எத்தனை முறை வேண்டுமானாலும் 'நீட்' எழுதலாம் என்பதால் இரண்டாம் அல்லது மூன்றாம் முயற்சியில் தேர்வாகும் மாணவர்கள்கூட எளிதில் மருத்துவம் படிக்க முடிகிறது. அவர்களுடன் முதல் முறையாக தேர்வை எழுதும் மாணவர்களும் போட்டியிட வேண்டும்.
பள்ளிக்கல்வி முடித்தும் ஓரிரு ஆண்டுகள் பயிற்சி வகுப்புக்கு செல்ல வசதியும், வாய்ப்பும் இல்லாத மாணவர்கள், மேல்நிலை வகுப்பு பயிலும்போதே 'நீட்' பயிற்சி வகுப்புக்கு செல்ல வசதி இல்லாத கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள் உள்ளிட்டோர், அதற்கான வாய்ப்புகளை பெற முடிந்த, வசதிபடைத்த பின்புலத்தில் இருந்து வரும் மாணவர்களுடன் போட்டியிட வேண்டிய சூழல் 'நீட்' தேர்வால் நிலவுகிறது.
இப்படி பொருளாதார ரீதியாகவும், மாணவர்களின் வசிப்பிட ரீதியாகவும், தேர்வுக்கு முன்னேற்பாடு செய்வதற்கான கால அளவிலும் சமமற்ற போட்டி நிலவுவதாகவும், அந்த சமமற்ற போட்டியே மாணவர்களின் மன அழுத்தத்துக்கு காரணமாகும்.
2019ஆம் ஆண்டு தமிழகத்தில் தேர்வர்கள் மற்றும் தேறியவர்களின் எண்ணிக்கை ஆகியன அதிகமாகியுள்ள போதிலும், நீட் தேர்வு தோல்வி உண்டாக்கிய மன அழுத்தத்தால் நிகழும் தற்கொலைகளும், நீட் தேர்வால் தமிழக மருத்துவக் கட்டமைப்புக்கு பாதிப்பு உண்டாவதோடு, பொருளாதார பலம் கொண்ட நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே பயிற்சி வகுப்புகளுக்கு சென்று தேர்வடைய முடியும்.
முன்பு மருத்துவ மேற்படிப்பு படிப்பவர்களுக்கு 3 வருடம் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது கிராம அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவையில் ஈடுபட வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. ஆனால் நீட் கட்டாயத்திற்கு பிறகு இந்த சேவை அவசியமற்றதாக மாறியுள்ளதால் பல சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையிலிருந்து பயனடையும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மக்களின் இந்த சேவை பாதிக்கப்படுகிறது. இந்த சேவை சில நாட்களுக்கு பிறகு முற்றிலுமாக நிறுத்தப்படும் அபாயம் இருக்கிறது.
வசதி படைத்தவனுக்கே மருத்துவ படிப்பு என்ற நிலை பல்வேறு கோச்சிங் சென்டர்களின் விளம்பரங்கள் மூலம் அறியலாம்.