- Joined
- Dec 29, 2022
- Messages
- 842
- Points
- 133
நான் போட்ட பூமாலை
மணம் - 1
"சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து......"
ஆண்டாளின் திருப்பாவை அம்மாவின் குரலில்...
கேட்டுக் கொண்டே அதிகாலையில்
எழுந்திருந்தான் மாதவன். அன்று விடுமுறை தான். ஆனாலும் எழுந்திருக்க வேண்டிய சூழல்.
அவள் , அவனுக்கு முன்பே கூடத்தில் காத்திருந்தாள்., அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
அவளின் குழந்தை எழுந்தால், விட மாட்டாள் அவர்களை. மகளையும் அழைத்துச்செல்ல வேண்டும் என்பாள் பிறகு.
அவளை, அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான். 'அவசியம் நீ வரனுமா??'
பதில் அப்பாவிடமிருந்து வந்தது.
'உன்னைத் தனியா அனுப்ப முடியாது., அவளும் வரட்டும்.'
காஃபி மட்டும் அருந்தி விட்டு கிளம்ப வேண்டும்.
'வேண்டாம்னு சொன்னா கேக்கறதில்லை..'
அவளுக்கு திட்டிக்கோண்டே இருவரும் கிளம்பினர் ஒருவழியாக .
மார்கழிப் பனியிலும் அவனுக்கு வியர்த்தது .
காரை ஓட்டுநர் தான் ஓட்டிக் கொண்டிருந்தார்.. வழியில் காலைச் சிற்றுண்டியை முடித்திருந்தனர். அவள் நன்றாக தூங்கியும் விட்டாள் பயணத்தில்.
இவனுக்குத் தான் தூங்க முடியவில்லை. நினைவுகளில் மூழ்கினான்.
நேற்றே தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. மாதவனின் மச்சினன் தான் அழைத்திருந்தான். உடனடியாக புறப்பட்டு வரச்சொல்லியிருந்தான். போகலாமா வேண்டாமா எனக் குழப்பத்திலிருந்த மாதவனை, குடும்பத்தினர் தான் ஒருமனதாக முடிவெடுக்க வைத்தனர்.
காலத்தின் பின்னோக்கி சென்றன எண்ண அலைகள் ...
சில வருடங்களுக்கு முன்....
திருமண வரன் என்னும் வியாபார வலைதளங்களில், தரகர்களிடத்தில், அதிகம் தேடப்பட்ட அக்மார்க் மாப்பிள்ளையாக இருந்தான் மாதவன் .
கல்லூரி நாள்களிலும் சரி, அலுவலகத்திலும் சரி,
பெண்களால் நட்பாகக் கூட பழக இயலாத ஒரு இறுக்கமான படைப்பு.
சிடுமூஞ்சி Maddy என்பது தான் அவனது பட்டப்பெயராக சூட்டப்பட்டிருந்தது. ஆனாலும் ஓர் கம்பீரம் எல்லாரையும் ஈர்க்கத்தான் செய்தது.
குடும்பம் சகிதமாக பெண் பார்க்கும் வைபவமும் ஒரு நாள் நடந்தேறியது.
இப்படித்தான் பெண் வேண்டுமெனக் கேட்கவில்லை அவன். படித்திருந்தால் போதுமென்றிருந்தான்...
மணக்கும்...
By
வெண்ணிலா