- Joined
- Apr 25, 2023
- Messages
- 1,235
- Points
- 133
ஒரே களேபரமா அல்லோலகல்லோலப் படுது .What is going on !!!!
ஒரு டாக்ட்டர் படக்னு காதல்னு ஒரு கருமாத்திரமும் இல்லைன்னு தீர்ப்பை எழுதி போட்டுட்டு போயிட்டார்
பிரச்னை என்னன்னா கொஞ்சசத்துக்கு கொஞ்சமா காதலை அனுபவிச்ச உயிர்கள் கொழம்பிடுச்சு. அப்டின்னா நாம அனுபவச்சது காதல் இல்லியோன்னு.
அதுவன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம் என்றும்
கொன்றிடுமென இனிதாய்
இன்பக் கொடுநெருப்பாய்
ஆனற் சுவையமுதாய்
நன்றியல் காதலுக்கே
இள நாரியர் தமையெனக் கனுப்பி வைத்தாள் என்றும் மகாகவி வியந்து பாடிய வரிகள் பொய்யானவையா?
அப்படிக்கில்லை. அது எல்லோருக்கும் கிடைக்காதாம். யாரோ சிலருக்கு தான் வாய்க்குமாம். ஏனென்றால்
மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்
மிகச்சிலரே அதன் அருமையை உணர்ந்துகொள்ள முயற்சி செய்ய முடியுமாம்
ஏனெனில் அந்த உணர்வு அத்தனை மென்மையானது.
காதலை உணராதவர் தம் அனுபவத்தை சொன்னதும் சரி
காதலை உணர்ந்தவர்கள் தாம் உணர்ந்த வரை உரைப்பதும் சரி.