- Joined
- Dec 29, 2022
- Messages
- 842
- Points
- 133
Haha. Thank youWow❤ awsum. Story ❤ so sweet ur writing skills @Vennilaa
Haha. Thank youWow❤ awsum. Story ❤ so sweet ur writing skills @Vennilaa
Based On True Story
பழக்கப்படுத்தப்படாத உடை, ஒப்பனைகள். முகத்தில் தெரிவது நாணமா, கவலையா, கனிவா எனக் கண்டுபிடிக்க முடியவில்லை
மெல்லிய கழுத்துச் சங்கிலி. அதில் ஒரு இதய வடிவ டாலர் மிகவும் சிறியதாக. காதில், மாணிக்கம் பதித்த சிறிய தோடு
Sema da epadi ipadilam think panureenga. Looking forward to next episode
❤❤❤ so cute @Vennilaa eagerly awaiting for next episode.... மாதவன் இடத்துல நம்ம இருந்தா என்ன பண்ணிட்டு irupome கர அளவுக்கு ur story went deep into my heart ❤ very nice da
நான் போட்ட பூமாலை
மணம் - 4
அடுத்த நாள் தான் அவளிடமிருந்து பதில் வருமென நினைத்து , அலைபேசி எடுத்துப் பார்க்கவில்லை . தொலைகாட்சியில் மூழ்கி விட்டான். தூங்கும் முன் பார்த்தால் 4 பதில்கள் அவளிடமிருந்து.
1. பிடித்திருந்தது.
2. உங்களுக்கு பிடித்ததா ?
3. சாப்பிட்டீங்களா
ஒரு மணி நேரம் கழித்து, (எதிர்பார்த்திருப்பாளோ)
4. இரவு வணக்கம்.
மாதவனுக்கு இதழோரம் ஒரு சிறு புன்னகை. மீண்டுமொரு முறை படித்தான்.
'நாளைக்கு அழைத்துப் பேசவா?'
என அனுப்பி விட்டு உறங்கினான்.
அடுத்த நாள் காலையில் அவளின் செய்தியில் தான் முழித்திருந்தான். அவளே முந்திக்கொண்டு அனுப்பியிருந்தாள்.
'காலை வணக்கம்'
'இன்று மாலை பேசலாமா'
'இனிய நாளாக அமையட்டும்'
ஒரு சிறு முன்னேற்றம் என எண்ணிக் கொண்டான்.
அவளிடம் பேச வேண்டியிருந்தது. அன்றைய நாள் ஏனோ ஆமை போல நகர்ந்தது. ஒரு யுகம் போல காத்திருந்தான்.
ஒரு வழியாக மாலை நேரம் வந்து சேர்ந்தது.
ஒரு சிறு பரபரப்புடன் அவளின் எண்ணிற்கு அழைத்தான். மணி அடித்து அடங்கியது. சிறிது நேரம் விட்டு, மீண்டும் அழைத்தான். அதே நிலைதான். ஒரு ஏமாற்றம். எதிர்பார்ப்புகளில் ஏமாற்றங்கள் சகஜம்தானே.
ஏதாவது வேலை இருந்திருக்கும். வண்டி ஓட்டிக்கொண்டு இருந்திருக்கலாம். அவளே அழைத்துப் பேசுவாள். தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டு அடுத்தடுத்த வேலைகளில் கவனம் செலுத்தினான்.
இரவில் ஒரு செய்தி வந்த சத்தம்.
...அவளாகத்தான் இருக்க வேண்டும். ..
...அவளே தான். ..
'மன்னிக்கவும். பேச முடியவில்லை. சூழ்நிலை அப்படி. இன்னோர் நாள் பேசலாமா.. ?' - அவள்
'ஒன்னும் பிரச்சினையில்லை. இன்னோர் நாள் பேசலாம்.'
'இனிய கனவுகள்' - இவன்
மறுபடியும் பேசுவதற்கு இவனும் முயற்சி செய்யவில்லை. அவளும் திரும்ப கேட்கவில்லை.
அடுத்த வந்த நாள்கள் வேகமாகக் கழிந்தன. பத்திரிக்கை தயாராகி வந்திருந்தது. சமையல் காரர் தேர்வு செய்வது, அலங்கார புக்கிங், புகைப்பட வீடியோ ஏற்பாடுகள் என ஆளாளுக்கு வேலைகளைப் பகிர்ந்து செய்து கொண்டிருந்தார்கள்.
மாதவன், அலுவலக ஊழியர்களுக்கு திருமணத் தகவலை உறுதிப்படுத்தினான். உடன் படித்தவர்களை வாட்சேப் குழுக்களில் தேடிப்பிடித்து அவர்களையும் அழைத்திருந்தான். அந்த வாரம் முழுக்க வாழ்த்துமழையில் நனைந்தான்.
அவ்வப்போது குறுந்தகவல்கள் அனுப்பிக் கொண்டார்கள். இரண்டு முறை மாற்றப்பட்ட அவளின் புரொஃபைல் புகைப்படத்திற்கு பாராட்டு தெரிவித்தான்.
புடவையில், சல்வாரில் பார்த்திருந்த அவளை, நவ நாகரீகமாகவும் பார்த்தான். விரித்து விடப்பட்ட, தோள்களைத் தாண்டிய கூந்தல், முழங்கை வரை மடித்து விடப்பட்ட சட்டை, கார்கோ என வேறு பரிணாமம்
இவனும் ஒருமுறை சொந்த புகைப்படம் வைத்துப் பார்த்தான். விருப்ப பொம்மை வந்தது.
பத்து நாள்களே இருந்தன கல்யாணத்திற்கு.
மாதவனின் அக்கா கணவர் விசாரித்தார் இவனிடம் தனியாக.
'எல்லாம் சரியாத்தானே போய்ட்டிருக்கு? பேசிக்கறீங்களா? எத்தனை முறை சந்திச்சீங்க? ஏதாவது மனசில் இருந்தா என்கிட்ட சொல்லு' என்றார்.
'பேசிட்டுதான் இருக்கோம். விடுமுறை எடுக்கப் போவதால் பணிச்சுமை இருவருக்குமே'
என்று சமாளித்தான். தன் மனதையும் சேர்த்து சமாளித்தான்.
மணக்கும்....
Thanks annaRomba azhaga irukku unnoda flow stay blessed Vidhu
Thank you❤❤❤ so cute @Vennilaa eagerly awaiting for next episode.... மாதவன் இடத்துல நம்ம இருந்தா என்ன பண்ணிட்டு irupome கர அளவுக்கு ur story went deep into my heart ❤ very nice da
Wow... Semmaiya ezhudhura... Appadiye andha scenario ellam Kan Munna kondu varradhuku oru Thani skill venumm... And you have it ...மணம் - 5
நான் போட்ட பூமாலை
நாளை வதுவை மணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்!!!!
- வாரணமாயிரம்
வீடே கல்யாணக் களை கட்டியிருந்தது..
நெருங்கிய உறவினர்கள் முன்பே வந்திருந்தனர்.
பந்தக்கால் நட்டு, வாழைக்குலைகள் இருபுறமும் தோரணமாக இருக்க, குத்து விளக்கு மின்னுமாறு அழகான பந்தல் வாசலை நிறைத்திருந்தது. கதவு நிலவில் மாவிலைத் தோரணம்.
வாசலில் வண்ணக் கோலம்..
நாற்காலிகள், உணவு மேஜைகள் போட்டிருந்தனர்..
விஷேசம் பிரதிபலித்தது எங்கும்.
மாதவனின் ஒரே நண்பன் ஒருவனும் வந்திருந்தான். துணை மாப்பிள்ளையாக.. பள்ளிப்பருவத் தோழன் .
சிலபல சடங்கு சம்பிரதாயங்கள் நடந்தன.
மாலையில் ஒரு சடங்கு.. மாப்பிள்ளையை அமர வைத்து, தலையில் நீர் ஊற்றி ஒரு சீர் செய்தார்கள். அப்போது, பெண்ணிற்கும் அவள் வீட்டில் அதே நேரத்திலென பேசி வைத்துக் கொண்டு செய்து கொண்டிருந்தார்கள். அவளுக்கு குளிருமே என்று இவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. அலைபேசியில் அழைத்துப் பேசலாம் என்ற யோசனையை கைவிட்டான்.
சீரியல் விளக்குகளால் வீடு பிராசித்தது
இருவரும் ஒரே ஊர்தான் என்பதால் போக்குவரத்து எளிதுதான்...மண்டபம் செல்ல வேன் ஏற்பாடு செய்திருந்தார்கள். இரவில் கல்யாண மண்டபம் செல்ல வேண்டும்..
அடம்பிடித்துக்கொண்டிருந்த சில வாண்டுகள், பழக்கவழக்கங்களை சொல்லிக்கொண்டிருந்த சில பெரியவர்கள், கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்த சில அதிகார வகை உறவினர்கள், பட்டுப்புடவைகள், மலர்களின் வாசம், அணிகலன்கள் என பெண்கள் வசீகரிக்க , சீர் தட்டுகள் சகிதமாக, புகைப்படங்கள், வீடியோ எடுத்துக்கொண்டே புறப்பட்டனர்.
முக்கால் மணி நேரத்தில் மண்டப இடத்தை அடைந்தனர்...
மாப்பிள்ளை வீட்டார் திருமண மண்டபத்தின் அருகிலிருந்த கோயிலுக்குச் சென்று காத்திருந்தார்கள். பெண் வீட்டார் வந்து அழைத்துச் சென்றனர். மாப்பிள்ளை அழைப்பு எனும் வழக்கம்.
மண்டபத்தின் முகப்பில் மாதவனுக்கு அருகில் அவளது பெயர் பெரிதாக வரையப்பட்டு பெரிய பதாகை வைத்திருந்தனர்.
இவனுக்கு கண்களில் ஒரு கண நேர மகிழ்வு.
மாதவனின் நண்பன் அவனுடன் இருந்து கொண்டான் மாப்பிள்ளை அறையில்..
இரவு உணவிற்குப் பின் முக்கிய உறவினர்கள் அமர்ந்திருக்க நிச்சயதார்த்தம் ஆரம்பமானது .
நீல வண்ணப் பட்டுப்புடவையில் அவள் வந்து கொண்டிருந்தாள். அருகில் சில பெண்களுடன் சேர்ந்து..
வந்தவள், மாப்பிள்ளை வீட்டார் கொண்டு வந்திருந்த நிச்சயதார்த்த புடவை வைத்திருந்த தாம்பாளத் தட்டை வாங்கிக் கொண்டு சென்றாள்.
அதிகம் நேரமெடுக்காமல், மாதவன் தேர்ந்தெடுத்திருந்த மயில் தோகை நிறப் புடவையில் வந்தாள். இரவிற்கு ஏற்றாற் போல கல் பதித்த அணிகலன்கள். நெற்றிச் சுட்டி மட்டும் புதியதாகச் சேர்ந்திருந்தது. மிதமான கண்களை உறுத்தாத ஒப்பனை.
பல சீர் தட்டுகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.
திருமண பத்திரிக்கை வாசிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்டது. தட்டு மாற்றிக் கொண்டார்கள். சம்பிரதாயம் அதுதானாம்.
'கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்ணு மாப்பிள்ளை சேர்ந்து நிக்கறது, எங்க காலத்தில் எங்க இருந்தது., இப்போ எல்லாமே மாறிடுச்சு'
எனும் பெரியவர்களின் ஆதங்க முனுமுனுப்புகளோடு , மாலை அணிவிக்கப்பட்டு அருகருகே அமர வைக்கப்பட்டு இருந்தனர் இவனும் அவளும். முகங்களில் சந்தன பூசல்களும், தலைகளில் அட்சதை பூக்களும் .. புகைப்படக்காரர்கள் கடமையே முக்கியமாக சில உறவினர்களை பகைத்துக் கொண்டு வேலை செய்தனர்.
நிச்சயதார்த்தம் எனும் அத்தியாயம் இனிதே முடிந்திருந்தது.
விடிந்தால் கல்யாணம் ...
மணக்கும்...
Wow... Semmaiya ezhudhura... Appadiye andha scenario ellam Kan Munna kondu varradhuku oru Thani skill venumm... And you have it ...
Apram oru doubt.. Vaaranam aayiram nu oru stanza mention pannirka? What is that
Super da.. nalla ezhuthu nadai iruku ungaluku.. 1st epi kum 5th epi kum neraya difference writing la. Arumaiமணம் - 5
நான் போட்ட பூமாலை
நாளை வதுவை மணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்!!!!
- வாரணமாயிரம்
வீடே கல்யாணக் களை கட்டியிருந்தது..
நெருங்கிய உறவினர்கள் முன்பே வந்திருந்தனர்.
பந்தக்கால் நட்டு, வாழைக்குலைகள் இருபுறமும் தோரணமாக இருக்க, குத்து விளக்கு மின்னுமாறு அழகான பந்தல் வாசலை நிறைத்திருந்தது. கதவு நிலவில் மாவிலைத் தோரணம்.
வாசலில் வண்ணக் கோலம்..
நாற்காலிகள், உணவு மேஜைகள் போட்டிருந்தனர்..
விஷேசம் பிரதிபலித்தது எங்கும்.
மாதவனின் ஒரே நண்பன் ஒருவனும் வந்திருந்தான். துணை மாப்பிள்ளையாக.. பள்ளிப்பருவத் தோழன் .
சிலபல சடங்கு சம்பிரதாயங்கள் நடந்தன.
மாலையில் ஒரு சடங்கு.. மாப்பிள்ளையை அமர வைத்து, தலையில் நீர் ஊற்றி ஒரு சீர் செய்தார்கள். அப்போது, பெண்ணிற்கும் அவள் வீட்டில் அதே நேரத்திலென பேசி வைத்துக் கொண்டு செய்து கொண்டிருந்தார்கள். அவளுக்கு குளிருமே என்று இவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. அலைபேசியில் அழைத்துப் பேசலாம் என்ற யோசனையை கைவிட்டான்.
சீரியல் விளக்குகளால் வீடு பிராசித்தது
இருவரும் ஒரே ஊர்தான் என்பதால் போக்குவரத்து எளிதுதான்...மண்டபம் செல்ல, வேன் ஏற்பாடு செய்திருந்தார்கள். இரவில் கல்யாண மண்டபம் செல்ல வேண்டும்..
அடம்பிடித்துக்கொண்டிருந்த சில வாண்டுகள், பழக்கவழக்கங்களை சொல்லிக்கொண்டிருந்த சில பெரியவர்கள், கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்த சில அதிகார வகை உறவினர்கள், பட்டுப்புடவைகள், மலர்களின் வாசம், அணிகலன்கள் என பெண்கள் வசீகரிக்க , சீர் தட்டுகள் சகிதமாக, புகைப்படங்கள், வீடியோ எடுத்துக்கொண்டே புறப்பட்டனர்.
முக்கால் மணி நேரத்தில் மண்டப இடத்தை அடைந்தனர்...
மாப்பிள்ளை வீட்டார் திருமண மண்டபத்தின் அருகிலிருந்த கோயிலுக்குச் சென்று காத்திருந்தார்கள். பெண் வீட்டார் வந்து அழைத்துச் சென்றனர். மாப்பிள்ளை அழைப்பு எனும் வழக்கம்.
மண்டபத்தின் முகப்பில் மாதவனுக்கு அருகில் அவளது பெயர் பெரிதாக வரையப்பட்டு பெரிய பதாகை வைத்திருந்தனர்.
இவனுக்கு கண்களில் ஒரு கண நேர மகிழ்வு.
மாதவனின் நண்பன் அவனுடன் இருந்து கொண்டான் மாப்பிள்ளை அறையில்..
இரவு உணவிற்குப் பின் முக்கிய உறவினர்கள் அமர்ந்திருக்க நிச்சயதார்த்தம் ஆரம்பமானது .
நீல வண்ணப் பட்டுப்புடவையில் அவள் வந்து கொண்டிருந்தாள். அருகில் சில பெண்களுடன் சேர்ந்து..
வந்தவள், மாப்பிள்ளை வீட்டார் கொண்டு வந்திருந்த நிச்சயதார்த்த புடவை வைத்திருந்த தாம்பாளத் தட்டை வாங்கிக் கொண்டு சென்றாள்.
அதிகம் நேரமெடுக்காமல், மாதவன் தேர்ந்தெடுத்திருந்த மயில் தோகை நிறப் புடவையில் வந்தாள். இரவிற்கு ஏற்றாற் போல கல் பதித்த அணிகலன்கள். நெற்றிச் சுட்டி மட்டும் புதியதாகச் சேர்ந்திருந்தது. மிதமான, கண்களை உறுத்தாத ஒப்பனை.
பல சீர் தட்டுகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.
திருமண பத்திரிக்கை வாசிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்டது. தட்டு மாற்றிக் கொண்டார்கள். சம்பிரதாயம் அதுதானாம்.
'கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்ணு மாப்பிள்ளை சேர்ந்து நிக்கறது, எங்க காலத்தில் எங்க இருந்தது., இப்போ எல்லாமே மாறிடுச்சு'
எனும் பெரியவர்களின் ஆதங்க முனுமுனுப்புகளோடு , மாலை அணிவிக்கப்பட்டு அருகருகே அமர வைக்கப்பட்டு இருந்தனர் இவனும் அவளும். முகங்களில் சந்தன பூசல்களும், தலைகளில் அட்சதை பூக்களும் .. புகைப்படக்காரர்கள் கடமையே முக்கியமாக சில உறவினர்களை பகைத்துக் கொண்டு வேலை செய்தனர்.
நிச்சயதார்த்தம் எனும் அத்தியாயம் இனிதே முடிந்திருந்தது.
விடிந்தால் கல்யாணம் ...
மணக்கும்...
Thanks dearSuper da.. nalla ezhuthu nadai iruku ungaluku.. 1st epi kum 5th epi kum neraya difference writing la. Arumai
நாடகம் பாக்கற மாறியே இருக்கு da ❤ awsum @Vennilaa white moon ❤ next day ❤மாதவனுக்கு கல்யாணம்❤..... Awaiting for that.... Very interesting part....மணம் - 5
நான் போட்ட பூமாலை
நாளை வதுவை மணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்!!!!
- வாரணமாயிரம்
வீடே கல்யாணக் களை கட்டியிருந்தது..
நெருங்கிய உறவினர்கள் முன்பே வந்திருந்தனர்.
பந்தக்கால் நட்டு, வாழைக்குலைகள் இருபுறமும் தோரணமாக இருக்க, குத்து விளக்கு மின்னுமாறு அழகான பந்தல் வாசலை நிறைத்திருந்தது. கதவு நிலவில் மாவிலைத் தோரணம்.
வாசலில் வண்ணக் கோலம்..
நாற்காலிகள், உணவு மேஜைகள் போட்டிருந்தனர்..
விஷேசம் பிரதிபலித்தது எங்கும்.
மாதவனின் ஒரே நண்பன் ஒருவனும் வந்திருந்தான். துணை மாப்பிள்ளையாக.. பள்ளிப்பருவத் தோழன் .
சிலபல சடங்கு சம்பிரதாயங்கள் நடந்தன.
மாலையில் ஒரு சடங்கு.. மாப்பிள்ளையை அமர வைத்து, தலையில் நீர் ஊற்றி ஒரு சீர் செய்தார்கள். அப்போது, பெண்ணிற்கும் அவள் வீட்டில் அதே நேரத்திலென பேசி வைத்துக் கொண்டு செய்து கொண்டிருந்தார்கள். அவளுக்கு குளிருமே என்று இவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. அலைபேசியில் அழைத்துப் பேசலாம் என்ற யோசனையை கைவிட்டான்.
சீரியல் விளக்குகளால் வீடு பிராசித்தது
இருவரும் ஒரே ஊர்தான் என்பதால் போக்குவரத்து எளிதுதான்...மண்டபம் செல்ல, வேன் ஏற்பாடு செய்திருந்தார்கள். இரவில் கல்யாண மண்டபம் செல்ல வேண்டும்..
அடம்பிடித்துக்கொண்டிருந்த சில வாண்டுகள், பழக்கவழக்கங்களை சொல்லிக்கொண்டிருந்த சில பெரியவர்கள், கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்த சில அதிகார வகை உறவினர்கள், பட்டுப்புடவைகள், மலர்களின் வாசம், அணிகலன்கள் என பெண்கள் வசீகரிக்க , சீர் தட்டுகள் சகிதமாக, புகைப்படங்கள், வீடியோ எடுத்துக்கொண்டே புறப்பட்டனர்.
முக்கால் மணி நேரத்தில் மண்டப இடத்தை அடைந்தனர்...
மாப்பிள்ளை வீட்டார் திருமண மண்டபத்தின் அருகிலிருந்த கோயிலுக்குச் சென்று காத்திருந்தார்கள். பெண் வீட்டார் வந்து அழைத்துச் சென்றனர். மாப்பிள்ளை அழைப்பு எனும் வழக்கம்.
மண்டபத்தின் முகப்பில் மாதவனுக்கு அருகில் அவளது பெயர் பெரிதாக வரையப்பட்டு பெரிய பதாகை வைத்திருந்தனர்.
இவனுக்கு கண்களில் ஒரு கண நேர மகிழ்வு.
மாதவனின் நண்பன் அவனுடன் இருந்து கொண்டான் மாப்பிள்ளை அறையில்..
இரவு உணவிற்குப் பின் முக்கிய உறவினர்கள் அமர்ந்திருக்க நிச்சயதார்த்தம் ஆரம்பமானது .
நீல வண்ணப் பட்டுப்புடவையில் அவள் வந்து கொண்டிருந்தாள். அருகில் சில பெண்களுடன் சேர்ந்து..
வந்தவள், மாப்பிள்ளை வீட்டார் கொண்டு வந்திருந்த நிச்சயதார்த்த புடவை வைத்திருந்த தாம்பாளத் தட்டை வாங்கிக் கொண்டு சென்றாள்.
அதிகம் நேரமெடுக்காமல், மாதவன் தேர்ந்தெடுத்திருந்த மயில் தோகை நிறப் புடவையில் வந்தாள். இரவிற்கு ஏற்றாற் போல கல் பதித்த அணிகலன்கள். நெற்றிச் சுட்டி மட்டும் புதியதாகச் சேர்ந்திருந்தது. மிதமான, கண்களை உறுத்தாத ஒப்பனை.
பல சீர் தட்டுகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.
திருமண பத்திரிக்கை வாசிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்டது. தட்டு மாற்றிக் கொண்டார்கள். சம்பிரதாயம் அதுதானாம்.
'கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்ணு மாப்பிள்ளை சேர்ந்து நிக்கறது, எங்க காலத்தில் எங்க இருந்தது., இப்போ எல்லாமே மாறிடுச்சு'
எனும் பெரியவர்களின் ஆதங்க முனுமுனுப்புகளோடு , மாலை அணிவிக்கப்பட்டு அருகருகே அமர வைக்கப்பட்டு இருந்தனர் இவனும் அவளும். முகங்களில் சந்தன பூசல்களும், தலைகளில் அட்சதை பூக்களும் .. புகைப்படக்காரர்கள் கடமையே முக்கியமாக சில உறவினர்களை பகைத்துக் கொண்டு வேலை செய்தனர்.
நிச்சயதார்த்தம் எனும் அத்தியாயம் இனிதே முடிந்திருந்தது.
விடிந்தால் கல்யாணம் ...
மணக்கும்...
அற்புதம் ❤@Agnii
Thanks anna.
வாரணம் ஆயிரம், வைணவ ஆழ்வார் ஆண்டாள் எழுதிய பாசுரம்.
கண்ணனை(இறைவனை) மாப்பிள்ளையாக நினைத்து, திருமணத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் கனவு கண்டது போல தோழியிடம் சொல்வதாக எழுதப்பட்டிருக்கும்.
நாளைக்குத் திருமணம் என்று நாள் குறிச்சு , பாக்குமரப் பட்டைகளால் அலங்கரிச்சு, அழகான மணப் பந்தல் போட்டு அதன் கீழே அழகான மிடுக்கான, அப்டியே ஒரு ஒளிவட்டம் தெரியும், மாதவன் என்ற பெயருடைய மாப்பிள்ளை கம்பீரமாகப் புகுவது போன்று கனாக் கண்டேன் தோழி.. என்கிறாள்..
மாதவன் னா, கண்ணனின் இன்னொரு பெயர். நம்ம மாப்பிள்ளைக்கும் அதே பேர்தான்..
கல்யாணத்துக்கு முன்னாடி நாள் இந்த stanza பொருந்தும்...
Watch this song