What's new

GAME ZONE - கவிதைகள் வளர்ப்போம்..

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,888
Points
133
இது ஒரு கவிதை விளையாட்டு.. முதலில் ஒரு கவிதை post செய்யப்படும். அந்த கவிதையின் கடைசி வரியில் இருந்து ஒரு சொல் எடுத்து அதிலிருந்து ஒரு கவிதை ஆரம்பிக்க வேண்டும்..எத்தனை முறை வேண்டுமானாலும் பங்கு பெறலாம்.. ஆனால் தொடர்ச்சியாக ஒரு நபரின் இரு கவிதைகள் இருக்கக்கூடாது..அந்த சொல்லை தலைப்பாக வைத்து கவிதை எழுத வேண்டும். கவிதைகள் 2 வரி முதல் 20 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஹைக்கூ கவிதைகளும் அடங்கும்.

இதனால் உங்கள் கவிதை திறன் அதிகமாகும்..

@Ohmylove @AramSei @Argus @Mathangi @Sagiye sagiye @Nanci @Nilaani @Nilapapaa @Vanathi @Tiruchii @Aiyaiioo 7 Peru @QHera @Goodgirl @Aadhini @wanderer
@Agnii @Needu @Jokerr
male-hand-with-pen-from-splash-watercolor-hand-drawn-sketch-illustration-paints_291138-240.jpg
 
Last edited:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,888
Points
133
தழுவல்

தழுவிய நினைவுகள்
தலையணை அடியில்
தவழும் பிள்ளைக்கு தாலாட்டும்..

உயிர் கொடுத்த உறவுகள்,
உயிரை கெடுத்த நினைவுகள்
உலகத்தின் ஓரத்திலும் உண்மையாய் வாழும்"
 

Wanderer

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
445
Points
133
நினைவுகள்

வார்த்தை ஜாலம் பேச
வரம்புண்டு எனினும்
மனதில் ஓடும்
உன் நினைவுகளுக்கு
கடிவாளமிடும்
எண்ணம் எனக்கில்லை...

பகலிரவு பாராமல்
என் பக்கத்தில்
நினைவுகளாய் நீ மட்டும்...


1664696198766.png



Ithoda Nan Stop Panikiren Others Continue Please .. @Assistantdon Bro Thanks for Tagging me !!
 
M

Mathangi

Guest
நீ மட்டும் நீங்காதிரு......

அன்பே !!
நீ மட்டும் நீங்காதே....
நீங்கினால்?
என் நேரமும், காலமும் சுழலாதே!!
அன்பே !!
என்னை கடந்து செல்ல எண்ணாதே....
உன் நினைவுகளால்
என் வாழ்வு சொர்க்கமாகாதே!!
 
Last edited by a moderator:
O

Ohmylove

Guest
நினைவுகள்

வார்த்தை ஜாலம் பேச
வரம்புண்டு எனினும்
மனதில் ஓடும்
உன் நினைவுகளுக்கு
கடிவாளமிடும்
எண்ணம் எனக்கில்லை...

பகலிரவு பாராமல்
என் பக்கத்தில்
நினைவுகளாய் நீ மட்டும்...


View attachment 4131



Ithoda Nan Stop Panikiren Others Continue Please .. @Assistantdon Bro Thanks for Tagging me !!
நினைவுகளில்
அலைந்துதிரித்தே😊
நீ இப்பெயர் பெற்றாயோ!!

நிழலாய்
நித்தம்
உன்னை தேடும்
"நீர்ப்பறவை" ஒன்றை கண்டாயோ!!

நினைவே வாழ்வாகி நிஜம் ஒன்றை மறத்தையோ!! 😌😌
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
நிஜம்

நீ தூரம் என தெரிந்தும் ஏங்குகிறேன்..
கனவுகளில் நான் தினம் காணும் காட்சிகளை நிஜமாக
நீ வேண்டும் எனதருகில் என்று..!
 
M

Mathangi

Guest
நிஜம்

நீ தூரம் என தெரிந்தும் ஏங்குகிறேன்..
கனவுகளில் நான் தினம் காணும் காட்சிகளை நிஜமாக
நீ வேண்டும் எனதருகில் என்று..!

எனதருகில் நீ இருந்தால்......

எனதருகில் நீ இருந்தால்
வானம் கூட வசப்படும்...
நிலவும் என் கையில் அடங்கும்.....
இரவும் நீளும்.....
என் இதயும்கூட
மறு ஜென்மம் பிறப்பிற்கு

விண்ணப்பம் இடும்.......
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
♥️ காதல் விண்ணப்பம் ♥️

உன் தோள் சாய்ந்து நானும்
என் கை கோர்த்து நீயும் போகையில்;

கதிரவன் சூழ்ந்த வானமும்
மலர்கள் தூவிய மரங்களும்;

நம் காதல் பேசிய விழிகளும்
உன் தீண்டல்கள் பூசிய என் வெட்கமும்
என்னை விண்ணப்பிக்கின்றன!!

கனவில் என் கடந்த காலமாய்
மனதில் என் நிகழ் காலமாய்
எதிரில் என் எதிர் காலமாய்
நீயே வர வேண்டுமென!!

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️



images - 2022-10-03T085952.873.jpeg
 
Last edited:

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
நீயே

என் உலகம் நீயே..
என் உணர்வும் நீயே..
என் நினைவும் நீயே..
என் நிஜமும் நீயே...
என் சிரிப்பும் நீயே...
என் சிந்தனையும் நீயே..
என் கனவும் நீயே..
என் காவியமும் நீயே..

நீயே கேட்டாலும் விட்டு கொடுப்பதாக இல்லை உன்மீதான என் காதலை...!
 
M

Mathangi

Guest
என் காதல்....

என் காதலே.....
என் உயிரும் நீ.....
என் உறவும் நீ.....
என் தேடல் நீ......
என் தவிப்பும் நீ....
என் அழகும் நீ....
என் ஆசை நீ...
என் அகிலம் நீ....
என் முகிலும் நீ...
என் இரவும் நீ....
என் நிலவும் நீ....
என்றும் நீ எதிலும் நீ நீ....
ஆதி முதல் அந்தம் வரை
நீ மட்டுமே என் காதலே....
 
O

Ohmylove

Guest
என் காதல்

கந்தமாறனின் தங்கை கொண்ட காதலா ... !
காந்தாரி
கண்கட்டி கொண்ட காதலா.!
கண்ணகி கணவன் மேல் கொண்டதா... !
கார்மேக கண்ணன் மேல் கோதை அவள் கொண்டதா... !
கண்ணப்ப நாயனார் காளத்தியப்பர் மேல் கொண்டதா...😒!

கலியுகத்திலே காவியகாதலுக்கு எங்கு போவேன்..... 😞

கணினியே கங்கணமாய் கட்டி இங்ஙனம் வாழ்தேன் ..😐
 

AramSei

Mutta Paiyan
Beta Squad
Joined
Apr 11, 2022
Messages
893
Points
133
Kanini, oru uyir illadha kadhali...
Kaalai mudhal iravu varai,

Ennai aravanikkum dhevadhai...
Unn Siripai naan kandadhillai,
Aanal ennul ulla anaithu unarvugalai

Unnai thavira veru yaar kandiruppar...
Nee oru sumai illadha kadhal...
Nee oru Suvayana kadhal...
Unnai neengum podhu kanneer varuvadhillai...
Unnai thodum podhu kaamam varuvadhillai...
Naanum unnai pol aagi vitteno?
 
D

Deleted member 256

Guest
கணினியே கங்கணமாய் கட்டி இங்ஙனம் வாழ்தேன் ..😐

வாழ்ந்தேன் நானும் ஊன் என உயிராய் வந்தாய்,,
திரிந்தேன் நானும் கானல் நீராய் கண்களால் பிம்பம் தந்தாய்,
கலைந்தேன் நானும் கனவாக நினைவாய் வந்தாய்,
விழுந்தேன் நானும் நிழலாய் நிஜங்கள் தந்தாய்...
 
D

Deleted member 256

Guest
Naanum unnai pol aagi vitteno?

விட்டு சென்ற நியாபகங்கள்,
தேடி அலைந்த நான்,
தொட்டு சென்ற ஸ்பரிசம்,
தயங்கி வந்த நீ,
தீண்டி சென்ற காதல்,
சொல்லாமல் நின்ற நாம்.
மீண்டும் சேருமோ???
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
மீண்டும் சேருமோ?

மீண்டும் சேருமோ, சேராதோ
அல்ல என் காதல்...

பிரிந்தாலும் நீ கொடுத்த அந்த அழகிய நினைவுகளோடு இறுதிவரை நீங்கா உன் நினைவில் நான்..!
 

Wanderer

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
445
Points
133
மீண்டும் சேருமோ?

மீண்டும் சேருமோ, சேராதோ
அல்ல என் காதல்...

பிரிந்தாலும் நீ கொடுத்த அந்த அழகிய நினைவுகளோடு இறுதிவரை நீங்கா உன் நினைவில் நான்..!
1664861460869.png
 
O

Ohmylove

Guest
உன்னில் நிலைத்ததே
மண்ணில் வீழ்ந்த
காதல் விதையாய் நான்....
என்னில் எழுந்தே
விண்ணை தொட்ட
கவிதை மரமோ நீ....
மின்னலாய் தோன்றியவளின் பின்னலிலே விழுந்தவனோ...
இன்னல் தரா 'இறைவன்'
அவன் இவன்தானே !❤
 
Last edited by a moderator:
M

Mathangi

Guest
உன்னில் நிலைத்ததே
மண்ணில் வீழ்ந்த
காதல் விதையாய் நான்....
என்னில் எழுந்தே
விண்ணை தொட்ட
கவிதை மரமோ நீ....
மின்னலாய் தோன்றியவளின் பின்னலிலே விழுந்தவனோ...
இன்னல் தரா 'இறைவன்'
அவன் இவன்தானே !❤

அவன்......

என் தேவனோ?.....
என் மன்னனோ?....
வீரத்தில் வெற்றியாளனோ?....
வீற்றிருக்கும் தாமரையின்
மனதை கொள்ளை கொள்ளும் கள்வனோ?.....
என்னை ஆளும் அரசனோ?......
என் கனவுகளில் அலைந்தோடும்

கனவு கண்ணனோ?
யார் அவனோ ?.....
 
Top