அங்கு இருள் சூழ்ந்து இருந்தது. Jessica அறண்டு போயிருந்தாள். பன்றியும் எருமையும் அவளை அச்சுறுத்த நெருங்கியது.
அப்பொழுது Walgad மலையின் திசையில் இருந்து வந்த கணைக்கும் சத்தம் கேட்டு இருவரும் அதிர்ந்தனர். இருளின் பிடியிலும் இருளர்களின் பிடியிலும் சிக்கி இருந்த போதிலும், Jessica வை அந்த கனத்த கணை ஒலி ஈர்த்தது... இனம் புரியாத ஒரு உணர்வு அவள் மனதை ஆட்கொள்ள தொடங்கி இருந்தது... Walgad மலையை நோக்கினாள்...
மேகம் விலகி, இருளும் சற்று விலக,
பௌர்ணமி ஒளியில் அந்த அஜானுபாகு உடல் வாகு பாய்ந்து, Walgad மலையை துளைத்து கொண்டு வருவது போல தோற்றம் தந்தது. தடக் தடக் சத்தமே எருமை பன்றியை மிரள வைத்தது.
மெல்லிய குரலில் பன்றி வினவினான்,
"இது பரிகாலன் இல்லை தானே"
... எருமையின் கண்கள் அலறின,
"பரிகாலனா?? உளராதே" என்றவன் தொடர்ந்தான்
"பரிகாலன் Walgad மலை தாண்டி வரமாட்டான், அவனை இவ்வுலகில் கண்டவர் எவரும் இல்லை"...
(.... Walgad மலையின் அரசன் பரிகாலன் ஒரு குதிரை மனிதன்... மனித தலை, கைகளும் குதிரை உடலும் கொண்டவன், பரி என்றால் குதிரை, காலன் என்பது அவன் கரிய நிறத்தை குறிக்கும்....)
பரிகாலன் இவர்கள் குடிலை நோக்கி நடந்து வந்தான்... பௌர்ணமி நிலவை மறைத்தது அவன் உடல்... எருமையும் பன்றியும் இருவேறு திசையில் அங்கு இருந்து ஓடின....
பரிகாலன் Jessica vin அருகில் வந்தான், அந்த கண்களில் இருந்த வசீகரம் Jessica vai மயக்கியது... அவன் உரிமையோடு இவளை தூக்கியது , ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது, நானத்தை மறைக்க அவன் தோள்களில் முகத்தை புதைத்து கொண்டாள்....
Jessica vai தூக்கி கொண்டு Walgad மலை நோக்கி நடந்தான் பரிகாலன்....