Such a beautiful question. Thanks a lot.
கடவுள்
உள்ளத்திலேயே உள்ள, உள்ளத்தால் உணரப்படும் ஒரு சக்தி. உணர மட்டும் தான் முடியும்.
எத்தனையோ கருத்துகள், விவாதங்கள்,
விஞ்ஞானம் என காலம் காலமா ஆய்வுகள் நடந்துட்டே இருக்கு.
Big bang theory nu எல்லாம். விஞ்ஞானத்தில் அறிவியல் அறியப்படுதுனா, மெய்ஞானத்தில் கடவுள் உணரப்படுகிறார்.
பிரபஞ்சம் இயங்குது. சரியா இயங்குது. கோள்கள் சரியான கால இடைவெளியில் சுத்திட்டு இருக்கு. தாவரத்திலிருந்து மனிதன் வரை உயிர்கள் உருவாகுது. உடலில் எல்லாமே சரியா இயங்குது. ஓர் கட்டமைக்கப்பட்ட அமைப்பு இருக்கு.
எல்லாமே இயற்கை என்பது ஒருத்தர் நம்பிக்கை. இயற்கையை இயக்கும் ஓர் சக்தி உண்டென்பது ஒரு நம்பிக்கை. அந்த சக்தியே கடவுள். Superior எனலாம்.
உணர்ந்துள்ளேன். சில இடங்களில் ஓர் சிலிர்ப்பு வரும். உடலை உலுக்கும். கண்ணீர் கூட வரும். சொல்லி விவரிக்க இயலாத உணர்வு அது. கண்களில் கூட காட்டும். பார்க்கின்ற உருவம் அவனாகத் தோன்றும். ஒவ்வொரு வருடமும் கிருஷ்ண ஜெயந்தியில் பாதங்களை வரையும் போது முடிப்பதற்குள் வந்துவிடுவான் குழந்தை. அப்போது உணர்ந்தது பக்திக்கும் மேல..தாய்மை.
தீப ஒளியில் உருவமாக தெரியக்கூடும் சிலருக்கு . யாகத்தில் அக்னியில் தெரியும் சிலருக்கு. Vibration இருக்கும். திரை விலக்கப்பட்டு தீப தூப ஆராதனை காட்டும் போது கண்ணில் காரணமின்றி நீர் வழியும்.
கர்த்தர் உயிர்த்தெழுந்தார் என்பது உலகில் அதிக மக்களால் நம்பப்படுவது. வணங்கப்படும் இறைசக்தி கர்த்தர்.
ஒரு உதாரணத்திற்கு சைவ சமய பாடல் ஒன்றை சொல்றேன். அப்போவே திருமூலர் எழுதி வச்சிருக்கார்.
அணுவில் அணுவினை ஆதிப் பிரானை..
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு..
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு..
அணுவில் அணுவை அணுகலும் ஆமே...
- திருமந்திரம்
Atom within atom ...Simple.
நடராஜரை வைத்து ஆயிரம் ஆய்வுகள் செய்யலாம் அறிவியலையும் துணைக்கொண்டு. Cosmic dancer he is. Like that Goddess பெண் தெய்வத்திலும் that cosmic energy விவரிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் particular religion and philosophy. இப்படி ஒவ்வொரு religion ம் ஒவ்வொன்னு சொல்லும்.
இதெல்லாம் படித்துத் தெளிந்து தான் உணரனும்னு இல்ல. ஆற்றல் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும். Temple or church la Masjid la அதிகம் இருக்கும். நீங்க சொன்ன மாதிரி அங்கே good vibes அதிகம்.
கடவுள் என்பது விதுவின் அகக் கண்ணின் பார்வையில் அதாவது உள்ளத்தில் உணரப்படும் உண்மை. உண்மையை உணர்ந்து கொண்டேதான் இருக்கிறேன்...
ஒவ்வொருவருக்கும் அந்த பார்வையும் உணர்வும் வேறு வேறு.
எனக்கு அந்த சக்தி சில நேரங்களில் நண்பன், சில நேரங்களில் குழந்தை, சில நேரங்களில் தந்தை, சில நேரங்களில் அன்னை.
கடவுள் இல்லையென கூறிய புத்தரும் enlightened தான். முற்பிறவிகளை உணர்ந்தவர். பிறவிகள் எதனால்? நல்வினை தீவினை பயன் எனில் அது யாரால் கணக்கிடப்பட்டுகிறது. யார் உண்ர்த்துகிறார்கள் அப்பிறவிகளை.
தேடலுக்கு முடிவே இல்லை.
என்ன விட்டா பக்கம் பக்கமா எழுதுவேன்.
let me stop.