உதிரம் குறைந்து... தானே வரணும்காதலில் மட்டும் சுகத்தை கண்டாயே!!
கணக்கு புத்தகம்
உன் கண்ணில் விழவில்லையா!!
கடல் அலையும் நீயே!!
காட்டு தீயும் நீயே!!
கன்னி வெடியே
கணவனை மட்டும்
ஏன் ? கட்டி கொள்கிறாய்!! கண்ணைத்திறந்து பார் ...
உத்திரம் குறைந்து...
உடல் மெலிந்தே போனாலும்..
உன்னோடு நான் வருவேன் கல்லறைக்குளே ...
இப்படிக்கு
'கல்வி'
விஜயதசமி நல்வாழ்த்துக்கள்
Typing errorஉதிரம் குறைந்து... தானே வரணும்
”உதிரம்”- இரத்தம், குருதி
மன்னிக்க வேண்டுகிறேன்Typing error
இறுதி வரை வெல்வோம்...
வீழ்ச்சியோ வறட்சியோ
வெல்லலாம்
அறிவின் துணை கொண்டு...
விதியோ சதியோ
மாற்றலாம்
மதியின் பலம் கொண்டு...
வீழ்ந்தாலும்
மீண்டு எழு
சிலந்தி பூச்சியாக...
வறண்ட பூமி
உயிர்த்து எழும்
வயல் வெளியாக...
வார்த்தையின்றி வழிந்தோடியதுஏக்கம்,
மனதிலே ஏக்கமே,
மகிழ்ச்சியில் சிறு தாக்கமே,
விடை இல்லா கேள்விகளும்,
விளக்கமில்லா பதில்களும்
காரணமின்றி தவிப்புகளும்,
காத்துகிடக்கும் ஆசைகளும்,
கலங்கி நிற்கும் கண்ணீர்களில்,
வார்த்தையின்றி வழிந்தோடுகிறது......