எப்படி அதை கையாண்டீர்கள்???!
Share your experience
15 வயது,
புதிதாக ஒரு பள்ளியில் +1,
கொடுமை என்னவென்றால், என் மாமா பெண்ணிற்கு என்னை சுத்தமாக பிடிக்காது, சின்னதில் இருந்து அப்படி தான்.. இதில் பத்தாம் வகுப்பு முடித்த போது, என்னை எதிரியாக பார்க்க ஆரம்பித்து விட்டாள்.. (பத்தாம் வகுப்பில் அவளை விட அதிக மதிப்பெண் வாங்கிவிட்டேன் என்று பொறாமை யாம், அதை அவள் வெளிப்படையாகவே கூறினாள்)
இருவருமே ஒரெ பள்ளி ஆனால் வேறு வேறு dept..
அவளுக்கு புதிதாக சில நண்பர்கள் கிடைத்தார்கள்,
என் வகுப்பு பெண் ஒருவருவருக்கு, என் மாமா பொண்ணுடன் பழகிய பெண்ணை தெரியும் போல (எனக்கு யார் என்று தெரியலை)
அவள் எனிடம் வந்து
அந்த பெண்ணின் குணம் சரி இல்லை, பசங்களுடன் சகவாசம் இருக்கும்.. பார்த்து இருக்க சொல்லு என்றாள்..
நானும் சரி சொல்லி வைப்போம் என்று, என் மாமா பெண்ணிடம் இதை கூறினேன் , நல்ல எண்ணத்தில் தான் கூறினேன்..
கொடுமை என்ன வென்றால் இதை சென்று அவள் அவர் தோழிகளிடம் கூரி இருக்கிறாள்!!
எனக்கு இது தெரியாது..
சாயங்காலம் ஒரு ஐந்தரை மணி இருக்கும், பள்ளி விட்டு கிளம்பிய தருணம், திடீர் என்று ஒரு பத்து பெண்கள் என்னை சூழ்ந்தனர்,
வழி விடுங்க என்றேன், யாரும் எதும் பேசவில்லை..
நீ எப்படி நாங்க சரி இல்லை என்று சொல்லலாம் என்று ஒரு பெண் கோவமா கேட்டாள்.. நீ யார்னே எனக்கு தெரியாது , நான் உன்னை பார்த்ததே இல்லை என்றேன்.. (school sernthu இரண்டு வாரங்களே ஆகி இருந்தது)
நான் உன் மாமா பொண்ணோட best friend.. ivanga than enga gang..
நீ எதோ சொன்னியாமே, character sari இல்லைனு..
என்று கேட்கவும் ஒரு நிமிடம் திகைத்தேன், எனக்கும் என் மாமா பெண்ணிற்கும் இடையே நடந்த உரையாடலை அப்படியே கூறினாள்..
அன்று உணர்ந்தேன், முட்டாளாக..
இதை எப்படி கையாண்டேன்??
வீட்டிற்கு வந்து, என் மாமா பெண்ணிடம் செம்ம சண்டை..
முதன் முறையாக என்னிடம் சண்டை போடுப வளிடம், நான் சண்டை போட்டேன்..
என் மாமா வும்
என் அம்மா வும்
தலையிடவே இல்லை
என்னமோ பண்ணிட்டு போங்கன்னு விட்டுட்டாங்க..
அடுத்த நாள்
அவளின் தோழி வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டாள்..
என்னை திட்டிய இன்னொரு பெண், அவள் டிஃபன் பாக்ஸ் ஐ எனக்கு கொடுத்து சாப்பிட சொன்னாள்
அடிக்கிற கை அணைக்குமா என்று பேக் ground music தான் போடலை..
இது ஒரு வகை முரட்டுத் தனமான அன்பால்ல இருக்கு