிசை மழையாய்
மானுடன் இயற்றிய
அழகிய கவிதை......
❤
அனைத்து, கவி ஆர்வலர்களுக்கும், கவி தாசர்களுக்கும், விகடகவி வாசர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.... ❤