வேண்டும்....
....
....
....
....
வேண்டும் - வேண்டும் நித்தமும் வேண்டும்....
நித்திரை இல்லா சித்ரா பௌர்ணமி வேண்டும்....
மனவலிகள் இல்லா ஊடல்கள் வேண்டும்....
துயரங்கள் இல்லா இன்னல்கள் வேண்டும்....
வார்த்தைகள் இல்லா மொழிகள் வேண்டும்....
கள்ளமில்லா உள்ளம் வேண்டும்....
பொய்மை இல்லா மெய்மை வேண்டும்....
தன்னலமில்லா நெஞ்சம் வேண்டும்....
வேஷம் இல்லா பாசம் வேண்டும்....
நெருடல் இல்லா புரிதல் வேண்டும்....
சந்தேகம் இல்லா பயணம் வேண்டும்....
தூரம் பார்க்கா ஓரம் வேண்டும்....
இன்னும்... வேண்டும்... இன்னும் வேண்டும்....
படைகள் இல்லா கொடைகள் வேண்டும்....
பகைமை இல்லா நட்பு வேண்டும்....
வஞ்சம் இல்லா நெஞ்சம் வேண்டும்....
லஞ்சம் இல்லா சுமுதாயம் வேண்டும்....
தொற்றுதல் இல்லா பற்றுதல் வேண்டும்....
கண்கள் இமைக்கா அவளை காண வேண்டும்....
நினைவுகள் மாறா நினைப்புகள் வேண்டும்....
இன்னும்... வேண்டும்... இன்னும்... வேண்டும்.....
பசியே இல்லா உலகம் வேண்டும்....
தரிசல் காட்டில் கரிசல் வேண்டும்....
நெரிசல் இல்லா வரிசை வேண்டும்....
இதுவே, போதும் என்ற பக்குவம் வேண்டும்....
வளர்ந்த காளையருக்கு மணமுடிக்க பெண்டீர் வேண்டும்....
குழலிசை யாழிசை போல் இசைக்க மழலை செல்வம் வேண்டும்....
நேர்மையை பாராட்டும் தர்மம் வேண்டும்....
காதில் தேன் பாயும் இன்னிசைகள் வேண்டும்....
என்றுமே மாறாத அன்பு வேண்டும்....
இத்தனையும், வேண்டுமென கேட்டேனே - அவளிடம், மன நெகிழ்வுடன் சிலையாய் நின்றாளே அவ்விடத்தில்...!!! ❤
என் இனிய தனிமையே....என் இனிய தனிமையே...
வாழ்வின் போக்கில்
வந்த உறவெல்லாம்
வழிமாறி நமை நீங்கினாலும்
என்றும் என்உடன் இருக்கும்
என் இனிய தனிமையே.....
உன்னைச் சேரும் வரம்?என் உயிரே பிரியமாட்டாய்
என்று நினைத்தேன் ஆனால் பிரிந்தாய் -என் அன்பே
உன்னை சேரும் எப்போது
தருவாய்!
உன்னை சேரும் நாள்உன்னைச் சேரும் வரம்?
வார்த்தையை முழுமையாக முடிக்க!!! @Eraser
Lol wrong postவார்த்தையை முழுமையாக முடிக்க!!! @Eraser