காட்சிப்பிழை
மதியவன் மங்கி,
கதிரவன் மலர்ந்து,
இதயம் கவரும்,
இளஞ்சிவப்பும் மஞ்சளுமாய்
மாறிய அதிகாலை மேகம்..!
இதமாய் இளைப்பாறி,
மெதுவாய் நடந்து,
என் கால்களுக்குப் பரிசளிக்க
தனியாய் ஒரு நடைப்பயணம்..!
பட்டும் படாமல் பாதங்களில்
உதை பட்ட குட்டி கற்கள்,
உருண்டோடிய திசையில்
உடனே பயணித்த கண்கள்..!
கற்கள் முட்டி நின்ற
முற்றத்தின் முன்னே,
முடிந்தும் முடியாத குழலுடன்
சோம்பல் முறித்தவள், அவள்..!
சிலையா?! காட்சிப்பிழையா?!!
நன்றிகளுடன்,
அகமகிழன்